நீங்கள் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடித்தால் என்ன பயன் தெரியுமா

வியாழன், 23 ஏப்ரல், 2026

நீங்கள் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடித்ததால் என்ன நடக்கும் என்று இந்த பதிவில் காணலாம். பொதுவாகவே டீ என்பது அனைவராலும்
 விரும்படக்கூடிய ஒன்று. 
 இதற்கு ஒரு தனி முக்கியத்துவம் உள்ளது. 
சிலர் காலை எழுந்ததும் டீ குடித்துவிட்டு தான் நாளை தொடங்குவார்கள்,வேறு சிலர் காலை,மதியம்,இரவு என்று மூன்று வேலையும் டீ குடிப்பது 
பழக்கமாக உள்ளனர்.
ஆனால் டீ அளவுக்கு அதிகமாக குடித்தரால் உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும்.அது தெரிந்தும் பலர் அதை தம் உணவாகவே மாற்றி விடுகிறார்கள்,காலையில் எழுந்ததும் டீயை குடிக்காமல் 
சிலரால் இருக்க முடியாது.
நம்மில் அநேகர் காலையில் டீ குடித்துவிட்டு தண்ணீர் குடிக்கிறோம்,பலர் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கிறார்கள்.
ஆனால் ஆயுர்வேதம்படி தண்ணீரை டீ அருந்துவதற்கு முன் குடிப்பது நல்லது என கூறப்படுகிறது.இதனால் நமக்கு பல நன்மைகள் 
கிடைக்கிறது.
நாம் டீ குடிப்பதற்கு ஒரு 10-15 நிமிடங்கள் முன் நாம் தண்ணீர் குடித்தால் டீயில் உள்ள அமிலத்தன்மையை பாதுகாக்க ஒரு படலம் நம் வயிற்றில் உருவாகிறது.இது நமக்கு நெஞ்செரிச்சலை தடுக்கிறது.
தண்ணீர் குடிப்பது நம் பற்களையும் பாதுகாக்கிறது.டீயில் டானின் உள்ளதால் இது நம் பற்களை எளிதில் கறையாக்கிறது.ஆனால் நாம் தண்ணீர் குடிப்பதால் நம் பற்களில் நீர் படலம் உருவாகி பற்களை கறையாக்குவரை தடுக்கிறது.
மேலும் தண்ணீர் குடிப்பதால் நமக்கு உடலில் உள்ள நீரின் அளவு சமமாக இருக்க உதவுகிறது.
நம்மில் பலர் டீ குடித்தவுடனே தண்ணீர் குடிப்பபோம் ஆனால் இது நமக்கு தீங்கை விளைவிக்கும்.ஏனென்றால் நாம் டீயை சூடாக குடித்து பின் உடனே தண்ணீர் குடித்தால் இரண்டின் வெப்பநிலைகளும் சேர்ந்து நம் பற்களின் மேலுள்ள எனாமலை பாதிக்கும்,இதனால் நமக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்தும்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

READ MORE - நீங்கள் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடித்தால் என்ன பயன் தெரியுமா

நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டில் மதுபானக்கடைகள் பூட்டு

புதன், 8 ஏப்ரல், 2026

இலங்கையில்  தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என மதுவரி ஆணையாளர் நாயகம்
 தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனுமதியுடன், மதுபான விற்பனை நிலையங்கள், மதுபானக் கூடங்கள், உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட உரிமம் பெற்ற அனைத்து இடங்களிலும் இந்த 2 நாட்களும் மதுபான விற்பனை இடைநிறுத்தப்படும்.
விடுமுறை காலப்பகுதியில் மதுவரி சட்டங்களை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் உரிமதாரர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் 
எச்சரித்துள்ளார்.
சட்டவிரோத மதுபான விற்பனை அல்லது கடத்தல்கள் தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியுமென குறிப்பிட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


READ MORE - நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டில் மதுபானக்கடைகள் பூட்டு

நாட்டில் காற்றழுத்த தாழ்வு பகுதி : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியில் நிலவும் தாழ்வு நிலை காரணமாக  பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 60 மைல் வேகத்தில் காற்று
 வீசக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் 
அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவ மற்றும் கடல்வாழ் மக்களுக்கு அறிவித்துள்ளது
7.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் காற்றழுத்த தாழ்வு பகுதி : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் ஆறு மாதங்களுக்கு மின்கட்டணம் குறையாது கைவிரித்தது மின்சார சபை

சனி, 7 டிசம்பர், 2024

நாட்டில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி, மின்சார சபை முன்மொழிவுகளை
 சமர்ப்பித்துள்ளதுடன், தற்போதுள்ள மின் கட்டணத்தை
 திருத்தம் செய்யாமல் 6 மாதங்களுக்கு இதே முறையில் மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது..
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் ஆறு மாதங்களுக்கு மின்கட்டணம் குறையாது கைவிரித்தது மின்சார சபை

மீன்களின் விலை இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

வெள்ளி, 6 டிசம்பர், 2024

 மீன்களின் விலை நாட்டில் சடுதியாக உயர்ந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 பேலியகொடை மத்திய மீன் சந்தையில், ஒரு கிலோகிராம் தலபத் மீன் 2,400 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரையிலும், பரவை மீன் ஒரு 
கிலோ கிராம் 1,400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 லின்னா மீன் ஒரு கிலோகிராம் 1,000 ரூபாய் முதல் 1,100 ரூபாவுக்கும், சாலை மீன் ஒரு கிலோகிராம் 450 ரூபாய் முதல் 500 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுவதாக 
தெரிவிக்கப்படுகிறது. ஃபெங்கல் புயல் காரணமாக 
கடல்சார் ஊழியர்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தநிலையில், மீன்களின் விலைகளும் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விற்பனை செய்வதிலும் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மீன்களின் விலை இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

பப்பாசி செய்கை வவுனியாவில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு கோரி நிற்கும் விவசாயிகள்

வியாழன், 5 டிசம்பர், 2024

நாட்டில்  வவுனியா வடக்கில் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக பப்பாசி செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தமது பப்பாசி தோட்டங்களை இழந்து நிற்கதியாகியுள்ளார்கள்.
 மழை மற்றும் காற்றினால் தோட்டங்கள் பாதிக்கப்பட்டு அறுபடை செய்வதற்கு தயாரான பப்பாசிதோட்டங்கள், அறுபடை செய்யப்பட்டு கொண்டிருந்த தோட்டங்கள் முற்ராக பாதிக்கப்பட்டுள்ளது.
 இதனால் விவசாயிகள் பல லட்சம் ரூபாய்களை இழந்து மீழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
எனவே இது தொடர்பில் விவசாயத்திணைக்களம்,கமநல அபிவிருத்தி திணைக்களம், பிரதேசசெயலகம், வவுனியா மாவட்ட செயலகம், ஆகியவற்றின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், வன்னி
 மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தரவுகளைபெற்று 
தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள விவசாய அமைச்சறுக்கு தரவுகளை வழங்கி பப்பாசி செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுக்கான அரச நிதியுதவியினை பெற்றுத்தருமாறு
இழப்பீடு கோரி நிற்கும் வவுனியா வடக்குவிவசாயிகள்
என்பது  குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - பப்பாசி செய்கை வவுனியாவில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு கோரி நிற்கும் விவசாயிகள்

நாட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படலாம் ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது

புதன், 4 டிசம்பர், 2024

இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், 
அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில
 இலங்கை சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அதன் தலைவர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டார்.
 "நாம் நீண்ட கால தீர்வைக் காண வேண்டும், இல்லை என்றால், நாம் மீண்டும் இந்த நெருக்கடிக்கு செல்லலாம்.
 இந்த நெருக்கடியை ஒடுக்குவதற்கு அரிசி சந்தைப்படுத்தல் வாரியம் ஒரு முறையான திட்டத்தை தயாரிக்க வேண்டும், குறுகிய கால தீர்வாக அரசாங்கம் விரைவில் வெளி நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும். இல்லை என்றால் சந்தையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படலாம் ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது