சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

புதன், 29 நவம்பர், 2023

 சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 35 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  
இதன்படி, விசா இன்றி குவைத்துக்கு வேலைக்குச் சென்று தங்கியிருந்த 33 வீட்டுப் பணியாளர்களுடன் மேலும் இரு பணியாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து குறித்த குழுவினர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

நாட்டில் கிளிநொச்சியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீனை பதப்படுத்தும் பயிற்சி

செவ்வாய், 28 நவம்பர், 2023

கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு பகுதி மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மீனவ பெண்களுக்கு மழைக்காலங்களில் மீனை ஜாடி மூலம் பதப்படுத்தி நீண்ட காலம் பயன் படுத்தும் செயல் திட்ட பயிற்சி  இன்று (28) வழங்கப்பட்டுள்ளது.  

மழைக்காலங்களில் மீன்களின் விலை குறைவடைந்து காணப்படுவதோடு மீனை கருவாடு மற்றும் ஏனைய முறைகளில் பதனிட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் தமது வீட்டுத் தேவைக்காக கூட மீனை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது.  
இந்த நிலையில் மீனை எவ்வித இரசாயன பதார்த்தங்களும் பயன்படுத்தாது 'ஜாடி' முறையில் பதப்படுத்தும் பயிற்சி இன்றைய தினம் (28) வழங்கி வைக்கப்பட்டது.  

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) ஏற்பாட்டில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு இரணைமாதா நகர் மீனவ கூட்டுறவு சங்க கட்டிடத்தில் குறித்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது. 

இதன் போது இரணைமாதா நகர், அன்பு புரம், முழங்காவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 35 மீனவ பெண்கள் கலந்து கொண்டு குறித்த பயிற்சியை நிறைவு செய்தனர்.
அத்துடன்  மன்னார் மாவட்ட முன்னால் கடற்றொழில் உதவி பணிப்பாளர் ஏ.மெராண்டா கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மன்னார் மாவட்ட பிரதி பணிப்பாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.  

குறித்த பயிற்சியின் போது மீன்களை கொள்வனவு செய்து சுத்தப்படுத்தி எவ்வித ரசாயன பொருட்களும் இன்றி உப்பு மற்றும் கொருக்கா புளி ஆகியவற்றை மாத்திரம் பயன்படுத்தி 'ஜாடி' முறையில் மீன்களை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவது மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற செய்முறை பயிற்சியும் வழங்கப் பட்டமை.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கிளிநொச்சியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீனை பதப்படுத்தும் பயிற்சி

இந்தப்பகுதியில் வாழும் மக்கள் கனடாவில் அதிக கோபப்படுபவர்களாக காணப்படுகின்றனர்

திங்கள், 27 நவம்பர், 2023

கனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கனடியன் ரிசர்ச் இன்சையிட் கவுன்ஸில் என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் 
தெரியவந்துள்ளது.
 வீடமைப்பு, பணவீக்கம் மற்றும் அரசியல் போன்ற விடயங்களில் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிக
 கோபமான மக்கள்
 வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
 இரண்டாவது அதிக கோபமான மக்கள் வாழும் பகுதியாக ஒன்றாரியோ மாகாணம் கருதப்படுகின்றது. அட்லாண்ட்டிக் கனடா அடுத்த நிலையை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இந்தப்பகுதியில் வாழும் மக்கள் கனடாவில் அதிக கோபப்படுபவர்களாக காணப்படுகின்றனர்

நாட்டில் அதிக நுளம்பு பெருகும் மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

ஞாயிறு, 26 நவம்பர், 2023

நாட்டில் அதிகம் நுளம்பு பெருகும் இடங்களாக மேல்,  தென்,  மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.  
இந்த வருடத்தில் இதுவரை 74,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன
 தெரிவித்துள்ளார்.  
டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டம் குறித்தும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அதிக நுளம்பு பெருகும் மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது

சனி, 25 நவம்பர், 2023

வெளிநாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தரகர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட விசாக்களை பயன்படுத்தி ஒஸ்ரியா செல்ல முயன்ற இரு இளைஞர்களே இவ்வாறு கைது
 செய்யப்பட்டுள்ளனர்.  
குறித்த இரு இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொரளை 
பிரதேசத்தில் 
உள்ள தரகர் ஒருவர் அவர்கள் தொடர்பான ஆவணங்களை தயாரித்துள்ளதாகவும் விசாரணையின் போது 
தெரியவந்துள்ளது.
துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 731 இல் அவர்கள் புறப்பட வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது

நாட்டில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

வெள்ளி, 24 நவம்பர், 2023

நாட்டில் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்
இதேவேளை இந்த நாட்களில் பரீட்சை பெறுபேறுகளை கணனிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொதுப் பரீட்சை பெறுபேறுகளை 
இன்னும் இரண்டு நாட்களில் வெளியிட முடியும் என அண்மையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமையும் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

வதிரி அரசடிப் பகுதியில் உள்ள, பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றில், திருட்டு

வியாழன், 23 நவம்பர், 2023

யாழ் வதிரி அரசடிப் பகுதியில் உள்ள, பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றில், கூரை பிரித்து திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, 
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
 செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு, இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குரிய கிளையை, நேற்று மாலை மூடிவிட்டு சென்ற கிளை முகாமையாளர், இன்று காலை, கிளையை திறக்க சென்ற போது, கூரை உடைக்கப்பட்டு திருட்டு மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, நெல்லியடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







READ MORE - வதிரி அரசடிப் பகுதியில் உள்ள, பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றில், திருட்டு