விரைவில் வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் குறைந்த விலையில் கொழும்பிற்கு

வெள்ளி, 26 ஜூலை, 2024

விரைவில் வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மலிவான பழங்களை கொழும்பிற்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள நுகர்வோர் அதிக விலை கொடுதது பழங்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடமாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் விளைவிக்கப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு செல்வதில் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் போதிய 
போக்குவரத்து வசதிகள் இல்லாமை மற்றும் களஞ்சிய 
வசதிகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என்பதை
 சுட்டிக்காட்டிய ஆளுநர், 
தான் இது குறித்து போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்காக விசேட நிதி மூலமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனூடாக வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு புகையிரத நிலையங்களிலும் களஞ்சியசாலைகள் நவீனமயப்படுத்தப்பட்டு 
வடக்கின் பழங்களை கொழும்பிற்கு கொண்டு வருவதற்கான துரித அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர். உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - விரைவில் வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் குறைந்த விலையில் கொழும்பிற்கு

நாட்டில் நாளைமுதல் சில நாட்களுக்கு தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்

வியாழன், 25 ஜூலை, 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024  ஜூலை 25ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2024 ஜூலை 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் நாளைமுதல் சில நாட்களுக்கு தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்

இலங்கையில் முட்டை விலை குறித்து புதிய சர்ச்சை

புதன், 24 ஜூலை, 2024

நாட்டில்  முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை
 குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி 
செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
 "முட்டை ஒரேயடியாக 6 ரூபாய் விலை 
குறைந்துள்ளது.
 இது தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கைகளையும் பெற்று 
வருகின்றேன். தொடர்ந்து சோதனை செய்து
 வருகிறோம். 40 ரூபாய்க்கு கூட முட்டை விற்பனை செய்ய முடியாவிட்டால் இறக்குமதி செய்ய
 வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் பண்டிகை
 காலம் டிசம்பரில் தொடங்கும். கேக் தயாரிப்பாளர்கள் நிறைய முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
 இவர்களுக்கு தேவையான முட்டைகள் இல்லை என்றால், அவர்களுக்கு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும். இல்லை எனில், சரியான விலையில் முட்டைகளை வழங்கி நுகர்வோரை பாதுகாக்க வேண்டும்'' என்றார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் முட்டை விலை குறித்து புதிய சர்ச்சை

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

செவ்வாய், 23 ஜூலை, 2024

 இலங்கையில்இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் 
தெரிவித்துள்ளது.
 40 அடி கொள்கலனில் பல வகையான பொருட்களை இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சனத் மஞ்சுள 
தெரிவித்துள்ளார்.
 இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என 
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து 
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை
 என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

ஜனாதிபதி நாட்டில் எரிபொருள் விலையை மேலும் குறைக்க தீர்மானம்

திங்கள், 22 ஜூலை, 2024

நாட்டில் சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. 
சில செலவுகளை 
நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க 
வாய்ப்பு உள்ளது. வலுசக்தி விலைகளுக்கும் இதுவே 
நடைபெறுகிறது. 
சந்தை தொடர்பில் இன்னும் பல்வேறு விடயங்கள் உள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 இலங்கை நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பினால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு 
மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘இலங்கையில் உள்ள நுண், சிறு, 
நடுத்தர நிறுவனங்களின் ஆற்றலுடன் பொருளாதாரத்தை
 மீட்டெடுக்கும் தீர்மானமிக்க முயற்சி’ 
என்ற வேலைத் திட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
 இதனை குறிப்பிட்டார். நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
 கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வீழ்ச்சியுடன், சிறு வர்த்தகங்கள் உட்பட அனைத்து 
வர்த்தகங்களும் வீழ்ச்சி கண்டன. அனைத்து நுண்தொழில்துறைகளும் முற்றிலும் நட்டமடைந்தன. 
வங்கிக் கட்டமைப்பும் பாதிப்புக்குள்ளானது. எனவே, அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற பின்னர், ஸ்திரத்தன்மையை உருவாக்கி, 
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்காக செயற்படுவதே எமது 
முதல் பொறுப்பாக அமைந்தது.
 அச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்திற்கு செல்லுமாறு எமக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும் கேட்டுக்கொண்டன. அப்போது உடன்பாடு ஏற்பட்டு அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தன.
 உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்ளுடன் உடன்படிக்கையை எட்டிய பின்னர் அந்தக் கட்டமைப்புடன் செயற்படலாம் என்று தனியார் கடன் வழங்குநர்களும்  தெரிவித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - ஜனாதிபதி நாட்டில் எரிபொருள் விலையை மேலும் குறைக்க தீர்மானம்

இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

ஞாயிறு, 21 ஜூலை, 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024  ஜூலை 21ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2024 ஜூலை 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு 
வெளியிடப்பட்டது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை,
 மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான 
வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 
30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

வயதான தம்பதியினரை விமானத்திலிருந்து இறக்கிவிட்ட விமான நிறுவனம் கூறும் காரணம்

சனி, 20 ஜூலை, 2024

கனடாவில், விமான நிறுவனம் ஒன்று ஒரு இந்திய தம்பதியருக்கு விமானத்தில பயணிக்க மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் கோபமடைந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில், ரொரன்றோவிலிருந்து வான்கூவருக்கு பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்கள் போரூர் குமணன், 
கல்பனா தம்பதியர்.
விமானத்தில் ஏறுவதற்காக செல்லும்போது, அவர்கள் கையில் வைத்திருந்த அனுமதிக்கப்பட்ட அளவிலான பைகளுடன் அவர்கள் விமானத்தில் ஏற பணியாளர் ஒருவர் அனுமதி மறுத்துள்ளார்.
தங்களுக்குத் தேவையான மருந்துகளும் விலையுயர்ந்த நகைகளும் பையில் இருப்பதால், பையை சரக்குகள் வைக்கும் இடத்தில் வைக்க இயலாது என குமணன் கூற, இந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் இனி நீங்கள் ஒருபோது பயணிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் ஒரு பணியாளர்.
வேறு வழியில்லாமல், கடைசி நேரத்தில் ஃப்ளேர் விமான நிறுவன விமானம் ஒன்றில் 1,927 டொலர்கள் செலுத்தி டிக்கெட் வாங்கி 
பயணித்திருக்கிறார்கள் தம்பதியர்.
இந்த சம்பவத்தால் கோபமடைந்துள்ள குமணன், நாங்கள் என்ன குற்றவாளிகளா என்கிறார். விமான நிறுவனத்துக்கு நடந்ததை விளக்கி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள குமணன், டிக்கெட்டுக்கான தங்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கோரியுள்ளார்
வெஸ்ட்ஜெட் விமான நிறுவன செய்தித்தொடர்பாளரான ஜூலியா கெய்சரை ஊடகங்கள் இந்த புகார் தொடர்பாக தொடர்பு 
கொண்டபோது, குமணன் தம்பதியர் தங்கள் விமான நிறுவன விமானத்தில் பயணிக்க தடையேதும் விதிக்கப்படவில்லை என்று
 அவர் கூறியுள்ளார்
அத்துடன், அவர்கள் டிக்கெட்டுக்காக செலுத்திய 800 டொலர்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர்
 தெரிவித்துள்ளார்.
விமானத்தில் ஏறும்போது அந்த பயணிகள் நடந்துகொண்ட விதம் காரணமாகத்தான் அவர்கள் விமனத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஜூலியா தெரிவித்துள்ளார்.
இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலும், முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளும் பயணிகளை வெஸ்ட்ஜெட் நிறுவனம் பொறுத்துக்கொள்வதில்லை என்றும் ஜூலியா கூறியுள்ளார்.
ஆனால், கடைசி நேரத்தில் மற்றொரு விமானத்தில் பயணிக்க நேர்ந்ததால் கூடுதலாக செலவான 1,127 டொலர்கள் குறித்து அவர் எதுவும் 
கூறவில்லை.
தான் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளவில்லை என்று கூறும் குமணன், தங்கள் மருந்துகளையும் விலையுயர்ந்த நகைகளையும்
 விமானத்தில் ஏற்றவேண்டியதன் அவசியத்தை விளக்கியும் அந்தப் பணியாளர் அதை சட்டை செய்யவில்லை என்றும், ஆகவே, 
தான் அப்செட் ஆனதால் சத்தமாக பேசியதாகவும் 
தெரிவிக்கிறார்.
ஒரு ஜிப் லாக் பை கொடுத்திருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும், அல்லது அவர்கள் தனக்கு ஏதாவது ஒரு தீர்வு கூறியிருக்கலாம்
 என்கிறார் அவர்.
அவர்கள் எனக்கு முழு செலவையும் திருப்பிக் கொடுத்தாகவேண்டும் என்றும், அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்பதற்கு எனக்கு விளக்கமளிக்கவேண்டும் என்று குமணன்கூறுகிறார் .என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - வயதான தம்பதியினரை விமானத்திலிருந்து இறக்கிவிட்ட விமான நிறுவனம் கூறும் காரணம்