யாழில் நடந்த பயங்கரம் தெய்வாதீனமாக உயிர் தப்பிய மக்கள்

செவ்வாய், 22 மே, 2018

யாழ்ப்பாணத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் ஒன்று தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதி ஊடாக பயணித்த ரயிலில் மோதுண்டு பல உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை 
தவிர்க்கப்பட்டுள்ளது.
ரயில் கடவை மூடப்படாத நிலையில் பயணித்த ரயில் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று மதிய வேளையில் அந்தப் பகுதியால் சென்ற ரயில், ஒலிகளை எழுப்பாத நிலையில் பயணித்துள்ளது.
இதன் போது பாடசாலை நிறைவடைந்து பிள்ளைகளுடன் பெற்றோர் சென்று கொண்டிருந்தனர். ரயில் கடவையைக் கடந்தபோது ரயில் வந்து கொண்டிருந்தது.
ரயில் பாதுகாப்பு கடவை போடப்படவில்லை. அதனால் ரயில் வரவில்லை என்று கருதி, அந்தப் பகுதியை கடந்து சென்றுள்ளனர். எனினும் திடீரென வந்த ரயிலை கண்ட மக்கள் பல பகுதி சிதறி ஓடியுள்ளனர்.
இதன் காரணமாக தனது பாடசாலைக்கு வந்த பிள்ளையை கூட்டிச் சென்றவர் கடவைக்கு அருகில் வீழ்ந்துள்ளார். பலர் உயிர் தப்பியுள்ளனர்.
இதேவேளை தமது சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் அதில் கடமையில் இருந்தார். பணி பகிஷ்கரிப்பு காரணமாக அவர் அதில் தற்போது கடமையில் இருப்பதில்லை என கடவைக் காப்பாளர் சங்கத் தலைவர் 
றொகான் தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக