நாட்டில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

நாட்டில் சுங்க வரி விலக்குக்கு உட்பட்டு புதிய ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் 
அளித்துள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தொடர்புடையசுங்க வரிகள் இல்லாமல் புதிய ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் 
தெரிவித்துள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 30,000 அமெரிக்க டொலருக்கு மிகாமல் வரி விதிப்புக்கு உட்பட்டு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை
 ஒப்புதல் அளித்தது.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக