புளியங்குளத்தில் கடுகதி புகையிரதத்தில் மோதி மாடுகள் உயிரிழந்துள்ளன

புதன், 2 மே, 2018

காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் வைத்து கூட்டமாக சென்ற மாடுகள் மோதியதில் 08 மாடுகள் உயிரிழந்துள்ளன.
புகையிரத குறுக்கு வீதியால் மாறும் போதே இந்த மாடுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்​தின் காரணமாக புகையிரதம் நிறுத்தப்பட்டு பிரதேசவாசிகளின் உதவியுடன் மாடுகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக புகையிரதம் சென்றுள்ளது.
பிரதேசவாசிகளால் மாடுகளின் உரிமையாளரிடம் உயிரிழந்த மாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக