உடல்நலச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல்நலச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நீங்கள் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடித்தால் என்ன பயன் தெரியுமா

வியாழன், 23 ஏப்ரல், 2026

நீங்கள் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடித்ததால் என்ன நடக்கும் என்று இந்த பதிவில் காணலாம். பொதுவாகவே டீ என்பது அனைவராலும்
 விரும்படக்கூடிய ஒன்று. 
 இதற்கு ஒரு தனி முக்கியத்துவம் உள்ளது. 
சிலர் காலை எழுந்ததும் டீ குடித்துவிட்டு தான் நாளை தொடங்குவார்கள்,வேறு சிலர் காலை,மதியம்,இரவு என்று மூன்று வேலையும் டீ குடிப்பது 
பழக்கமாக உள்ளனர்.
ஆனால் டீ அளவுக்கு அதிகமாக குடித்தரால் உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும்.அது தெரிந்தும் பலர் அதை தம் உணவாகவே மாற்றி விடுகிறார்கள்,காலையில் எழுந்ததும் டீயை குடிக்காமல் 
சிலரால் இருக்க முடியாது.
நம்மில் அநேகர் காலையில் டீ குடித்துவிட்டு தண்ணீர் குடிக்கிறோம்,பலர் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கிறார்கள்.
ஆனால் ஆயுர்வேதம்படி தண்ணீரை டீ அருந்துவதற்கு முன் குடிப்பது நல்லது என கூறப்படுகிறது.இதனால் நமக்கு பல நன்மைகள் 
கிடைக்கிறது.
நாம் டீ குடிப்பதற்கு ஒரு 10-15 நிமிடங்கள் முன் நாம் தண்ணீர் குடித்தால் டீயில் உள்ள அமிலத்தன்மையை பாதுகாக்க ஒரு படலம் நம் வயிற்றில் உருவாகிறது.இது நமக்கு நெஞ்செரிச்சலை தடுக்கிறது.
தண்ணீர் குடிப்பது நம் பற்களையும் பாதுகாக்கிறது.டீயில் டானின் உள்ளதால் இது நம் பற்களை எளிதில் கறையாக்கிறது.ஆனால் நாம் தண்ணீர் குடிப்பதால் நம் பற்களில் நீர் படலம் உருவாகி பற்களை கறையாக்குவரை தடுக்கிறது.
மேலும் தண்ணீர் குடிப்பதால் நமக்கு உடலில் உள்ள நீரின் அளவு சமமாக இருக்க உதவுகிறது.
நம்மில் பலர் டீ குடித்தவுடனே தண்ணீர் குடிப்பபோம் ஆனால் இது நமக்கு தீங்கை விளைவிக்கும்.ஏனென்றால் நாம் டீயை சூடாக குடித்து பின் உடனே தண்ணீர் குடித்தால் இரண்டின் வெப்பநிலைகளும் சேர்ந்து நம் பற்களின் மேலுள்ள எனாமலை பாதிக்கும்,இதனால் நமக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்தும்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

READ MORE - நீங்கள் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடித்தால் என்ன பயன் தெரியுமா

நமது உடலுக்கும் மனதிற்கும் நல்லதை செய்யும் நாவல் பழத்தின் நன்மைகள்

திங்கள், 29 ஜூலை, 2024

நமது உடலுக்கும் மனதிற்கும் நல்லதை செய்யும் நாவல் பழத்தின் சத்துக்களை அறிந்து கொள்வோம். நாவல் பழங்கள், விதை, இலை
 மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. 
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், 
இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.
 நாவல் பழத்தின் விதையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு 
குடித்து வரலாம்.
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். 
அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
 வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து 
வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, 
அந்நீரை பருக வேண்டும்.
 சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும். நோய் நாவல் பழங்களை
 சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். எப்படியெனில் நாவல் பழங்களானது மெலனினை செல்களாக செய்யத் தூண்டுகிறது.
 அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது. பழத்தினை அளவாக 
சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நமது உடலுக்கும் மனதிற்கும் நல்லதை செய்யும் நாவல் பழத்தின் நன்மைகள்

உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புக்கள்

செவ்வாய், 11 ஜூன், 2024

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை பெரும்பாலும் உட்கார்ந்த வாழ்க்கைமுறைக்குள் தள்ளிவிட்டது. நீண்ட நேரம் உட்கார்ந்த வாழ்க்கைமுறையானது நம் உடலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. 
இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க ஒரே வழி அதிக உடல் உழைப்பில் ஈடுபடுவதாகும். போதுமான உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது,
 நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புக்ளை எதிர்த்துப் போராட அவசியமாகும். 
ஆனால் உடல் செயல்பாடுகளுக்கு எத்தனை மணி நேரம் ஒதுக்க வேண்டும், எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் அல்லது உட்கார வேண்டும்? ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு இந்த முக்கிய கேள்விகளுக்கானப் பதிலைக் கொண்டுள்ளது.
 சிறந்த ஆரோக்கியத்திற்கு, ஒருவரின் நாளானது குறைந்தது எட்டு மணிநேர தூக்கம், மிதமான அல்லது தீவிரமான பயிற்சிகளை உள்ளடக்கிய நான்கு மணிநேர உடல் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக 
இருக்க வேண்டும். 
மிதமான செயல்பாடு என்பது வேலைகளைச் செய்வதிலிருந்து இரவு உணவு தயாரிப்பது வரை இருக்கலாம், அதேசமயம் மிதமான 
மற்றும் தீவிரமான உடற்பயிற்சியானது 
விறுவிறுப்பான நடை
 அல்லது ஜிம் பயிற்சி போன்ற இயக்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புக்கள்

நாம் கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா

வெள்ளி, 29 மார்ச், 2024

 இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் கிரீன் டீ குடிப்பதை பழக்கமாக்கி வைத்துள்ளனர். இந்த டீயை குடிப்பதால் உடல் 
ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஒரு பக்கமாக இருக்க 
இதனால் பக்க விளைவுகளும் வருகின்றது. 
உலகளாவிய ரீதியில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த டீ உடல் எடையை கட்டப்படுத்த நினைப்பவர்கள் தான் அதிகமாக குடிக்கின்றனர்.
கிரீன் டீ குடித்தால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறுவயிற்றில் கிரின் டீ குடிப்பதால் அது வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தகூடும். இதனால் நெஞ்செரிச்சல், அமிலச்சுரப்பு, செரிமானப்பிரச்சனை போன்றவை வரலாம்.
எனவே கிரின் டீ அருந்தவதற்கு முன்னர் கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு கிரின் டீ குடித்தால் ஆரோக்கியம் மேம்படும். அதிகமாக கிரீன் டி குடித்தால் அது எமக்கு தலைவலியை ஏற்படுத்துவதோடு தலைசுற்றும் 
ஏற்படுத்தலாம்.
இதில் காணப்படும் ஒரு வகை ரசாயனம் எமது உறக்கத்தை இல்லாமல் செய்யும். கிரீன் டீ குடிக்க குடிக்க எமது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைந்து கொண்டே செல்லும்.
இது புரதத்தின் அளவை குறைத்து எமக்கு ரத்த போக்கை ஏற்படுத்தும். இதிலுள்ள காபின் கல்லீரலுக்கு கூடிய அழுத்தத்தை 
கொடுக்கும்.
இதை அதிகமாக குடிப்பவர்கள் ஒரு வகை எலும்பு நோயால் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம்.
கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த டீ குடித்தால் கருச்சிதைவு ஏற்படலாம். குழந்தையின் வளர்சிதை பாதிக்கப்படலாம்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாம் கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா

மசகு எண்ணெய்யின் விலைசர்வ தேச சந்தையில் வீழ்ச்சி

புதன், 6 மார்ச், 2024

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை.06-03-2024. இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.22 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு 
செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.05 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
 இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.94 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மசகு எண்ணெய்யின் விலைசர்வ தேச சந்தையில் வீழ்ச்சி

