டெல்லியில் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை என அமைச்சர் தகவல்

திங்கள், 11 செப்டம்பர், 2023

இந்தியா  டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடை விதிப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளையும் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விற்பனை செய்வது, ஆன்லைனில் விநியோகிப்பது மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 
டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம் என்று டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் 
கோபால் ராய் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக