தாயகச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாயகச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாட்டில் இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்

புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்தது வெள்ளக்காடானது.
 மக்களின் குடியிருப்புக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் செல்கின்றனர். கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு 
செல்கின்றனர்.
வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவான வெள்ள நீர் வெளிவேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்கின்றது.
மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்தது வெள்ளக்காடானது. மக்களின் குடியிருப்புக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் செல்கின்றனர்.
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும்
 திறக்கப்பட்டுள்ளது. 
இதனால் பெருமளவான வெள்ள நீர் வெளிவேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்கின்றது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்

நாட்டில் மன்னாரில் கடும் மழை பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வியாழன், 24 அக்டோபர், 2024

நாட்டில்மன்னார் மாவட்டத்தில் 23-10-2024. புதன்கிழமை அன்று இரவு முதல் 24-10-2024.இன்று வியாழன்காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில்
 மூழ்கியுள்ளன.
குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம், சௌதார், எழுத்தூர், மூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் 
ஏற்பட்டுள்ளது.
எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக முப்பது குடும்பங்களும் தற்போது எழுத்தூர் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் பல
 பாகங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீரை 
வெளியேற்ற 
மக்கள் கிராம நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தலைமையிலான
$ குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் அனர்த்தம் சம்பந்தமாக உடனடியாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகர்களின் கவனத்திற்கு
 கொண்டு வருமாறு 
வருமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் மன்னாரில் கடும் மழை பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் இருபத்தேழு ஓட்டங்களால் முன்னிலையில்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 13வது வடக்கின் நீலங்களின் சமர் இன்று 
ஆரம்பமாகியது 
இன்றைய முதல் நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 37.04 பந்துப்பரிமாற்றத்தில் 168 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தனர்.
அணி சார்பாக J-மதுஷன் 38ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.பந்து வீச்சில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சார்பாக T-கிருசாந்தன், K.கரிசாந்தன் ஆகியோர் தலா மூன்று இலக்குகளை வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு முதலாவது இனிங்சை ஆரம்பித்த கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 47.4 பந்து பரிமாற்றத்தில் 141 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்திருந்தனர்.
அணி சார்பாக T.தமிழவன் 46ஓட்டங்களையும்,k.கரிசாந்தன் 45ஓட்டங்களையும் அதிகபட்சமா பெற்றனர்.பந்து வீச்சில் G.கெளசிகன் 08இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
இரண்டாவது நாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த 12போட்டிகளில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி 4போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதுடன் 3போட்டிகளில் மத்திய கல்லூரி
 அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐந்து போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன குறிப்பிடத்தக்கது. என்பதாகும்.
 
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் இருபத்தேழு ஓட்டங்களால் முன்னிலையில்

கிளிநொச்சியில் உரிய விலையின்றி தவிக்கும் முருங்கை செய்கையாளர்கள்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

நாட்டில்  கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு, மயில்வானபுரம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தமது வாழ்வாதாரமாக முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்பொழுது 40 ரூபாய் 50 ரூபாய்க்கும் என கொள்ளளவு செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.  
தற்பொழுது முருங்கை செய்கையின் அநேகமான விவசாயிகள் முருங்கை செய்கைக்காய் அறுவடையில் ஈடுபட்டுவருகின்றனர்.  
இந்த நிலையில் முருங்கைக்காய்க்கு உரிய விலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை 
தெரிவித்துள்ளனர்.  
கடந்த வருடமும் இதே போன்று முருங்கை செய்கையாளர்கள் பெரும் பாதிப்பை ஏதிர்கொண்டதாகவும் கவலை 
தெரிவிக்கின்றனர்.  
குரங்கு, யானை உள்ளிட்டவற்றுக்கு இரவுபகலாக காவலிருது பாடுபட்டு எந்தப்பயனுமற்றுப்போயுள்ளதாவும், இவரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  
அறுவடைக்கு தயாராக உள்ள முருங்கையினை அறுவடை செய்ய முடியாது கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை 
தெரிவிக்கின்றனர்.  
அறுவடை செய்யும் பொழுது அதற்கான கூலி பணத்தை கூட பெற முடியாத நிலையில் விலை காணப்படுவதாக முருங்கைச் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - கிளிநொச்சியில் உரிய விலையின்றி தவிக்கும் முருங்கை செய்கையாளர்கள்

நாட்டில் கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தை புனரமைக்கு நடவடிக்கை

ஞாயிறு, 14 ஜூலை, 2024

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தின் நிலைமைகளை பார்வையிட்டார்.
கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்திற்காக வழங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் நிலைமைகளை பார்வையிட்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார
 அவர்கள் அதனை சீர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களுடனும் மாவட்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடலினை
 மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்ட முதன்மை வேலைகளுக்கான மதிப்பீட்டினை வழங்குமாறும் அதற்குரிய நிதி ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தை புனரமைக்கு நடவடிக்கை

நாட்டில் தமிழர் பகுதியில் நிகழ்ந்த அதிசயம் கண்ணை திறந்த அம்மன் சிலை

ஞாயிறு, 7 ஜூலை, 2024

தமிழர் பகுதியில் அம்மன் சிலை தனது ஒற்றை கண்ணை திறந்த அதிசய சம்பவம் பதிவாகியுள்ளது. 
முல்லைத்தீவு - முள்ளியவளை, கணுக்கேணி பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையானது வழமையாக மூடிய நிலையிலுள்ள 
கண்களையுடைய சிலையாகவே 
காணப்பட்டு வந்தது. 
நேற்றையதினமும் பக்தர்கள் சென்று வழிபட்டு வந்திருந்தனர். இந்நிலையில் இன்றையதினம் காலை திடீரென அந்த சிலையிலுள்ள ஒரு கண் திறந்த நிலையிலும்,  மற்றைய கண் மூடிய நிலையிலும்  மனித கண்களை ஒத்த நிலையில் காணப்படுகின்றது. 
 இதனை பிரதேசவாசிகள் அதிசயத்துடனும், பக்தி பரவசத்துடனும் பார்த்து வருகின்றமை  என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் தமிழர் பகுதியில் நிகழ்ந்த அதிசயம் கண்ணை திறந்த அம்மன் சிலை

திருகோணமலையை சேர்ந்தவர் பாக்குநீரினையை கடந்து சாதனை புரிந்த மற்றுமொரு மாணவர்

திங்கள், 17 ஜூன், 2024

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா 15-06-2024. சனிக்கிழமை  இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.  
15-06-2024. சனிக்கிழமை அதிகாலை 02.00 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில் நீந்தி முடித்துள்ளார்.  
பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிம் நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.
தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வய­தான இவர் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச் சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டுள்ளார். கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில்
 இருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில்
 நீந்திக் கடந்­துள்ளார்.  
இவ­ருக்­கான நீச்சல் பயிற்­சி­களை விமா­னப்­படை கோப்ரல் றொசான் அபே­சுந்­தர வழங்கி வரு­கின்றார்.  
மேலும் கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த ஹரி­கரன் தன்­வந்­தை­யையும் இவரே பயிற்­று­வித்­தி­ருந்தார்.  
இலங்­கை­ய­ரான இள வய­தை­யு­டைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளை­யாட்டு வர­லாற்­றிலே தனது பெயரை பதிந்து கொள்­வ­தற்­காக தனது இலக்­கினை அடைந்து கொள்ளும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்.  
அத்துடன், திரு­கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடாத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்­றி­யா­ள­ராக தெரிவாகி இருக்கின்றார்.  
பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - திருகோணமலையை சேர்ந்தவர் பாக்குநீரினையை கடந்து சாதனை புரிந்த மற்றுமொரு மாணவர்

நாட்டில் மன்னாரில் இரண்டாம் ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம்

புதன், 12 ஜூன், 2024

நாட்டில் மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு களுக்கு
 எதிராக 12-06-2024.இன்றைய தினம் புதன்கிழமை 
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புக்கள் முன் வைக்கப்பட்டது.
 எனினும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் எவ்வித அனுமதியும் வழங்கப்படாமல் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிற்கு எதிராக மக்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
 மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலில் அபிவிருத்தி குழுவின் தலைவரான இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் குறித்த கூட்டம் இடம் பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன்,கே.திலீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பல்வேறு விடையங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் 2வது கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு குறித்து 
கலந்துரையாட பட்ட போது பல்வேறு தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. -மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மீனவ
 அமைப்புகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியவை எதிர்ப்பை தெரிவித்தனர்.
 மன்னார் தீவு பகுதிக்குள் கணிய மணல் அகழ்வு அல்லது ஆராய்ச்சி நடவடிக்கைகள் இனி இடம் பெற கூடாது என பல முறை தெரிவிக்கப்பட்ட போதும்,குறித்த அகழ்வு தொடர்பாக 
அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த அபிவிருத்தி 
குழு கூட்டத்தின் போது காற்றாலை மின் செயற் திட்டம் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசுவதாக பாராளுமன்ற 
உறுப்பினர் தெரிவித்த போதும் இதுவரை 
எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
 மன்னார் தீவில் கணிய மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட கூடாது என்பதே அனைவரினதும் கோரிக்கை.எனினும் கணிய மணல் அகழ்வை முன்னெடுக்கும் நிறுவனத்தை அழைத்து கலந்துரையாடியமை யை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
குறித்த விடயத்தை திரும்ப திரும்ப கதைப்பதில் அர்த்தம் இல்லை. அதற்கான அனுமதியை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு வழங்காத நிலையில்,கொழும்பில் அனுமதி வழங்குவதாக இருந்தால் இந்த மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதற்கு ? என்றும் அவ்வாறு கொழும்பில் 
அனைத்திற்கும் அனுமதி வழங்கினால் இனிமேல் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றும் ,இனிமேல் நடத்த வேண்டாம் என்றும் அவர் பகிரங்கமாக 
கோரிக்கை விடுத்தார். மேலும் பல்வேறு விடயங்கள் 
குறித்து ஆராயப்பட்டது.
குறித்த கூட்டத்தில் திணைக்கள தலைவர்கள்,முப்படையினர்,பிரதேச செயலாளர்கள்,வட மாகாண திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் மன்னாரில் இரண்டாம் ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம்

நாட்டில் மட்டக்களப்பு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்

புதன், 22 மே, 2024

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை 
பிரசவித்துள்ளார்.
மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் பெ.மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் 
கலந்துகொண்டனர்.
இவ்வாறு ஒரு சூழில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் அம்மாக்களிலேயே இடம்பெறுவதாகவும், அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே 
அவ்வாறான விடயமும் சாத்தியமாக காணப்படும் நிலையில், 
இயற்கையான கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்த 
தாய் பிரசவித்தானது மருத்துவ துறையில் மிகவும் 
அரிதான விடயமாக பார்க்கப்படுவதாகவும், 
அத்துடன் பிறந்த நான்கு 
குழந்தைகளும் மிகவும் சுகதேக ஆரோக்கியத்துடன் 
உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 
மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மட்டக்களப்பு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்

நாட்டில் வவுனியாவில் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா கொண்டாட்டம்

ஞாயிறு, 12 மே, 2024

நாட்டில் வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா.12-05-2024. இன்று 
இடம் பெற்றிருந்தது.  
இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாகவ விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.  
மேலும் கலை நிலா கலையகத்தினால் குளக்கரையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நாடக ஆற்றுககையும்
 இடம் பெற்றிருந்தது.  
சுயாதீன இளைஞர்களினால் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற குறித்த நிகழ்வில் பெருமளான இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு நுங்குகளை பருகி மகிழ்ந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வவுனியாவில் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா கொண்டாட்டம்

நாட்டில் கிளிநொச்சியில் இலவச அரிசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

நாட்டில் அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டத்தின் தேசிய நிகழ்வு.21-04-2024. இன்று நாடுபூராகவும் நடைபெறுகின்றது.  
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திலும் குறித்த நிகழ்வு 
இடம்பெற்றது.  
மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு இலவச அரிசியை மக்களுக்கு 
வழங்கி வைத்தார்.  
குறித்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன், உதவிப்பிரதேச செயலாளர், மக்கள் என பலர் கலந்து
 கொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 30897குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கிளிநொச்சியில் இலவச அரிசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு

திங்கள், 8 ஏப்ரல், 2024

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக தென்னை உற்பத்தியாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், பழைய வட்டக்கச்சி பகுதியில் தனியார் ஒருவரது தென்னந் தோப்பு வெண் ஈ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 
அவரது வீட்டில் உள்ள பயன் தரும் வாழை, பூ மரங்கள், தோடை, எலுமிச்சையும் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக பண்ணையாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன், நாளாந்தம் பயன்படுத்தும் தண்ணீரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் வெண் ஈ தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், தரையில் வரும் புற்களில் கூட பரவி சுவாசிக்ககூட முடியாத நிலையில் வெண் ஈ தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் நேரில் பார்வையிட்டு தமக்குரிய தீர்வினை பெற்று தர வேண்டும் எனவும் 
தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வெண் ஈ தாக்கத்தின் காரணமாக தண்ணீர் மாசடைந்துள்ளதாகவும், அதனை பயன்படுத்துவதால் நோய் தாக்கம் ஏற்படலாம் என அச்சமும் வெளியிடுகின்றார்.
தமது கிணற்றில் உள்ள தண்ணீரை பலர் நாளாந்த தேவைக்காக பயன்படுத்தி வரும் நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு

உழவு இயந்திரம் செலுத்தி கிளிநொச்சியில் கொண்டாடிய பெண்கள்

வியாழன், 28 மார்ச், 2024

பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 
.28-03-2024.கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து மகளீர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
 குறித்த நிகழ்வு.28-03-2024 இன்று காலை 9.30 மணியளவில் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றது. உழவு இயந்திர சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளவுள்ள 8 பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி நிகழ்வில்
 பெறுமதி சேர்த்தனர்.
குறித்த பெண்களிற்கு ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட விருந்தினர்கள் கைலாகு கொடுத்து உட்சாகப்படுத்தினர். தொடர்ந்து குறித்த பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி 
விழா மண்டபம் வரை சென்றதை தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் ஆரம்பமானது.
நிகழ்வில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றமை
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - உழவு இயந்திரம் செலுத்தி கிளிநொச்சியில் கொண்டாடிய பெண்கள்

மன்னாரில் சடுதியாக குறைவடைந்த இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள்

சனி, 13 ஜனவரி, 2024

நாட்டில்  மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இறைச்சி கோழி மற்றும் முட்டை கோழி விலை குறைவடைந்துள்ளது.
 குறிப்பாக ஒரு கிலோ இறைச்சி கோழி 1,360 ரூபாவாகவும் முட்டை கோழி கிலோ 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு 
வருகின்றது.
 இறைச்சி கோழிக்கான விற்பனை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படாத நிலையில் ஏனைய மாவட்டங்களில் 1,450-1,500 ரூபா வரையில் கோழி இறைச்சி விற்கப்பட்டு வருகின்றமை  என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - மன்னாரில் சடுதியாக குறைவடைந்த இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள்

தற்காலிகமாக மூடப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள நாய்கள் சரணாலயம்

வெள்ளி, 12 ஜனவரி, 2024

சிவபூமி நாய்கள் சரணாலயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது. கடந்த நான்குவருடங்களாக இயக்கச்சியில் அமைக்கப்பட்டு செயற்பட்டுவந்த நாய்கள் சரணாலயம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் 
நடாத்திவரப்பட்டது.
 இதனால் இங்கு பல நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்கள் 
பராமரிக்கப்பட்டு வந்தன.
 எனினும் ஐந்தாவது ஆண்டில் கால்பதிக்கும் இந்த நாய்கள் சரணாலயம் சுகாதார வசதிகள் இன்மையாலும் மருத்துவ 
துறையின் போதிய ஆதரவின்மையாலும், நாய்களை
 பராமரிப்பதற்கு போதிய 
பராமரிப்பாளர்கள் இல்லாமையாலும் அறக்கட்டளையினர் நாய்கள் சரணாலயத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
 தகுந்த பணியாளர்கள், மருத்துவ ஒத்துழைப்பு கிடைத்ததும் மீண்டும் திறக்கப்படும் அதுவரை நாய்களை அங்கு விடவேண்டாம் என அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - தற்காலிகமாக மூடப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள நாய்கள் சரணாலயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை! வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்

திங்கள், 18 டிசம்பர், 2023

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற 
நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . 
 முத்துஐயன் கட்டுக்குளம் 4 வான் கதவுகளும் திறக்கபட்டுள்ளதுடன் 2 அடி வான் பாய்கிறது. 
முத்துயன்கட்டு ,பேராறு , முத்துவினாயகபுரம்,பண்டாரவன்னி வசந்தபுரம் மன்னகண்டல் ஆகிய கிராம ஆகிய கிராம மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் 18.12.2023.இன்று  அதிகாலை தொடக்கம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அவர்களை கிராமத்தில் இருந்து மீட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 111 குடும்பங்களை சேர்ந்த 355 பேரே இவ்வாறு மன்னகண்டல் அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . 
மழை தொடர்ந்து பெய்துவருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். இதேபோன்று 
குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற 
நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் 
அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு
 வான் பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை! வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற வானிலை மக்கள் இடப்பெயர்வு

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர்
 இடம்பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  
மன்னார் யாழ்ப்பாணம் A-32 வீதியில் காணப்படுகின்ற பாலியாறு பெருக்கெடுத்ததன் காரணமாக தேவன்பிட்டி கிராமத்திற்கு நீர் உட்புகுந்து உள்ளது. இதன் காரணமாக இடம் பெயர வேண்டிய நிலை
 ஏற்பட்டுள்ளது. 
இவர்களுக்கான சமைத்த உணவினை மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் 
வழங்கி வருகின்றனர்.  
மே லும் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மாவட்டத்தில் பெரும்பாலான தாழ்நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே. திலீபன் அறிவித்தார்.
 பாலியாறு, பறங்கியாறு நீர் மட்டம் அதிகரிக்கும் போது மன்னார் -யாழ்ப்பாணம்(ஏ-32) பிரதான வெள்ள நீரில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுகின்றமையினால் அவ்யூடாக பயணம் செய்யும் மக்கள் மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற வானிலை மக்கள் இடப்பெயர்வு

கிளிநொச்சி பூநகரி பாடசாலை மாணவி ஒன்பது ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்

சனி, 2 டிசம்பர், 2023

பூநகரி பாடசாலை  1967 ஆண்டு உருவாக்கப்பட்ட கிராமப்புற பாடசாலையான கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி செல்லியாதீவு அ. த. க பாடசாலையில் படசாலை வரலாற்றில் முதல் முறையாக 2022 சாதாரணப் பரீட்சையில் 
சதீசன் சரண்யா சகல பாடங்களிலும் 9A தர சித்தி பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
 கிராமப்புறத்தில் வசித்து வரும் இந்த மாணவியின் வரலாற்றுச் சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்..
இவருக்கு எமது இணையங்களின்  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிகின்றன.
என்பதும் குறிப்பிடத்தக்கது      

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - கிளிநொச்சி பூநகரி பாடசாலை மாணவி ஒன்பது ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்

நாட்டில் கிளிநொச்சியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீனை பதப்படுத்தும் பயிற்சி

செவ்வாய், 28 நவம்பர், 2023

கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு பகுதி மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மீனவ பெண்களுக்கு மழைக்காலங்களில் மீனை ஜாடி மூலம் பதப்படுத்தி நீண்ட காலம் பயன் படுத்தும் செயல் திட்ட பயிற்சி  இன்று (28) வழங்கப்பட்டுள்ளது.  

மழைக்காலங்களில் மீன்களின் விலை குறைவடைந்து காணப்படுவதோடு மீனை கருவாடு மற்றும் ஏனைய முறைகளில் பதனிட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் தமது வீட்டுத் தேவைக்காக கூட மீனை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது.  
இந்த நிலையில் மீனை எவ்வித இரசாயன பதார்த்தங்களும் பயன்படுத்தாது 'ஜாடி' முறையில் பதப்படுத்தும் பயிற்சி இன்றைய தினம் (28) வழங்கி வைக்கப்பட்டது.  

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) ஏற்பாட்டில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு இரணைமாதா நகர் மீனவ கூட்டுறவு சங்க கட்டிடத்தில் குறித்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது. 

இதன் போது இரணைமாதா நகர், அன்பு புரம், முழங்காவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 35 மீனவ பெண்கள் கலந்து கொண்டு குறித்த பயிற்சியை நிறைவு செய்தனர்.
அத்துடன்  மன்னார் மாவட்ட முன்னால் கடற்றொழில் உதவி பணிப்பாளர் ஏ.மெராண்டா கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மன்னார் மாவட்ட பிரதி பணிப்பாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.  

குறித்த பயிற்சியின் போது மீன்களை கொள்வனவு செய்து சுத்தப்படுத்தி எவ்வித ரசாயன பொருட்களும் இன்றி உப்பு மற்றும் கொருக்கா புளி ஆகியவற்றை மாத்திரம் பயன்படுத்தி 'ஜாடி' முறையில் மீன்களை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவது மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற செய்முறை பயிற்சியும் வழங்கப் பட்டமை.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கிளிநொச்சியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீனை பதப்படுத்தும் பயிற்சி

மீனவ குடும்பங்களுக்கு மன்னாரில் உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன

செவ்வாய், 7 நவம்பர், 2023

சீனாவில் உள்ள பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையில் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு.07-11-2023 
இன்றைய தினம் 
. மாலை மன்னார் வங்காலையில் இடம்பெற்றது. 
குறித்த நிகழ்வில் சீனத் தூதுவர் கீ செங்ஹோங் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.  
மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற உதவி திட்டம் வழங்கும் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு 
செய்யப்பட்ட 450 மீனவ குடும்பங்களில் முதல் கட்டமாக 50 மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் 
வழங்கிவைக்கப்பட்டன. 
மேற்படி உதவித் திட்டம் சீனாவின் பௌத்த சங்கம், இலங்கை மற்றும் சீன பௌத்த நட்புறவுச் சங்கம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  
குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மீனவ குடும்பங்கள்,
தள்ளாடி இராணுவ 541 வது படைப்பிரிவு அதிகாரி,அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டிடனர்  என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - மீனவ குடும்பங்களுக்கு மன்னாரில் உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன