நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

வெள்ளி, 2 ஜூன், 2023

ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் மீண்டும் குறைத்துள்ளது.
அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது..

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு

வியாழன், 1 ஜூன், 2023

இலங்கையில் தற்போது 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த விடயத்தில் அரசு சிறப்பு 
கவனம் செலுத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் நாட்டில் சுமார் 200 பொருட்களுக்கு 
தட்டுப்பாடு இருந்தது.
தற்போது அது 111 ஆகக் குறைந்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது 70 ஆகக் குறையும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை 
வெளியிட்டுள்ளார்.
ஒளடதங்களை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரம்புக்வெல்ல, கடந்த ஆண்டை விட பொருளாதார நிலை வலுவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும் நிதியை விடுவிப்பதில் பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு

இந்தியாவின் திருநெல்வேலியில் மிளகாய்ப்பொடி துாவி 1.5கோடி ரூபா பணம் கொள்ளை

புதன், 31 மே, 2023

இந்தியாவின் திருநெல்வேலியில் நகைக்கடை உரமையளாரின் மகனிடமிருந்து 30-05-2023.அன்று  காலை 8 பேர் அடங்கிய திருட்டுக்கும்பல் ஒன்று காரில் வந்து அவரிடமிருந்து 1.5 கோடி ரூபாயை மிளகாய்ப் பொடி துாவி, தாக்கி எடுத்துச் சென்றுள்ளது.
உரிமையாளரின் மகன் வழக்கம் போல் காரில் தனது நகைக்கடைக்கு செல்கையில் அவரைப் பின்தொடர்ந்த கொள்ளையர் காரில் வந்த அவரையும் அவருடைய சகவாளையும் தமது காரினால் மோதி, பின்னர் 
தாக்கியவிட்டு பணத்தை கொள்ளையிட்டு வேகமாக 
சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நான்கு தனிப்படை கொண்ட பொலிஸ் இதனை விசாரித்துவருகிறது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>









READ MORE - இந்தியாவின் திருநெல்வேலியில் மிளகாய்ப்பொடி துாவி 1.5கோடி ரூபா பணம் கொள்ளை

கண்டி வைத்தியசாலையில் இருதய நோயாளர்கள் பிரிவின் இயந்திரம் முற்றாக செயலிழந்துள்ளன

செவ்வாய், 30 மே, 2023

கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் பிரிவின் இயந்திரம் முற்றாக செயலிழந்ததன் காரணமாக இருதய நோயாளர்களின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 கண்டி தேசிய வைத்தியசாலையில் இவ்வாறான இரண்டு இயந்திரங்கள் உள்ளதாகவும் மற்றைய இயந்திரமும் அடுத்த சில தினங்களில் பழுதடையும் அபாயம் உள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
 இந்த ஆபத்தான சூழ்நிலையால், ஆஞ்சியோகிராம் 
பரிசோதனைகள் (இதயத்திற்கு ரத்தம் வழங்கும் கரோனரி தமனிகளில் அடைப்பு கண்டறிதல், ஸ்டென்டிங் சிகிச்சைகள், இதயத்தில்
 ஓட்டைகளைக் கண்டறிதல், இதய வால்வுகளில் 
குறைபாடுகளைக் கண்டறிதல்) முற்றிலுமாக சரிந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. 
 கண்டி தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்து புதிய இயந்திரத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என சுகாதார வல்லுநர்கள் அறிஞர் சங்கத்தின் உறுப்பினர் திரு.சானக தர்மவிக்ரம
 தெரிவித்தார். 
இந்த இயந்திரத்தின் பராமரிப்புக்காக 26 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், உரிய இயந்திரம் பேணப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சுகாதார வல்லுநர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - கண்டி வைத்தியசாலையில் இருதய நோயாளர்கள் பிரிவின் இயந்திரம் முற்றாக செயலிழந்துள்ளன

இலங்கை சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம்

திங்கள், 29 மே, 2023

இலங்கை சர்வதேச சந்தையில் முனைப்புடன் ஈடுபடாததால் தான் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 கடன்களை திருப்பிச் செலுத்துதல், பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் வெளிநாட்டு இருப்புகளை அதிகரிப்பதற்கான மத்திய வங்கியின் முயற்சிகள் போன்ற முக்கிய மூன்று காரணிகளுக்காக தான் இலங்கைக்கு டொலர் தேவைப்படுகிறது என பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட 
போது அவர் தெரிவித்தார்.
 டொலரின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது இலங்கையின் பொருளாதாரம் மேலும் சுருங்குவதற்கு வழிவகுக்கும் எனவும், இதன் காரணமாக பொதுமக்களின் துன்பங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் எனவும் 
அவர் சுட்டிக்காட்டினார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இலங்கை சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம்

நாட்டில் கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது

ஞாயிறு, 28 மே, 2023


கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டு வந்ததையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் 
உறுதியளித்தார்.
இக்கலந்துறையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் , விமானப் போக்குவரத்து பணிப்பாளர், சுற்றுலா பணியகம், விமானப்படை, Cinnamon Air,Fits Air மற்றும் ஏனைய தனியார் சேவையாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் cinnamon Air தனது விமானச் சேவையை ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிப்பதாக உறுதியளித்தது. அதை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை அளிப்பதாக தெரிவித்தது.
.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது

நாட்டில் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

சனி, 27 மே, 2023

பாடசாலை சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 இவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டார்.
 திவுலபிட்டிய, மில்லகஹவத்த மற்றும் பின்னலந்த வத்த பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் 
வைக்கப்பட்டுள்ளனர்.
 சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் சமூக நோய்கள் மற்றும் மனநோய்களுக்கான வைத்தியசாலையில் சமர்ப்பித்து வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.
 பாதிக்கப்பட்ட 6 வயதுடைய சிறுவனின் தாய் அவரைக் கைவிட்டுச் சென்றதாகவும், அவனது தந்தை தீவிர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
 பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் ஆண் குழந்தை, குழந்தையின் தந்தையின் நண்பர்கள் இருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில்