தனியார் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும்

சனி, 12 மே, 2018


பேருந்து கட்டணங்கள் தொடர்பில் இன்றைய தினம் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.¨
கொழும்பு பத்திரிகையொன்று டீசல் விலையேற்றம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

டீசல் விலையேற்றத்திற்கு அமைய பேருந்து கட்டணங்களை உயர்த்துவதா இல்லையா என்பது இன்று நிர்ணயம் செய்யப்படும்.

டீசல் விலையேற்றத்திற்கு அமைய பேருந்து கட்டணங்களை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்து சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று முற்பகல் கலந்துரையாட உள்ளனர். இந்தக் கலந்துரையாடல்களின் பின்னரே கட்டண மாற்றம் பற்றி தீர்மானிக்கப்படும்.

பேருந்து கட்டணங்கள் குறித்த வருடாந்த மாற்றம் எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட உள்ளதனை கருத்திற் கொண்டு பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் இன்று தீர்மானம் செய்யப்படும் என 
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக