வாள் முனையில் தென்மராட்சியில் கொள்ளை

புதன், 16 மே, 2018

தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளையர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தியுள்ளனர்.
தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகள், 
2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 2 கைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக