யாழ். குடாநாட்டில் இன்றும் நாளையும் மின்தடை

சனி, 12 மே, 2018

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று சனிக்கிழமை(12) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.குடாநாட்டின் தும்பளை, கற்கோவளம்,கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, புனிதநகர், மாதனை, வெளிச்ச வீடு, திகிரி, வறாத்துப்பளை ஆகிய பகுதிகளிலும்,
நாளை ஞாயிற்றுக்கிழமை(13) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். கரணவாய், பொலிகண்டி, பொலிகண்டி ஐஸ் தொழிற்சாலை, பளையின் ஒரு பகுதி, இலந்தைக்காடு,கரணவாய், எள்ளன் குளம், கொற்றாவத்தை, நெடியகாடு, அரசர் கேணி, 
கச்சாய் வெளி, தர்மகேணி, முகமாலை, இத்தாவில், எழுதுமட்டுவாள், உசன் , விடத்தற்பளை, கெற்பலி, மிருசுவில் தெற்கு, தவசிக்குளம், நாவலடி, ரோக்கியோ சீமெந்துக் கம்பனி(லங்கா), மிருசுவில் பி. எல்.சி, மிருசுவில் இராணுவ முகாம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக