ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண்கள் புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஞாயிறு, 10 நவம்பர், 2024

 பெண்கள் பொதுவாகவே மற்ற ஆடைகளை விடவும் புடவையில் சற்று கூடுதல் அழகுடன் இருப்பார்கள். அதன் காரணமாக
 பெரும்பாலான பெண்களுக்கு சேலை அணிவது பிடிக்கும். இருப்பிணும் சேலை அணிவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதனால் 
தினசரி பாவனைக்கு பலரும் சேலையை பயன்படுத்துவது
 தற்காலத்தில் குறைவு.
ஆனால் தொடர்ந்து புடவை அணிவது புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக சேலை கட்ட வேண்டும் என்றால் உள்பாவாடை கட்ட வேண்டியது அவசியம். அப்படி தொடர்ந்து நாடா கொண்டு இடுப்பில் இறுக்கமாக உள்பாவாடை கட்டிவதால் இடுப்பில் ஓர் உராய்வு
 ஏற்படுகின்றது.
அவ்வாறு தொடர்ந்து இடுப்பில் ஒரே இடத்தில் உராய்வு ஏற்படுவதால், அது நாளடைவில் காயத்தை ஏற்படுத்துகின்றது. இது தோல் அழற்சியாக மாறி பின்னர் புற்றுநோயாக உருவாகின்றது.
தினசரி ஒரே இடத்தில் இறுக்கமான முடிச்சு போட்டு உள்பாவடை கட்டுவதால், வியர்வை, அழுக்கு ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்துவிடும். பின்னர் அந்த பகுதி மாத்திரம் நிறமாற்றம் அடைகின்றது இது தீவிர 
நிலையை அடையும் போது, வீரியம் மிக்க 
புண்ணாக மாறும்.
அது மட்டுமன்றி தொடர் உராய்வு காரணமாக ஸ்குவாமஸ் செல் (squamous cell) கார்சினோமாவின் (carcinoma) வளர்ச்சிக்கு இது காரணமாக 
அமைகின்றது.
இவ்வாறு தொடர்ந்து சேலை அணிந்தமையால், 60 மற்றும் 70 வயதான இரு பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வுகளின் மூலம் 
தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் 70 வயது பெண் ஒருவருக்கு இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட புண் 18 மாதங்களுக்கு மேல் குணமடையவில்லை என்பதும் 60 வயது பெண் ஒருவருக்கு வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட புண் 2 ஆண்டுகளாக ஆறமல் துன்புறுத்தியுள்ளது.
குறித்த புற்றுநோய் அபாயம் சேலை கட்டுவோருக்கு மட்டுமன்றி சுடிதார் உள்ளிட்ட ஆடைகளுக்காக இறுக்கமாக பேண்ட் அணிபவர்களுக்கும்,இறுக்கமாக வேட்டி அணியும் ஆண்களுக்கும் கூட ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
பெண்கள் உள்பாவாடையை மிக இறுக்கமாக கட்டுவதை தவிர்த்துக்கொள்வதுடன், தினசரி இடுப்பில் ஒரோ பகுதியில் கட்டாமல் சற்று மேல் கீழாக கட்டலாம்.
அகலம் குறைந்த நாடாக்களை பயன்படுத்தாமல், அகலம் அதிகமான நாடாக்களை பயன்படுத்துவது அழுத்தத்தை குறைத்து உராய்வு
 ஏற்படுவதை தடுக்கும்.
இடுப்புப் பகுதியில் வேர்வை மற்றும் அழுக்கு சேராமல் தினசரி முறையான சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். இடுப்பு பகுதியில் மாற்றங்களை உணர்கின்றீர்கள் என்றால் அதனை அலட்சியப்படுத்தாது முறையாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - பெண்கள் புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஆயுர்வேத வைத்தியம் வழுக்கை தலையில் முடி வளர வைக்குமாம்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

தற்போது இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினருமே இளம் வயதிலே தலைமுடி உதிர்வு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள். முதுமைக்கு முன்னரே தலையில் உள்ள முடி 
உதிர்ந்து தலை வழுக்கையாக ஆரம்பிக்கின்றது. இது ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், மன அழுத்தம், மருந்து பாவனை, 
தூக்கமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகின்றது. வழுக்கை பிரச்சினை பெண்களை விட ஆண்களுக்கே 
அதிகம் வருகின்றது. இந்த பிரச்சினை அனுபவிப்பவர்கள் ஆங்கில மருத்துவத்தில் முயற்சிப்பதை விட ஆயுள் வேத முறைப்படி 
வைத்தியம் பெறலாம்
இது வழுக்கை தலையில் உள்ளவர்களுக்கு நிரந்தரமான 
நிவாரணத்தை கொடுக்கும்.
அந்த வகையில் வழுக்கை தலையில் முடி வளர வைக்க என்னென்ன ஆயுள் வேத வைத்திய முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வழுக்கை பிரச்சினையால் ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான முக்கிய காரணம் அவர்களின் வயதாக இருக்கலாம். 45 - 50 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு 
வழுக்கை வரலாம்.
மரபியல் அல்லது குடும்ப வரலாறு காரணமாகவும் சிலருக்கு வழுக்கை பிரச்சினை ஏற்படும்.
ஆயுர்வேதத்தின் படி, பித்த தோஷம் உள்ளவர்களுக்கு வழுக்கை வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் ரசாயன பொருட்களின் பாவனை தொடர்ச்சியாக இருந்தால் அந்த விஷத்தன்மையால் முடி உதிர்வு ஏற்பட்டு தலை வழுக்கையாகலாம்.
1. வழுக்கை பிரச்சினையுள்ள ஆண்கள் அஸ்வகந்தாவை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்து பேஸ்ட் பதம் வந்தவுடன் தலை
முடியில் தடவி, 30 நிமிடம் ஊறவைத்து, பின்னர் அதை
 அலசவும். இது வழுக்கையில் முடியை வளர வைக்கும். வாரத்திற்கு 2 தடவைகள் செய்து பார்க்கலாம்.
2. வல்லாரை கீரையில் தலைமுடியை வளர வைக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது வழுக்கையில் முடியை வளர வைக்கும். வல்லாரை இலைகளை நசுக்கி, தண்ணீரில் கலந்து, உங்கள் தலைமுடி 
முழுவதும் தடவவும். இதனை வாரத்திற்கு மூன்று முறை 
தொடர்ந்து செய்ய வேண்டும்.
3. ஆயுள்வேத வைத்தியத்தில் வெந்தயத்திற்கு முக்கிய இடம் உள்ளது. ஆண், பெண்களுக்கு வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு 
மருந்தாக வெந்தயம் பயன்படுகின்றது. வெந்தயத்தை 
கடாயில் பொன்னிறமாக
 வறுத்து, ஆறிய பின் நைசாக அரைக்கவும். இந்த 
கலவையை தலையில் பூசவும். இது தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்துமாம்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - ஆயுர்வேத வைத்தியம் வழுக்கை தலையில் முடி வளர வைக்குமாம்

வயதான தம்பதியினரை விமானத்திலிருந்து இறக்கிவிட்ட விமான நிறுவனம் கூறும் காரணம்

சனி, 20 ஜூலை, 2024

கனடாவில், விமான நிறுவனம் ஒன்று ஒரு இந்திய தம்பதியருக்கு விமானத்தில பயணிக்க மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் கோபமடைந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில், ரொரன்றோவிலிருந்து வான்கூவருக்கு பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்கள் போரூர் குமணன், 
கல்பனா தம்பதியர்.
விமானத்தில் ஏறுவதற்காக செல்லும்போது, அவர்கள் கையில் வைத்திருந்த அனுமதிக்கப்பட்ட அளவிலான பைகளுடன் அவர்கள் விமானத்தில் ஏற பணியாளர் ஒருவர் அனுமதி மறுத்துள்ளார்.
தங்களுக்குத் தேவையான மருந்துகளும் விலையுயர்ந்த நகைகளும் பையில் இருப்பதால், பையை சரக்குகள் வைக்கும் இடத்தில் வைக்க இயலாது என குமணன் கூற, இந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் இனி நீங்கள் ஒருபோது பயணிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் ஒரு பணியாளர்.
வேறு வழியில்லாமல், கடைசி நேரத்தில் ஃப்ளேர் விமான நிறுவன விமானம் ஒன்றில் 1,927 டொலர்கள் செலுத்தி டிக்கெட் வாங்கி 
பயணித்திருக்கிறார்கள் தம்பதியர்.
இந்த சம்பவத்தால் கோபமடைந்துள்ள குமணன், நாங்கள் என்ன குற்றவாளிகளா என்கிறார். விமான நிறுவனத்துக்கு நடந்ததை விளக்கி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள குமணன், டிக்கெட்டுக்கான தங்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கோரியுள்ளார்
வெஸ்ட்ஜெட் விமான நிறுவன செய்தித்தொடர்பாளரான ஜூலியா கெய்சரை ஊடகங்கள் இந்த புகார் தொடர்பாக தொடர்பு 
கொண்டபோது, குமணன் தம்பதியர் தங்கள் விமான நிறுவன விமானத்தில் பயணிக்க தடையேதும் விதிக்கப்படவில்லை என்று
 அவர் கூறியுள்ளார்
அத்துடன், அவர்கள் டிக்கெட்டுக்காக செலுத்திய 800 டொலர்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர்
 தெரிவித்துள்ளார்.
விமானத்தில் ஏறும்போது அந்த பயணிகள் நடந்துகொண்ட விதம் காரணமாகத்தான் அவர்கள் விமனத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஜூலியா தெரிவித்துள்ளார்.
இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலும், முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளும் பயணிகளை வெஸ்ட்ஜெட் நிறுவனம் பொறுத்துக்கொள்வதில்லை என்றும் ஜூலியா கூறியுள்ளார்.
ஆனால், கடைசி நேரத்தில் மற்றொரு விமானத்தில் பயணிக்க நேர்ந்ததால் கூடுதலாக செலவான 1,127 டொலர்கள் குறித்து அவர் எதுவும் 
கூறவில்லை.
தான் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளவில்லை என்று கூறும் குமணன், தங்கள் மருந்துகளையும் விலையுயர்ந்த நகைகளையும்
 விமானத்தில் ஏற்றவேண்டியதன் அவசியத்தை விளக்கியும் அந்தப் பணியாளர் அதை சட்டை செய்யவில்லை என்றும், ஆகவே, 
தான் அப்செட் ஆனதால் சத்தமாக பேசியதாகவும் 
தெரிவிக்கிறார்.
ஒரு ஜிப் லாக் பை கொடுத்திருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும், அல்லது அவர்கள் தனக்கு ஏதாவது ஒரு தீர்வு கூறியிருக்கலாம்
 என்கிறார் அவர்.
அவர்கள் எனக்கு முழு செலவையும் திருப்பிக் கொடுத்தாகவேண்டும் என்றும், அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்பதற்கு எனக்கு விளக்கமளிக்கவேண்டும் என்று குமணன்கூறுகிறார் .என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - வயதான தம்பதியினரை விமானத்திலிருந்து இறக்கிவிட்ட விமான நிறுவனம் கூறும் காரணம்

நீங்கள் ஆடிப் பிறப்பிற்கு ஆடிட் கூழ் செய்யும் முறை விபரம் உள்ளே

திங்கள், 15 ஜூலை, 2024

ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே..கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கடடையும் தின்னலாம் தோழர்களே.... ஆம் நாளையதினம் ஆடிப் பிறப்பு. 
ஆடிப்பிறப்பு என்றாலே தமிழர்களை பொறுத்தவரையில் ஆடிக் கூழ் முக்கியம் பெறுகிறது. அந்தவகையில் ஆடிட் கூழ் எப்படி செய்யலாம் என பார்ப்போம்: 
 ஆடிக்கூழ் தேவையான பொருட்கள்:
 750 கிராம் பனங்கட்டி
 1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி
 ½ கப் முழுப் பயறு
 ½ கப் வறுத்த உளுத்தம் மா
 ½ கப் தேங்காய் சொட்டு 2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2) 3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+) ½ மே.க மிளகு(-) உப்பு
 செய்முறை: 
 அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). 
மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும். தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை 
கொதிக்க விடவும்.
 முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை 
வடித்து விடவும்.
 அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும். 
 மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது 
உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். 
அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும். சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். கொதித்து
 இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
 ஆடிக் கூழ் தயார்! 
குறிப்பு: கூழ் சிறிது தண்ணித் தன்மையாக வேண்டும் என்றால் 1 கப் அரிசி எடுக்கவும். பயறு அதிகம் விரும்பாதவர்கள், 6 மே.க பயறு சேர்க்கவும். 
சில்லுகள் / உருண்டைகள் அதிகம் விரும்பாதவர்கள் 2/3 பங்கு மாவை கரைத்தும் மீதி 1/3 பங்கு மாவில் சில்லுகள் / 
உருண்டைகளை செய்யவும். வறுத்த உளுத்தம் மா, தேங்காய் சொட்டு மற்றும் பயற்றின் அளவை, உங்கள் ருசிக்கேற்ப்ப கூட்டிப் குறைக்கவும்.
 என்பதாகும்
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நீங்கள் ஆடிப் பிறப்பிற்கு ஆடிட் கூழ் செய்யும் முறை விபரம் உள்ளே

முக்கிய அறிவித்தல் அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு

சனி, 6 ஜூலை, 2024

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியா
 அறிவித்துள்ளது.
அதன்படி, 710 அவுஸ்திரேலிய டொலராக இருந்த விசா கட்டணம் தற்போது 1,600 டொலராக அதிகரித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தலைமையிலான அரசாங்கம், மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் 
தெரிவிக்கின்றன.
இந்த விசா கட்டண உயர்வு, சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைக்கவும், சிறப்பாகவும் மாற்ற அவுஸ்திரேலியாவிற்கு உதவும் என, அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த முடிவு சர்வதேச மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பியுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பொருளாதாரம் இரண்டுக்கும் உகந்ததல்ல என, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகக் குழுவின் தலைவர் லூக் ஷீஹி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளை விட அவுஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம் உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி, கடந்தாண்டு செப்டம்பர் வரை அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 வீதத்தால் உயர்ந்து 5 இலட்சத்து 48 ஆயிரத்து 800 பேரை
 எட்டியுள்ளதாகத் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றமை
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - முக்கிய அறிவித்தல் அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு

இலங்கைக்கு நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மோப்ப நாய்கள்

வெள்ளி, 5 ஜூலை, 2024

பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கு நெதர்லாந்திலிருந்து 35 நாய்கள் இன்று
 (05-07-24) வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த நாய்கள் நெதர்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனையடுத்து இந்த நாய்கள் கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு கொண்டு 
செல்லப்பட்டுள்ளன.
நாய்களின் மொத்த மதிப்பு 50 கோடியே 80 இலட்சம் ரூபா ஆகும். இந்த நாய்களில் 21 பெண் நாய்களும் 14 ஆண் நாய்களும் உள்ளன.
இந்த நாய்களை ஏற்றுக்கொள்வதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர்நிஹால் தல்துவ கட்டுநாயக்க 
விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு 
வருகை தந்தார்.
 இந்த நாய்கள் விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கால்நடை வைத்திய 
அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாய்களின் பயிற்சியாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கைக்கு நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மோப்ப நாய்கள்

தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு இலங்கையர்கள் கைது

வெள்ளி, 21 ஜூன், 2024

இலங்கையிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
 தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்றில் இருவர் வந்திறங்கியுள்னர்.
 இவ்வாறு வந்திறங்கியவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 விசாரணையில் அவர்கள் இருவரும் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக
 தமிழகத்திற்குள் 
தஞ்சமடைய வந்தார்களா அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை 
நடைபெற்று வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு இலங்கையர்கள் கைது

உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக உள்ளதா இவற்றை செய்யுங்கள்

ஞாயிறு, 9 ஜூன், 2024

உங்கள் வீடு என்பது வெறும் கட்டடம் மட்டுமல்ல; அந்த வீட்டில் வசிப்போரின் வாழ்வு, தாழ்வில் அது முக்கியப் பங்கு வகிக்கின்றது. நாம் வசிக்கும் இல்லம் கிட்டத்தட்ட ஒரு கோயிலுக்கு சமமாகிறது. 
அதில் எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் அவை வீட்டில் வசிப்போரின் மனங்களில் பயம், பதற்றம், சோகம் போன்ற உணர்வுகளை உருவாக்கி, ஆரோக்கியம், முன்னேற்றம், செல்வ வளம் நல்வாழ்வு 
போன்றவற்றை பாதிக்கும்.  
வீட்டின் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் விஷயங்கள்:  
1. இரண்டு மூன்று நாட்களுக்கு அழுக்குத் துணிகளை துவைக்காமல் குவியலாக போட்டு வைப்பது, அதேபோல துவைத்த துணிகளை சோபாவிலோ நாற்காலியிலோ அம்பாரமாகக் குவித்து வைப்பது.  
2. சமையலறை சிங்கில் வழிய வழிய எப்போதும் எச்சில் பாத்திரங்களைப் போட்டு வைத்திருப்பது.  
3. வீட்டு உறுப்பினர்கள் எப்போதும் உரத்த குரலில் பேசிக்கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருப்பது. 4. வீட்டின் மூலைகளில் ஒட்டடை பிடித்து இருப்பது.  
5. வீட்டின் தரையைத் துடைக்காமல் அழுக்காக 
வைத்திருப்பது.  
6. வாசலில் செருப்புகளை தாறுமாறாகப் போட்டு வைப்பது. 7. நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத பொருட்களை பரணிலோ, ஸ்டோர் ரூமிலோ போட்டு அடைத்து வைத்திருப்பது, பழுதடைந்த ஓடாத பழைய 
ஃபேன், ரேடியோ, ஓடாத கடிகாரம், உடைந்த பொம்மைகள், பாத்திரங்கள், மண் தொட்டிகள் போன்றவற்றை வைத்திருப்பது.  
8. நிரம்பி வழியும் குப்பைக் கூடை போன்றவை வீட்டின் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.  
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வழிகள்:  
1. தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை துணிகளைத் துவைத்து, உலர்ந்ததும் மடித்து பீரோவில் வைக்க வேண்டும். அவ்வப்போது பாத்திரங்களை துலக்கி வைத்து விட வேண்டும். செருப்புகளை 
அழகாக ஒரு ஸ்டாண்டில் அடுக்கி வைக்க வேண்டும்.
 இரண்டு தினங்களுக்கு ஒரு முறை குப்பையை வெளியேற்றி விடவேண்டும். உடைந்த பொருட்களை உடனே அகற்றவும்.  
2. வீட்டு பூஜை அறையில் தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி பொருத்தி, பச்சைக் கற்பூரம் ஏற்றி, மணியடித்து பூஜை செய்து, சப்தமாக 
ஸ்லோகங்கள் சொல்லும்போது கெட்ட அதிர்வலைகள் வீட்டை விட்டு ஓடிவிடும். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். மந்திரங்கள், ஸ்லோகங்கள் போன்றவற்றை வீடு முழுக்க 
ஒலிக்கச் செய்ய வேண்டும். 
3. கல் உப்பு தண்ணீர் கொண்டு வீட்டை வாரம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ துடைக்க வேண்டும். படுக்கை அறையில் ஒரு கிண்ணத்தில் கல்லுப்பை வைத்தால் கணவன் - மனைவி இடையே உள்ள
 பிணக்குகள் நீங்கும். 
4. பகலில் எப்போதும் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து இயற்கையான சூரிய ஒளி வீட்டுக்குள் வர வழி செய்ய வேண்டும்.  
5. வீட்டில் ஆங்கங்கே பொருட்களை போட்டு வைக்காமல், அழகாக அடுக்கி வைக்க வேண்டும்.  
6. வீட்டில் துளசிச் செடி, கற்றாழை வளர்ப்பது நேர்மறை ஆற்றலை உருவாக்கும். அவை சுத்தமான காற்றை வழங்கி, எதிர்மறை ஆற்றலை விரட்டுகின்றன.  
7. தண்ணீர், எலுமிச்சைச் சாறு, வெள்ளை வினிகர் மற்றும் உப்பு கலந்து ஜன்னல்கள் மற்றும் கதவு கைப்பிடிகளை சுத்தம் செய்ய வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பெருகும். என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக உள்ளதா இவற்றை செய்யுங்கள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம்

திங்கள், 20 மே, 2024

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதில் 650 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைகள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களில் சுமார் 200 பேரை அரசு நிறுவனங்களுக்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தின் பழைய உள்கட்டமைப்பை
 நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் தற்போதுள்ள முதலீட்டுத் தேவையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகிறது.
 குறைந்தபட்சம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம்

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்

செவ்வாய், 7 மே, 2024

சில அரிய நோய்கள் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் தாக்குகின்றன. அதேபோல் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் ஒன்று 2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக
 மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக
 வலைதளங்களில் பரவி வருகிறது.
தோல் இயற்கையான நிறத்தை இழந்து வெளிர் வெள்ளை நிறமாக மாறும் நிலையை விட்டிலிகோ என்று அழைக்கப்படுகிறது. இந்த
 அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த ஸ்மித் என்பவரால் வளர்க்கப்பட்ட பஸ்டர் என்ற 4 வயது நாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் கருப்பாக இருந்தது.
ஆனால், விட்டிலிகோ நோயால் கடந்த 2 ஆண்டுகளில் படிப்படியாக நிறம் மாறி தற்போது முற்றிலும் வெண்மையாக மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை reddit தளத்தில் வெளியிட்டு, இணையத்தில் வேகமாக 
பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்

வடக்கு வானில் நள்ளிரவில் ஏற்படும் மாற்றம் விண்கல் மழை பொழிவை கண்ணால் பார்க்க முடியும்

திங்கள், 22 ஏப்ரல், 2024

வருடாந்தம் தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் விண்கல் மழை.22-04-2024. இன்று  நள்ளிரவு வடக்கு
 வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள்
 தெரிவித்துள்ளனர்.
 இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை செயலில் இருக்கும். 
இந்த விண்கல் மழை வீணை விண்மீன் தொகுப்பில் காணப்படுவதால் லிரிட்ஸ் என அழைக்கப்படுவதாக விண்வெளி விஞ்ஞானி பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.  
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இந்த விண்கல் மழையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்கள் 
விழும். இது. இன்று இரவு அல்லது நாளை காலை
 உச்சத்தில் இருக்கும். 
இன்று நள்ளிரவுக்குப் பிறகு பார்க்கலாம். இன்று முழு நிலவை பார்ப்பதால் ஒரு பிரச்சனை. அதனால், இது இந்த விண்கல் மழையை காலை 4-5 மணிக்குள் வடக்கு திசையில் வெறும் கண்ணால் பார்க்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - வடக்கு வானில் நள்ளிரவில் ஏற்படும் மாற்றம் விண்கல் மழை பொழிவை கண்ணால் பார்க்க முடியும்

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதில் உலக சாதனை படைத்த நான்கு மாதக் குழந்தை

சனி, 9 மார்ச், 2024

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு 
கைவல்யா என்ற பெண் குழந்தை 
பிறந்துள்ளது. இந்த 
குழந்தை மிகச் சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தனது குழந்தையின் திறமையை வெளி உலகத்திற்குக் கொண்டு வர நினைத்த ஹேமா, தன் குழந்தை அடையாளம் காணும் பொருட்கள் தொடர்பாக வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். 
மேலும், அந்த வீடியோவை நோபல் உலக சாதனைக்கு அனுப்பி 
வைத்துள்ளார்.
குழந்தையின் வீடியோவை கண்ட நோபல் உலக சாதனை குழுவினர், கைவல்யா உலக சாதனைக்கு தகுதியானவர் என்று முடிவு 
செய்து குழந்தைக்கு சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது. இதன் மூலம், 4 மாத குழந்தையான கைவல்யா உலக சாதனை படைத்து 
பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த சாதனைக்கு 
பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதில் உலக சாதனை படைத்த நான்கு மாதக் குழந்தை

மீனவர்கள் :கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்துள்ளள்ளனர் பொதுமக்கள் கவலையில்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

கச்சத்தீவு திருவிழாவிழாவில்  இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.  
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மதிய, மாநில அரசுகள் 
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் 
வலியுறுத்தியுள்ளனர்.  
தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை நீதிமன்றத்தின் செயற்பாட்டை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி தங்களுடைய படகுகளில் கருப்புக்கொடி கட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் இலங்கை - இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவை பக்தர்கள் புறக்கணித்து வருகின்றனர்.  
இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வருகை தந்துள்ள பக்தர்கள் திரும்பிச் செல் நேரிட்டதோடு, பணம் மற்றும் பொருட்கள் வீண் விரயமாகியுள்ளதாக கவலைத்
 தெரிவித்துள்ளனர்.  
இதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை ஏற்படுத்திருக்கலாம் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்பது  குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மீனவர்கள் :கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்துள்ளள்ளனர் பொதுமக்கள் கவலையில்

தாய்லாந்திற்கும் இலங்கை இடையில் இருதரப்பு விமான சேவைகள்

செவ்வாய், 30 ஜனவரி, 2024

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அரசாங்கம் 
தீர்மானித்துள்ளது.
இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன 
தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இருநாடுகளுக்கும் இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட விமான சேவைகள் அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் 
வழங்கியுள்ளது.
இதேநேரம் இலங்கையின் சுதந்திரதின நிகழ்விற்கு கௌரவ அதிதியாக கலந்துகொள்ள தாய்லாந்து பிரதமர் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்போது இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - தாய்லாந்திற்கும் இலங்கை இடையில் இருதரப்பு விமான சேவைகள்

தமிழ்நாட்டின் துாத்துக்குடியில் வியட்நாம் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் தொழிற்சாலை

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட்-தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு
 ஒப்பந்தம். 
இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. வின்ஃபாஸ்ட் ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தளத்தை தமிழ்நாட்டில் 
அமைக்க உள்ளது.
வின்ஃபாஸ்ட் ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை தூத்துக்குடியில் அமைய உள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தமிழ்நாட்டின் துாத்துக்குடியில் வியட்நாம் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் தொழிற்சாலை

சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

புதன், 29 நவம்பர், 2023

 சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 35 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  
இதன்படி, விசா இன்றி குவைத்துக்கு வேலைக்குச் சென்று தங்கியிருந்த 33 வீட்டுப் பணியாளர்களுடன் மேலும் இரு பணியாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து குறித்த குழுவினர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

மேற்கு மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழமுக்கம் உருவாகக் கூடும் என:எச்சரிக்கை

புதன், 15 நவம்பர், 2023

மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் 16-11-2023.நாளைய . தினம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கக் கடலில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சுற்றி அந்தமான் நிக்கோபாரை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.15-11-2023. இன்று உருவாகிய நிலையில், இது நாளையதினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக உருமாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 
இதனால் கடற்பரப்புகளில் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மேற்கு மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழமுக்கம் உருவாகக் கூடும் என:எச்சரிக்கை

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு என்பது ரூபா சரிவு

திங்கள், 23 அக்டோபர், 2023

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.78.50 விற்பனை செய்யப்படுகிறது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு என்பது ரூபா சரிவு

வடகிழக்கு நாட்டில் வரும் இருபத்தி ஐந்தாம் தேதிக்குள் பருவமழை க்கு வாய்ப்புள்ளதாக தகவல்

செவ்வாய், 17 அக்டோபர், 2023

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருவதால்,  வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் 
தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் சராசரியாக அக்டோபரில் 177.2 மி. மீ. மழையும் நவம்பரில் 178.8 மி.மீ , டிசம்பரில் 92 மி.மீ. மழையும் பெய்வது இயல்பானதாகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 448 மி.மீ மழை பெய்யும் 
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வடகிழக்கு நாட்டில் வரும் இருபத்தி ஐந்தாம் தேதிக்குள் பருவமழை க்கு வாய்ப்புள்ளதாக தகவல்

டெல்லியில் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை என அமைச்சர் தகவல்

திங்கள், 11 செப்டம்பர், 2023

இந்தியா  டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடை விதிப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளையும் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விற்பனை செய்வது, ஆன்லைனில் விநியோகிப்பது மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 
டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம் என்று டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் 
கோபால் ராய் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - டெல்லியில் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை என அமைச்சர் தகவல்