யாழில் பீடி மூட்டி வீசிய தீக்குச்சியினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய், 22 மே, 2018

யாழில் பீடி மூட்டிவிட்டு வீசிய தீக்குச்சியினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பீடி மூட்டிவிட்டு வீசிய தீக்குச்சி பெற்றோல் போத்தலுக்கருகே வீழ்ந்து தீ பற்றியதால் குடும்பத் தலைவர் உயிரிழந்தார்.
சம்பவம் சுழிபுரம் மேற்கில் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த மாரிமுத்து பாஸ்கரன் (வயது - 52) என்பவரே 
உயிரிழந்தார்.
கடந்த 14 ஆம் திகதி பெற்றோல் வாங்கிவந்து வீட்டுக்கு வெளியே வைத்துள்ளார். 
அன்றிரவு பீடி புகைக்க தீக்குச்சி மூலமாக பற்றி வைத்தார். பின்னர் தீக்குச்சியை வீசியபோது அது பெற்றோல் போத்தலுக்கு அருகில் வீழ்ந்து பற்றியுள்ளது.
காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காது நேற்று உயிரிழந்தார். திடிர் இறப்பு விசாரண அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார். 
விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் 
ஒப்படைக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக