நாட்டில் இணையம் ஊடாக பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் கைது

புதன், 31 ஜூலை, 2024

நாட்டில்புத்தளம் பகுதியில் இணையம் ஊடாக பணத்தை மோசடி செய்த 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் 30-07-2024.அன்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.  
அங்கு 44 ஆண்களும் 9 பெண்களும் கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் 
குணசேகர தெரிவித்தார்.  
புத்தளம், கல்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து இந்தக் குழு கடத்தலை மேற்கொண்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னர் விசாரணை அதிகாரிகள் ஹோட்டலை
 சோதனையிட்டனர். 
அங்கு 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணனிகள் மற்றும் பெருந்தொகையான சிம் அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கணினி குற்றப்பிரிவு 
அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர். 
அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் மேலும் இரு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை போலீசார் கைப்பற்றினர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் இணையம் ஊடாக பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் கைது

நாட்டில் மொனராகலையில் பொது வைத்தியசாலையில் பரபரப்பு

செவ்வாய், 30 ஜூலை, 2024

 

நாட்டில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  
புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு இயந்திரம் ஒன்று கொங்கிறீட் தடவ சென்ற போது, ​​கட்டுமான கட்டிடத்தை அண்டிய குழந்தை வார்டின் கூரை மீது கலவையான கான்கிரீட் அடுக்கு விழுந்து குழந்தை வார்டின் கூரை இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
அப்போது, ​​வார்டில் இருந்த பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மீது கான்கிரீட் சரிந்து விபத்து ஏற்பட்டது. இன்று (30.07.2024) காலை
 இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக மூன்று தாய்மார்கள் மற்றும் மூன்று சிசுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
விபத்து காரணமாக, வார்டில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் தற்போது வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  
எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளரிடம் கேட்ட போது, ​​எவருக்கும் காயம் ஏற்படவில்லை 
என தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் மொனராகலையில் பொது வைத்தியசாலையில் பரபரப்பு

நமது உடலுக்கும் மனதிற்கும் நல்லதை செய்யும் நாவல் பழத்தின் நன்மைகள்

திங்கள், 29 ஜூலை, 2024

நமது உடலுக்கும் மனதிற்கும் நல்லதை செய்யும் நாவல் பழத்தின் சத்துக்களை அறிந்து கொள்வோம். நாவல் பழங்கள், விதை, இலை
 மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. 
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், 
இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.
 நாவல் பழத்தின் விதையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு 
குடித்து வரலாம்.
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். 
அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
 வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து 
வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, 
அந்நீரை பருக வேண்டும்.
 சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும். நோய் நாவல் பழங்களை
 சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். எப்படியெனில் நாவல் பழங்களானது மெலனினை செல்களாக செய்யத் தூண்டுகிறது.
 அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது. பழத்தினை அளவாக 
சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நமது உடலுக்கும் மனதிற்கும் நல்லதை செய்யும் நாவல் பழத்தின் நன்மைகள்

நாட்டில் வவுனியாவில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய மூவர் கைது

ஞாயிறு, 28 ஜூலை, 2024

நாட்டில் வவுனியா நெடுங்கேணி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி கப் ரக வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட 15 மாடுகளுடன் மூவர் வவுனியா விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு 
இடமான வாகனத்தை வவுனியா ஹொரவப்பொத்தான வீதி 6ம் கட்டை பகுதியில் வைத்து 
வழிமறித்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தில் முறையான அனுமதி ஏதும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 15 மாடுகளை
 மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணம் செய்த காட்டகஸ்கிரிய
 பகுதியை சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் கைது 
செய்துள்ளனர். 
கைது செய்யப்பட்டவர்களை விசாரனையின் பின் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.  என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வவுனியாவில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய மூவர் கைது

மானாங்குடியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

சனி, 27 ஜூலை, 2024

இலங்கைக்கு ராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து  கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 லட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி 
மாத்திரைகள் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து தலைமறைவான சந்தேக நபர் ஒருவரை தீவிரமாக 
தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் வேதாளை மரைக்காயர் பட்டினம், மானாங்குடி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, சமையல் மஞ்சள், இஞ்சி, வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு 
கடத்தப்பட்டு வருகிறது.
கடல் வழியாக நடக்கும் கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய சுங்கத்துறை, கடலோர காவல் படை, கடற்படை மற்றும் மத்திய, மாநில 
உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் அதையும் மீறி சமீப காலமாக அதிக அளவில் கடத்தல் சம்பவங்கள் 
நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளர் கண்ணதாசனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து போதைப்பொருள் இலங்கைக்கு
 கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குழு புது படத்திலிருந்து மானாங்குடி வரை உள்ள கடற்கரை பகுதியில் தீவிர
 சோதனை நடத்தினர்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி கடற்கரை பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது. அதை திறந்து சோதனை செய்த போது அதில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது 
தெரியவந்தது.
இதனை எடுத்து அந்த பெட்டிகளை மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து ஆய்வு செய்தபோது ஒரு பெட்டியில் 57 ஆயிரம் மாத்திரைகள் வீதம் 10 பெட்டியில் 5 லட்சத்து 70 ஆயிரம் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வலி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை சரக்கு வாகனம் மூலமாக ராமநாதபுரம் சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 
வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு நேற்று இரவு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும், இந்த
 கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதால் அவரை தீவிரமாக தேடி 
வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 மேலும் கைப்பற்றப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளின் மதிப்பு சுமார் 1 கோடி 80 லட்சம் என்றும் சர்வதேச மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது



READ MORE - மானாங்குடியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

விரைவில் வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் குறைந்த விலையில் கொழும்பிற்கு

வெள்ளி, 26 ஜூலை, 2024

விரைவில் வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மலிவான பழங்களை கொழும்பிற்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள நுகர்வோர் அதிக விலை கொடுதது பழங்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடமாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் விளைவிக்கப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு செல்வதில் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் போதிய 
போக்குவரத்து வசதிகள் இல்லாமை மற்றும் களஞ்சிய 
வசதிகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என்பதை
 சுட்டிக்காட்டிய ஆளுநர், 
தான் இது குறித்து போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்காக விசேட நிதி மூலமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனூடாக வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு புகையிரத நிலையங்களிலும் களஞ்சியசாலைகள் நவீனமயப்படுத்தப்பட்டு 
வடக்கின் பழங்களை கொழும்பிற்கு கொண்டு வருவதற்கான துரித அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர். உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - விரைவில் வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் குறைந்த விலையில் கொழும்பிற்கு

நாட்டில் நாளைமுதல் சில நாட்களுக்கு தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்

வியாழன், 25 ஜூலை, 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024  ஜூலை 25ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2024 ஜூலை 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் நாளைமுதல் சில நாட்களுக்கு தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்

இலங்கையில் முட்டை விலை குறித்து புதிய சர்ச்சை

புதன், 24 ஜூலை, 2024

நாட்டில்  முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை
 குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி 
செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
 "முட்டை ஒரேயடியாக 6 ரூபாய் விலை 
குறைந்துள்ளது.
 இது தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கைகளையும் பெற்று 
வருகின்றேன். தொடர்ந்து சோதனை செய்து
 வருகிறோம். 40 ரூபாய்க்கு கூட முட்டை விற்பனை செய்ய முடியாவிட்டால் இறக்குமதி செய்ய
 வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் பண்டிகை
 காலம் டிசம்பரில் தொடங்கும். கேக் தயாரிப்பாளர்கள் நிறைய முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
 இவர்களுக்கு தேவையான முட்டைகள் இல்லை என்றால், அவர்களுக்கு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும். இல்லை எனில், சரியான விலையில் முட்டைகளை வழங்கி நுகர்வோரை பாதுகாக்க வேண்டும்'' என்றார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் முட்டை விலை குறித்து புதிய சர்ச்சை

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

செவ்வாய், 23 ஜூலை, 2024

 இலங்கையில்இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் 
தெரிவித்துள்ளது.
 40 அடி கொள்கலனில் பல வகையான பொருட்களை இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சனத் மஞ்சுள 
தெரிவித்துள்ளார்.
 இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என 
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து 
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை
 என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

ஜனாதிபதி நாட்டில் எரிபொருள் விலையை மேலும் குறைக்க தீர்மானம்

திங்கள், 22 ஜூலை, 2024

நாட்டில் சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. 
சில செலவுகளை 
நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க 
வாய்ப்பு உள்ளது. வலுசக்தி விலைகளுக்கும் இதுவே 
நடைபெறுகிறது. 
சந்தை தொடர்பில் இன்னும் பல்வேறு விடயங்கள் உள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 இலங்கை நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பினால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு 
மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘இலங்கையில் உள்ள நுண், சிறு, 
நடுத்தர நிறுவனங்களின் ஆற்றலுடன் பொருளாதாரத்தை
 மீட்டெடுக்கும் தீர்மானமிக்க முயற்சி’ 
என்ற வேலைத் திட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
 இதனை குறிப்பிட்டார். நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
 கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வீழ்ச்சியுடன், சிறு வர்த்தகங்கள் உட்பட அனைத்து 
வர்த்தகங்களும் வீழ்ச்சி கண்டன. அனைத்து நுண்தொழில்துறைகளும் முற்றிலும் நட்டமடைந்தன. 
வங்கிக் கட்டமைப்பும் பாதிப்புக்குள்ளானது. எனவே, அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற பின்னர், ஸ்திரத்தன்மையை உருவாக்கி, 
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்காக செயற்படுவதே எமது 
முதல் பொறுப்பாக அமைந்தது.
 அச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்திற்கு செல்லுமாறு எமக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும் கேட்டுக்கொண்டன. அப்போது உடன்பாடு ஏற்பட்டு அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தன.
 உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்ளுடன் உடன்படிக்கையை எட்டிய பின்னர் அந்தக் கட்டமைப்புடன் செயற்படலாம் என்று தனியார் கடன் வழங்குநர்களும்  தெரிவித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - ஜனாதிபதி நாட்டில் எரிபொருள் விலையை மேலும் குறைக்க தீர்மானம்

இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

ஞாயிறு, 21 ஜூலை, 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024  ஜூலை 21ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2024 ஜூலை 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு 
வெளியிடப்பட்டது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை,
 மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான 
வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 
30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

வயதான தம்பதியினரை விமானத்திலிருந்து இறக்கிவிட்ட விமான நிறுவனம் கூறும் காரணம்

சனி, 20 ஜூலை, 2024

கனடாவில், விமான நிறுவனம் ஒன்று ஒரு இந்திய தம்பதியருக்கு விமானத்தில பயணிக்க மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் கோபமடைந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில், ரொரன்றோவிலிருந்து வான்கூவருக்கு பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்கள் போரூர் குமணன், 
கல்பனா தம்பதியர்.
விமானத்தில் ஏறுவதற்காக செல்லும்போது, அவர்கள் கையில் வைத்திருந்த அனுமதிக்கப்பட்ட அளவிலான பைகளுடன் அவர்கள் விமானத்தில் ஏற பணியாளர் ஒருவர் அனுமதி மறுத்துள்ளார்.
தங்களுக்குத் தேவையான மருந்துகளும் விலையுயர்ந்த நகைகளும் பையில் இருப்பதால், பையை சரக்குகள் வைக்கும் இடத்தில் வைக்க இயலாது என குமணன் கூற, இந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் இனி நீங்கள் ஒருபோது பயணிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் ஒரு பணியாளர்.
வேறு வழியில்லாமல், கடைசி நேரத்தில் ஃப்ளேர் விமான நிறுவன விமானம் ஒன்றில் 1,927 டொலர்கள் செலுத்தி டிக்கெட் வாங்கி 
பயணித்திருக்கிறார்கள் தம்பதியர்.
இந்த சம்பவத்தால் கோபமடைந்துள்ள குமணன், நாங்கள் என்ன குற்றவாளிகளா என்கிறார். விமான நிறுவனத்துக்கு நடந்ததை விளக்கி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள குமணன், டிக்கெட்டுக்கான தங்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கோரியுள்ளார்
வெஸ்ட்ஜெட் விமான நிறுவன செய்தித்தொடர்பாளரான ஜூலியா கெய்சரை ஊடகங்கள் இந்த புகார் தொடர்பாக தொடர்பு 
கொண்டபோது, குமணன் தம்பதியர் தங்கள் விமான நிறுவன விமானத்தில் பயணிக்க தடையேதும் விதிக்கப்படவில்லை என்று
 அவர் கூறியுள்ளார்
அத்துடன், அவர்கள் டிக்கெட்டுக்காக செலுத்திய 800 டொலர்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர்
 தெரிவித்துள்ளார்.
விமானத்தில் ஏறும்போது அந்த பயணிகள் நடந்துகொண்ட விதம் காரணமாகத்தான் அவர்கள் விமனத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஜூலியா தெரிவித்துள்ளார்.
இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலும், முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளும் பயணிகளை வெஸ்ட்ஜெட் நிறுவனம் பொறுத்துக்கொள்வதில்லை என்றும் ஜூலியா கூறியுள்ளார்.
ஆனால், கடைசி நேரத்தில் மற்றொரு விமானத்தில் பயணிக்க நேர்ந்ததால் கூடுதலாக செலவான 1,127 டொலர்கள் குறித்து அவர் எதுவும் 
கூறவில்லை.
தான் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளவில்லை என்று கூறும் குமணன், தங்கள் மருந்துகளையும் விலையுயர்ந்த நகைகளையும்
 விமானத்தில் ஏற்றவேண்டியதன் அவசியத்தை விளக்கியும் அந்தப் பணியாளர் அதை சட்டை செய்யவில்லை என்றும், ஆகவே, 
தான் அப்செட் ஆனதால் சத்தமாக பேசியதாகவும் 
தெரிவிக்கிறார்.
ஒரு ஜிப் லாக் பை கொடுத்திருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும், அல்லது அவர்கள் தனக்கு ஏதாவது ஒரு தீர்வு கூறியிருக்கலாம்
 என்கிறார் அவர்.
அவர்கள் எனக்கு முழு செலவையும் திருப்பிக் கொடுத்தாகவேண்டும் என்றும், அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்பதற்கு எனக்கு விளக்கமளிக்கவேண்டும் என்று குமணன்கூறுகிறார் .என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - வயதான தம்பதியினரை விமானத்திலிருந்து இறக்கிவிட்ட விமான நிறுவனம் கூறும் காரணம்

நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு நடுக் கடலில் பிறந்த குழந்தை

வெள்ளி, 19 ஜூலை, 2024

யாழ்- நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவமாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிக்கட்டுவான் இறங்குதுறை நோக்கி அழைத்து வந்துள்ளனர். இதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை 
பிரசவித்துள்ளார்.
 தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிக்கட்டுவான் அழைத்து வந்து , அங்கு தயார் நிலையில் இருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று 
அனுமதித்துள்ளனர்
. தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு நடுக் கடலில் பிறந்த குழந்தை

இலங்கையில் பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்

வியாழன், 18 ஜூலை, 2024


இலங்கையில் உயர்தர மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், இடைநீக்கம் செய்யப்பட்டார். பாடசாலைக்கு சமுகமளிக்காது, 
உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த
 ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்
இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர், அநுராதபுரம் பாடசாலையொன்றில் கற்பிப்பவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆசிரியர், பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளில் பணத்திற்காக கற்பிப்பதாக பெற்றோர்கள் குழுவொன்று மாகாண கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு
 செய்திருந்தது.
அந்த முறைப்பாட்டின் பேரில், மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஏனைய பணியாளர்கள் குழுவுடன் இணைந்து பாடசாலையை ஆய்வு செய்த போது, ​​இந்த ஆசிரியர், பாடசாலைக்குச் சென்று, ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, பாடசாலைக்கு வெளியே சென்று
 பிரத்தியேக வகுப்பில் மாணவர்களுக்கு கற்பித்ததைக்
 கண்டுபிடித்தனர்.
இவ்வருடத்தில் இதுவரையிலும் எவ்வித அங்கீகாரமும் இன்றி இந்த ஆசிரியர் 26 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன்படி, குறித்த ஆசிரியரை மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன், புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்

நாட்டில் அடுத்த மாதம் முதல் தேசிய அடையாள அட்டையில் வரவுள்ள மாற்றம்

புதன், 17 ஜூலை, 2024

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆள்பதிவுத் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
 தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென ஆள்பதிவுய் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
 புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளது
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அடுத்த மாதம் முதல் தேசிய அடையாள அட்டையில் வரவுள்ள மாற்றம்

நாட்டில் பல வகையான உணவு பொதிகளின் விலைகள் குறைக்கப்படும்

செவ்வாய், 16 ஜூலை, 2024

நாட்டில் மின்சாரக் கட்டணக் குறைப்பிற்கு நிவாரணமாக இன்று (16.07) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
இதன்படி சாதாரண சோற்றுப் பொதி  ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
 இதேவேளை, சோறுமற்றும் கொத்துவின் விலை 25 ரூபாவினாலும், பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டியின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது. 
ஒரு சாதாரண தேநீர் 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகையை வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உணவகங்களை தலைவர் கேட்டுக் கொண்டார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் பல வகையான உணவு பொதிகளின் விலைகள் குறைக்கப்படும்

நீங்கள் ஆடிப் பிறப்பிற்கு ஆடிட் கூழ் செய்யும் முறை விபரம் உள்ளே

திங்கள், 15 ஜூலை, 2024

ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே..கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கடடையும் தின்னலாம் தோழர்களே.... ஆம் நாளையதினம் ஆடிப் பிறப்பு. 
ஆடிப்பிறப்பு என்றாலே தமிழர்களை பொறுத்தவரையில் ஆடிக் கூழ் முக்கியம் பெறுகிறது. அந்தவகையில் ஆடிட் கூழ் எப்படி செய்யலாம் என பார்ப்போம்: 
 ஆடிக்கூழ் தேவையான பொருட்கள்:
 750 கிராம் பனங்கட்டி
 1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி
 ½ கப் முழுப் பயறு
 ½ கப் வறுத்த உளுத்தம் மா
 ½ கப் தேங்காய் சொட்டு 2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2) 3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+) ½ மே.க மிளகு(-) உப்பு
 செய்முறை: 
 அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). 
மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும். தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை 
கொதிக்க விடவும்.
 முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை 
வடித்து விடவும்.
 அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும். 
 மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது 
உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். 
அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும். சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். கொதித்து
 இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
 ஆடிக் கூழ் தயார்! 
குறிப்பு: கூழ் சிறிது தண்ணித் தன்மையாக வேண்டும் என்றால் 1 கப் அரிசி எடுக்கவும். பயறு அதிகம் விரும்பாதவர்கள், 6 மே.க பயறு சேர்க்கவும். 
சில்லுகள் / உருண்டைகள் அதிகம் விரும்பாதவர்கள் 2/3 பங்கு மாவை கரைத்தும் மீதி 1/3 பங்கு மாவில் சில்லுகள் / 
உருண்டைகளை செய்யவும். வறுத்த உளுத்தம் மா, தேங்காய் சொட்டு மற்றும் பயற்றின் அளவை, உங்கள் ருசிக்கேற்ப்ப கூட்டிப் குறைக்கவும்.
 என்பதாகும்
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நீங்கள் ஆடிப் பிறப்பிற்கு ஆடிட் கூழ் செய்யும் முறை விபரம் உள்ளே

நாட்டில் கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தை புனரமைக்கு நடவடிக்கை

ஞாயிறு, 14 ஜூலை, 2024

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தின் நிலைமைகளை பார்வையிட்டார்.
கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்திற்காக வழங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் நிலைமைகளை பார்வையிட்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார
 அவர்கள் அதனை சீர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களுடனும் மாவட்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடலினை
 மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்ட முதன்மை வேலைகளுக்கான மதிப்பீட்டினை வழங்குமாறும் அதற்குரிய நிதி ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தை புனரமைக்கு நடவடிக்கை

நாட்டில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பு

சனி, 13 ஜூலை, 2024

நாட்டில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது
வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்எப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்பு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே 
குறிப்பிட்டுள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றார்.
போலியான தந்திரோபாயங்கள் மூலம் புகை பரிசோதனை சான்றிதழைப் பலர் பெறுகின்ற போதிலும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 
மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் வீதியில் வாகனங்கள் செலுத்தும் போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சோதனைகளை மேற்கொண்டு 
வருவதாக அவர் கூறினார்.
அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பு

இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த ஆறு வெளிநாட்டவர்கள் கைது

வெள்ளி, 12 ஜூலை, 2024

இலங்கையில் வீசா இன்றி  தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்களையும், வரியில்லா இலங்கைக்கு சிகரெட்டுக்களை கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவரையும் கட்டுநாயக்க பொலிஸார் கைது
 செய்துள்ளனர்.
கட்டுநாயக்கா, ஆடியம்பலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக 
கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த
 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளை (50 பொதிகள்) வெளிநாட்டவர் ஒருவர் வைத்திருந்ததாக பொலிஸார்
 தெரிவித்தனர்.
மேலும் 25 தொடக்கம் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் 6 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த ஆறு வெளிநாட்டவர்கள் கைது

நாட்டில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகளை மக்கள் முறையிடலாம்

வியாழன், 11 ஜூலை, 2024

நாட்டில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகள், பணி செய்யாத நிலை, கடமை நேரத்தில் உத்தியோகத்தர்கள் இல்லாமை, 
கடமை நேரத்தில் தனியாரில் பணியாற்றுதல் உள்ளிட்ட முறைப்பாடுகளை தகுந்த ஆதாரங்களுடன் பொதுமக்கள் 
மேற்கொள்ள முடியும்.
 Senior Assistant Secretary (Flying Squad) Ministry of Health No26, Medi House Building Sri Sangaraja Mawatta. Colombo 10 T.P & Fax 0112 112 706 என்ற முகவரிக்கு 
முறையிடலாம்.
 அவ்வாறு செய்யப்படும் முறைப்பாடுகளின் விசாரணை நிலை, முடிவுகள் தொடர்பாக அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தவும்.
 வைத்திய நிபுணர்களில் பெரும்பாலானோர் 4pm to 6pm or 8pm வரை மேலதிக நேரம் கோரிப் பெறுகின்றனர். ஆனால் அந்நேரத்தில் அவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்கின்றனர்.
 அதேபோன்று, சத்திரசிகிச்சை கடமை நேரத்தில்/ ச.சிகிச்சை செய்த மறுநாள் Observation கடமை நேரத்தில் தனியாரில் 
பணியாற்றுகின்றனர்.
 இத்தகைய நுணுக்கமான விடயங்களையும் ஆதாரங்களுடன் முறைப்பாடாக பதிவு செய்யமுடியும் என சுகாதார அமைச்சிலிருந்து அறியத்தரப்பட்டுள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகளை மக்கள் முறையிடலாம்

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

புதன், 10 ஜூலை, 2024

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
 குறித்த மின்பிறப்பாக்கியானது, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் வழிகாட்டலுக்கு அமைய வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
 இதன் படி, 150kVA வலுவுடைய இந்த மின்பிறப்பாக்கி தற்காலிக அடிப்படையில் இன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை, புதிதாக வழங்கப்பட்ட இந்த மின்பிறப்பாக்கியை பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார்.
 இந்த நிலையில், நிரந்தரமாக பயன்படுத்தும் வகையில் மின்பிறப்பாக்கியொன்றை பெறுவதற்கு 
தற்போது ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
அதற்கான அறையொன்றை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தியுள்ளார்.என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

நாட்டில் கடலோர ரயில் பாதையூடான போக்குவரத்து பாதிப்பு

செவ்வாய், 9 ஜூலை, 2024

நாட்டில் ரயில் தடம் புரண்டதால், கடலோர ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
இன்று (09.07) காலை பாணந்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த புகையிரதமே கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், 
இதன் காரணமாக கரையோரப் புகையிரதத்தின் இரண்டு தடங்களும் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது.  
இதன் காரணமாக காலியில் இருந்து இயக்கப்படும் புகையிரதங்கள் கொம்பஞ்சாவீதிய நிலையம் வரை 
மட்டுமே பயணிக்கும்.
எவ்வாறாயினும், இது வரை தடம் புரளும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இதன் காரணமாக ரயில் சேவை வழமைக்கு திரும்ப இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கடலோர ரயில் பாதையூடான போக்குவரத்து பாதிப்பு

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

திங்கள், 8 ஜூலை, 2024

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சுகயீன விடுமுறையின் காரணமாகவும் அவர் 
வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை
 வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய 
சுகாதார அமைச்சினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்காக செல்வதாக வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு தெரிவித்தார்.
 அவரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துச் செல்லும்போது மக்கள் அவரை செல்ல விடாது தடுத்தனர். இருப்பினும் மக்களது எதிர்ப்பின் மத்தியிலும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா