கொழும்பு 900 சுற்றுலா பயணிகளுடன் பிரம்மாண்ட சொகுசு கப்பல் வந்தடைந்துள்ளது

சனி, 25 மார்ச், 2023

வைக்கிங் நெப்டியூன் (viking neptune) என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்றைய தினம் (25) கொழும்பு துறைமுகத்தை 
வந்தடைந்துள்ளது.
900 சுற்றுலாப் பயணிகளுடன் இந்த சொகுசு கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இக்கப்பலில் 400 ஊழியர்கள் சேவையாற்றுகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கொழும்பு 900 சுற்றுலா பயணிகளுடன் பிரம்மாண்ட சொகுசு கப்பல் வந்தடைந்துள்ளது

நீங்கள் பயன்படுத்தும் கழிப்பறைக் காகிதத்தால் ஏற்படும் ஆபத்து: எச்சரிக்கை

வெள்ளி, 24 மார்ச், 2023

 

ஐரோப்பிய மக்கள் உட்பட வெளிநாட்டவர் அதிகமான பயன்படுத்தும்  கழிப்பறைக் காகிதத்தால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கழிவு நீரிலும் மண்ணிலும் இந்த செயற்கை இரசாயனப் பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளன
இவ்வாறு நிலைத்திருக்க கூடிய இரசாயனப் பதார்த்தங்களைச் (Forever chemicals or PFAS) சுற்றுச் சூழலில் சேர்க்கின்ற மற்றொரு மனிதபாவனைப் பொருளை அறிவியலாளர்கள் அண்மையில் அடையாளம் 
கண்டுள்ளனர்.
அதுதான் கழிப்பறைக் காகிதம் (toilet paper) சுற்றுச் சூழல் அறிவியலாளர்கள் கழிவு நீர்ச் சுத்திகரிப்பு மையங்களில் பெறப்பட்ட நீரின் மாதிரிகளைச் சோதனை செய்துபார்த்ததில் அந்த நீரில் PFAS இரசாயனங்களின் செறிவைக் கழிப்பறைக் காகிதங்களே ஏற்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சிக்காக ஜெர்மனி, வட அமெரிக்கா, லத்தீன் 
அமெரிக்கா, ஆபிரிக்கா. மேற்கு ஐரோப்பாப் பகுதிகளில் 
விற்பனையாகின்ற கழிப்பறைக் காகிதங்கள் பெறப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட நீரின் மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மீள் சுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய கழிப்பறைக் காகிதங்கள் மரக்கூழை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
அவ்வாறு மரத்தை மரக் கூழாக மாற்றும் தொழில்நுட்ப முறைமையில் (converting wood into pulp) இந்த நிலைத்திருக்கக் கூடிய இரசாயனப் பொருள்கள் (PFAS) அதிகம் சேர்க்கப்படுகின்றன. அவை இறுதியில் கழிப்பறைக் காகிதத்துடன் தண்ணீரில் கலந்து நிலத்தையும் சூழலையும் 
சென்றடைகின்றது.
மனித குலத்துக்கு ஆபத்தான இந்தத் தகவலைச் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கடிதங்களுக்கான இதழ் (Environmental Science and Technology Letters journal) என்னும் சஞ்சிகை கடந்த புதன்க்கிழமை 
வெளியிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நீங்கள் பயன்படுத்தும் கழிப்பறைக் காகிதத்தால் ஏற்படும் ஆபத்து: எச்சரிக்கை

நீங்கள் காரசாரமான மீன் ஊறுகாய் செய்வதற்கு Fish pickle) தேவையான பொருட்கள்:

வியாழன், 23 மார்ச், 2023

தேவையான பொருட்கள்:
1 KG மீன் முள் இல்லாதது 
125 கிராம் இஞ்சி 
125 கிராம் பூண்டு 
60 கிராம் கடுகு
1 Tbsp தூள் 
1 Tbsp சர்க்கரை 
400 கிராம் வினிகர் 
2 Tbsp உப்பு 
1 1/2 Tbsp மிளகாய் தூள் 
60 கிராம் மிளகாய் வற்றல் 
35 கிராம் சீரகம் 
1/2 கிராம் கடலை எண்ணெய்
செய்முறை:
முதலில் நாம் வைத்திருக்கும் மீனை நன்றாக சுத்தம் செய்து அதில் உள்ள முட்களை நீக்கி விட்டு ஒரு அங்குல துண்டுகளாக
 வெட்டிக் கொள்ளவும்.
அதன் பின் நாம் வெட்டி வைத்திருக்கும் மீனில் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து தடவி 1 மணி நேரம் நன்கு
 ஊர வைக்கவும்.
அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நாம் ஊற வைத்த மீன் துண்டுகளை நாம் பொறித்தெடுக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவைற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் 
கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இதில் மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மீன், பிரியும் 
வரை வதக்கவும்.
பின் வதக்கிய ஊறுகாயை ஈரப்பதம் இல்லாத மற்றும் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். அவ்வளவு தான் சுவையான 
மீன் ஊறுகாய் தயார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நீங்கள் காரசாரமான மீன் ஊறுகாய் செய்வதற்கு Fish pickle) தேவையான பொருட்கள்:

கெஸ்பேவ நீதவான் முட்டை வியாபாரிகளுக்கு 12 இலட்சம் அபராதம் விதிப்பு

புதன், 22 மார்ச், 2023

இலங்கையில்  கட்டுப்பாட்டு விலையக் கருத்திற்கொள்ளாமல், முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கே இவ்வாறு , 12 இலட்சம் ரூபாய் அபராதத்தை விதிக்க விதிக்க நீதிமன்றம்
 உத்தரவிட்டுள்ளது.
42 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள வெள்ளை முட்டையை, 52 ரூபாவுக்கு நான்கு வர்த்தகள் விற்பனை 
செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ, போகுந்தர மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்களே அதிக விலைக்கு முட்டையை விற்பனை
 செய்துள்ளனர்.
அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கெஸ்பேவ நீதவான் முட்டை வியாபாரிகளுக்கு 12 இலட்சம் அபராதம் விதிப்பு

ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல்

செவ்வாய், 21 மார்ச், 2023

கனடாவில் பறவை காய்ச்சல் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளன.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல் பதிவாகியுள்ளது.
பறவைக் காயச்சலினால் பீடிக்கப்பட்ட நீர்ப்பறவையொன்று உயிரிழந்துள்ளது.
Professor’s Lake and Duncan Valley Foster South ஆகிய பகுதிகளில் இவ்வாறு பறவை காய்ச்சலுடனான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
பறவை காய்ச்சல் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவும் சாத்தியம் மிக குறைவு என தெரிவிக்கப்படுகிறது.¨
இந்த பறவை காய்ச்சல் காரணமாக பொதுமக்களுக்கு தற்போதைக்கு அச்சுறுத்தல்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக டொரன்டோ மிருகக்காட்சி சாலையின் பறவைகள் காட்சி பிரிவு அண்மையில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


READ MORE - ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல்

நாட்டில் 90% சாரதிகளுக்கு கண் பிரச்சனைகள்: ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு விபத்து

திங்கள், 20 மார்ச், 2023

இலங்கையில் வாகன சாரதிகளில் தொண்ணூறு வீதமானோர் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட கண் பார்வை நிபுணர் நரேஷ் பிரதான் 
தெரிவித்துள்ளார்.
வாகன சாரதிகளின் பார்வை குறித்து நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி, பல சாரதிகளுக்கு தொலைநோக்கு மற்றும் கிட்டப்பார்வை, கண்புரை,குளுகோமா (கண் அழுத்தம்) போன்ற கண் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது தற்போதைய கறுப்பு வெள்ளை இலக்கத் தகடு பார்வைப் பரிசோதனை போதாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை மூலம் வாகன ஓட்டிகளின் நிறக்குருடு மற்றும் பக்க பார்வை குறைபாடுகளை கண்டறிய முடியாது என்றும், இந்த கண் குறைபாடுகளே பல போக்குவரத்து விபத்துகளுக்கு காரணம் என்றும் 
அவர் கூறினார்.
குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோன்றும் அதிக ஆபத்துள்ள குளுகோமாவால் பக்க பார்வை பலவீனம் மற்றும் நிற குருட்டுத்தன்மை ஏற்படுவதாக குறிப்பிட்ட நரேஷ் பிரதான், இந்த நோயினால் குருட்டுத்தன்மை ஏற்படும் அபாயமும் அதிகம் 
என்றும் கூறினார்.
எனவே சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது முழுமையான கண் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் வாகன விபத்துக்களை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கைகளின்படி இலங்கையில் ஒவ்வொரு பத்து வினாடிகளுக்கும் ஒரு வாகன விபத்து
 இடம்பெறுவதாகவும், நாளொன்றுக்கு பத்து மரணமான வாகன விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும் சிரேஷ்ட கண் மருத்துவ நிபுணர் 
மேலும் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் 90% சாரதிகளுக்கு கண் பிரச்சனைகள்: ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு விபத்து

நாட்டில் 3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்ப்பு

ஞாயிறு, 19 மார்ச், 2023

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரம் பாரிய ஆபத்தில் இருந்து 
தப்பியுள்ளது.
திடீரென நேற்று ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நேற்று முன்தினம் மாலை 03.30 மணியளவில் எட்டு கொள்கலன்களுடன் புறப்பட்ட புகையிரதம் நேற்று காலை 09.10 மணியளவில் வெலிக்கந்தை புகையிரதத்தில் இருந்து புறப்பட்டு 20 நிமிடத்தில் வெலிக்கந்தை புகையிரத நிலையத்திற்கும் புனானை புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரத இயந்திர பகுதியில் 
தீ பிடித்துள்ளது.
இதை புகையிரத வீதி திருத்த வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் அவதானித்ததை அடுத்து புகையிரதத்தை நிறுத்தி பாரிய விபத்தில் இருந்து பாதுகாத்துள்ளனர் என்று புகையிரத நிலைய அதிகாரி 
தெரிவித்தார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் 3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்ப்பு