யாழில் புத்தூர் - சுன்னாகம் வீதி இரண்டு நாட்கள் மூடப்படும்

வியாழன், 14 மே, 2026

யாழ் சுன்னாகம் - புத்தூர் வீதி எதிர்வரும்.16-05-2026. சனிக்கிழமை 
முதல்.17-05-2026. ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி மற்றும் பணிகள் திணைக்கள பொறியியலாளர் G.K  சதுரெனோ அறிவித்துள்ளார். 
சுன்னாகம் - புத்தூர் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவை மார்க்கத்தை அவசரமாக திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதால், மேற்படி கடவை நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி 
வரை மூடப்படும் 
அதனால் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு 
அறிவிக்கப்படுகிறது. 
மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

READ MORE - யாழில் புத்தூர் - சுன்னாகம் வீதி இரண்டு நாட்கள் மூடப்படும்

நீங்கள் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடித்தால் என்ன பயன் தெரியுமா

வியாழன், 23 ஏப்ரல், 2026

நீங்கள் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடித்ததால் என்ன நடக்கும் என்று இந்த பதிவில் காணலாம். பொதுவாகவே டீ என்பது அனைவராலும்
 விரும்படக்கூடிய ஒன்று. 
 இதற்கு ஒரு தனி முக்கியத்துவம் உள்ளது. 
சிலர் காலை எழுந்ததும் டீ குடித்துவிட்டு தான் நாளை தொடங்குவார்கள்,வேறு சிலர் காலை,மதியம்,இரவு என்று மூன்று வேலையும் டீ குடிப்பது 
பழக்கமாக உள்ளனர்.
ஆனால் டீ அளவுக்கு அதிகமாக குடித்தரால் உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும்.அது தெரிந்தும் பலர் அதை தம் உணவாகவே மாற்றி விடுகிறார்கள்,காலையில் எழுந்ததும் டீயை குடிக்காமல் 
சிலரால் இருக்க முடியாது.
நம்மில் அநேகர் காலையில் டீ குடித்துவிட்டு தண்ணீர் குடிக்கிறோம்,பலர் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கிறார்கள்.
ஆனால் ஆயுர்வேதம்படி தண்ணீரை டீ அருந்துவதற்கு முன் குடிப்பது நல்லது என கூறப்படுகிறது.இதனால் நமக்கு பல நன்மைகள் 
கிடைக்கிறது.
நாம் டீ குடிப்பதற்கு ஒரு 10-15 நிமிடங்கள் முன் நாம் தண்ணீர் குடித்தால் டீயில் உள்ள அமிலத்தன்மையை பாதுகாக்க ஒரு படலம் நம் வயிற்றில் உருவாகிறது.இது நமக்கு நெஞ்செரிச்சலை தடுக்கிறது.
தண்ணீர் குடிப்பது நம் பற்களையும் பாதுகாக்கிறது.டீயில் டானின் உள்ளதால் இது நம் பற்களை எளிதில் கறையாக்கிறது.ஆனால் நாம் தண்ணீர் குடிப்பதால் நம் பற்களில் நீர் படலம் உருவாகி பற்களை கறையாக்குவரை தடுக்கிறது.
மேலும் தண்ணீர் குடிப்பதால் நமக்கு உடலில் உள்ள நீரின் அளவு சமமாக இருக்க உதவுகிறது.
நம்மில் பலர் டீ குடித்தவுடனே தண்ணீர் குடிப்பபோம் ஆனால் இது நமக்கு தீங்கை விளைவிக்கும்.ஏனென்றால் நாம் டீயை சூடாக குடித்து பின் உடனே தண்ணீர் குடித்தால் இரண்டின் வெப்பநிலைகளும் சேர்ந்து நம் பற்களின் மேலுள்ள எனாமலை பாதிக்கும்,இதனால் நமக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்தும்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

READ MORE - நீங்கள் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடித்தால் என்ன பயன் தெரியுமா

நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டில் மதுபானக்கடைகள் பூட்டு

புதன், 8 ஏப்ரல், 2026

இலங்கையில்  தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என மதுவரி ஆணையாளர் நாயகம்
 தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனுமதியுடன், மதுபான விற்பனை நிலையங்கள், மதுபானக் கூடங்கள், உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட உரிமம் பெற்ற அனைத்து இடங்களிலும் இந்த 2 நாட்களும் மதுபான விற்பனை இடைநிறுத்தப்படும்.
விடுமுறை காலப்பகுதியில் மதுவரி சட்டங்களை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் உரிமதாரர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் 
எச்சரித்துள்ளார்.
சட்டவிரோத மதுபான விற்பனை அல்லது கடத்தல்கள் தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியுமென குறிப்பிட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


READ MORE - நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டில் மதுபானக்கடைகள் பூட்டு