மீன் வகை உணவு கர்ப்பிணிப்பெண்களின் ஆரோக்கியத்திற்கு சாலச்சிறந்ததாம்

செவ்வாய், 23 ஜனவரி, 2024

கர்ப்பிணிப்பெண்களின் போசணையானது நம்நாட்டில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி மூலம் நமக்கு அறியக்கிடைக்கிறது.
இத்தகைய காலக்கட்டத்தில் அவர்கள் இதனை கருத்திற் கொள்ளாவிடின் பிறக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்தான 
நிலைமைகளை உருவாக்க கூடும். இவர்களிற்கு விலைமதிப்பு மிக்க உணவு வகைகளை வாங்கி உட்கொள்ள போதுமான வசதியில்லாமல் 
இருக்கலாம்.
அதற்கு கர்ப்பிணிப்பெண்கள் மீன் வகை உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்குமென ஆய்வில் தெரியவந்துள்ளது. நமது ஊரில் இந்த மீன் வகை தாராளமாக 
கிடைக்கும்.
இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கர்ப்பிணிப்பெண்கள் மீன் வகை உணவை அதிகம் உட்கொண்டால் பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சியுடனும், மூளை 
சம்பந்தமான நோய்கள் தாக்காமலும் இருக்குமென 
கண்டறியப்பட்டுள்ளது
கர்ப்ப காலத்தில் முதலில் சிசுவிற்கு முண்ணான் விருத்தியாவதாலும், கண் மற்றும் கை தொடர்பு மிகச் சிறப்பாக செயல் படவும் இந்த மீன் உணவு காரணமாக அமைகிறது.
இங்கு மீன் உணவு எனும் போது மீனில் காணப்படும் கொழுப்பமிலமான போலிக்கமிலம் முண்ணான் விருத்திக்கும், மூளை 
வளர்ச்சிக்கேதுவான ஒமேகா - 3 கொழுப்பமிலம் அங்கு உள்ளதாலாகும். தாயின் இதய ஆரோக்கியத்திற்கும் இந்த ஒமேகா - 3 கொழுப்பமிலம்
 இதமானது.
எனவே மீன் உணவை அளவுக்கதிகமாக எடுக்காமல் அளவாக உட்கொண்டு நல்ல புத்திகூர்மையான குழந்தைகளை ஆரோக்கிமாக பெறவும் மீன் உணவு ஏதுவாக அமையும்.
குறிப்பு - அளவுக்கதிகமான மீன் உணவு குழந்தைகளின் புத்திகூர்மையை மழுங்கவும் செய்யும் .என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






READ MORE - மீன் வகை உணவு கர்ப்பிணிப்பெண்களின் ஆரோக்கியத்திற்கு சாலச்சிறந்ததாம்

திருகோணமலை கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது

சனி, 5 ஆகஸ்ட், 2023

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட குழுவொன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நிலாவெளி மற்றும் லங்காபடுன பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 பேரையே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்கள், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 116 கடல் அட்டைகள், மூன்று படகுகள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றினர்.
நிலாவெளி கடற்பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகத்துக்கிடமான படகுகளில் பயணத்தவர்களை சோதனையிட்ட போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டர்.
மேலும், லங்கனபுன கடற்பரப்பில் கடல் அட்டைகளை பிடிப்பதற்காக படகொன்றில் சென்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 இந்த கைது நடவடிக்கை நேற்று ( 04) அதிகாலையில்
 இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் இவர்கள் தம்பலகமுவ மற்றும் சீனக்குடாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - திருகோணமலை கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது

ஒரே தடவையில் மாம்பழம் 2 கிலோவிற்கும் அதிகமாக உட்கொள்ளலாம். அதன் ஆரோக்கியப் பண்புகள்

சனி, 3 ஜூன், 2023

மாம்பழம் மாமரத்தில் கோடை காலத்தில் அதுவும் தற்போதைய வெப்பத்தில் கொளு கொளுவேன பழுத்துத் தொங்கும் கனியாகும்.
முக்கனிகளுள் ஒன்றான மாம்பழம் Mangifera Indica என்ற 
விஞ்ஞானப் பெயரால் அழைக்கப்படும்.. மாம்பழம், பழமாகவும், சாறாகவும், பாலுடன் கலந்தும், ஊறுகாயாகவும், குளிர்களி (Ice Cream) வடிவத்திலும், சர்க்கரையுடன் சேர்த்து உலர்த்தி இனிப்புக்கட்டிகளாகவும் (Chocolate) நம் வாழ்க்கையில் பயன்பட்டு வருகிறது.
இந்தப் பழத்தில் உயிர்ச்சத்துக்களான A, B மற்றும் C , புரதம் முதலானவை அதிகம் உள்ளதால் கண்களுக்கு வலிமை தருகின்றது. வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். உதிரக்குறைகள் நீங்கும்.
 இதயம் வலிமை பெறும். சித்தர்கள் மாம்பழத்தில் பல பக்கவிளைவுகள் உள்ளதால் சரியான முறிவுப்பொருளுடன்தான் உண்ணவேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.
 முறிவுப்பொருள்களாக அவர்கள் சொல்வது பால், தயிர், மற்றும் மாம்பழக் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு ஆகியவைதான். தனியாகச் சாப்பிடுவதால் கழிசலும், சொறி, சிரங்கு போன்ற தோல்நோய்கள் வரும் 
எனக்கூறுகிறார்கள். 
இந்த மரத்தின் மற்ற பாகங்களனைத்தும் சிறப்பு மருத்துவக் குணங்களுடையவை.  மாலைக்கண் நோயுள்ளவர்கள், வயிற்று வீக்கமுடையவர்கள் (மகோதரம் என்று இதைச் சொல்வார்கள்), இளமையிலேயே தோல் சுருக்கமுடையவர்கள், நரம்புத் தளர்ச்சியுடையவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள், கனிந்த மாம்பழங்களைப் பாலுடன் காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் உண்டுவந்தால் 40 நாட்களில் நல்ல முன்னேற்றமேற்படும்.
 மற்ற எல்லாப் பழங்களையும் ஓரளவுக்குத்தான் சாப்பிட முடியும், ஆனால் மாம்பழம் மட்டும் இரண்டேகால் கிலோ அளவுவரை
 ஒரே நேரத்தில் உண்ணமுடியும் என்பது இதன் மற்றொரு சிறப்பு. 
இதன் கொட்டையினை உடைத்துப் பருப்பினை எடுத்து 
நெய்யில் வறுத்துப் பொடியாக்கி எடுத்து வைத்துக்கொண்டு 
கால் தேக்கரண்டி அளவு தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்துச் 
சாப்பிடுவதால் மாம்பழம் உண்ணுவதால் உண்டாகும் பக்கவிளைவுகளிருந்து தப்பலாம்.
மாவின் இலை, பூ, பிஞ்சு, கொட்டை, பட்டை, வேகப்பட்டை ஆகிய அனைத்துப் பொருட்களும் துவர்ப்புச் சுவையுடையதாகையால் நரம்புகளையும், தசை நார்களையும் இறுக்கிச் சிறப்பான உதிரப் பெருக்கு, சீழ்வடிதல் ஆகிவற்றை நிறுத்தக் கூடியது. 
பட்டுப்போன்ற இளஞ்சிவப்பு நிறமுள்ள மாந்தளிர்களைப் பறித்து உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு போட்டுப் பின் ஆறியதும் பருகிவருவதால் சர்க்கரை நோயின் 
தீவிரம் குறையும். 
அடிக்கடி மூத்திரம் பிரிவது கட்டுப்படும். பச்சையாக அரைத்துச் சுண்டைக்காயளவு சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கு நெல்லிக்காயளவும் மோர் அல்லது தயிரில் கலந்துதர வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, 
உதிர பேதி நிற்கும்.
 இதன் முற்றிய இலைச்சாறு 4 தேக்கரண்டி, பால் 2 தேக்கரண்டி, நெய் 1 தேக்கரண்டி கலந்து 3 மணிநேரத்துக்கு ஒருமுறை உண்ண பெண்களின் பெரும்பாடு, மற்றும் மூல உதிரப் போக்கு நிற்கும். 
நாலைந்து இலைகளைப் பிய்த்துப் போட்டுத் தேன்விட்டு வறுத்து 1 சிறுகுவளை தண்ணீர்விட்டு 1/2 சிறுகுவளையாகச் சுருங்கும்படி கொதிக்கவைத்துக் குடிக்க சீதளத்தால் தொண்டைகட்டி குரல் கம்மிப் பேசுபவர்களுக்கு நல்ல குரல்வளத்தை உண்டாக்கி நலம்தரும். 
ஆனால் முழுவதும் குணமடையும் வரை காலை மாலை இருவேளை உண்டுவரவேண்டும்.
மாவின் பச்சையிலைகளை நெருப்பில் புகைத்து வாயால் இழுத்துவிட்டாலும் குரல் கம்மல் குணமடையும். விக்கல் நிற்கும். இந்து சாத்திரங்கள் மாவிலையில் செல்வமகள் (மகாலட்சுமி) வசிப்பதாகச் சொல்வது அதிலுள்ள நேர்மறைத் திறனாகும் (Positive Energy). 
அதனால்தான், மாவிலை பண்டிகைக் காலங்களில், விழாக்களில் வாசலில் தோரணமாகவும், கலசங்களில் தேங்காயைச் சுற்றியும் கட்டப்படுகிறது. மாவிலையால் பல்துலக்காதவன் மாபாவி என்று ஒரு
 பழமொழி உண்டு.
 அதனால் பெரியவர்கள் நோய்முறிவுக்கு மாவிலையால் வாய் கொப்பளிப்பு செய்தார்கள். மரத்திலிருந்து விழும் பூக்களை நெருப்பிலிட்டுப் புகைத்தால் நுளம்புகள் ஓடிவிடும். 
மாம்பிஞ்சை மாவடு என்று சொல்வார்கள். மாவடு ஊறுகாய் உண்பதால் நல்ல பசியுண்டாகும். வாய் குமட்டல், வாந்தி நிற்கும். மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும் என்னும் பழமொழி. பழக்கொட்டைப் பொடியைச் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் 
பெரும்பாடு குணமாகும்.
 உடற்சூடு குறையும். வேர்ப்பட்டையைக் கசாயம் செய்து அடிக்கடி அருந்த அடிக்கடி மூத்திரம் பிரிவது கட்டுப்படுத்தப்படும். தாகம் 
அடங்கும், பேதி நிற்கும். 
மாம் பிசினை 1/2 தேக்கரண்டி அளவு பாலுடன் சேர்த்துச் சாப்பிட பெரும்பாடு, வெள்ளைப்போக்கு குணமடையும். கால்வெடிப்பில் இந்தப் பிசினைத் தடவ வெடிப்பு நீங்கிக் கால்கள் வழவழப்பாகும். மாவின் சிறப்புகள் அதனைத் தெரிந்து முறையாகப் பயன்படுத்தினால் நமக்கு சிறப்பான 
வாழ்க்கை அமையும்.
இவ்வளவு ஆரோக்கியப் பயன்கொண்ட மாம்பழம் உங்கள் வீட்டிலும் உண்டா? இல்லையாயின் அதனை சந்தையிலாவது பெற்று தகுந்த முறையில் தேவைக்கேற்றவாறு  உட்கொண்டு நன்மையடையுங்கள்.
என்பதும். குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - ஒரே தடவையில் மாம்பழம் 2 கிலோவிற்கும் அதிகமாக உட்கொள்ளலாம். அதன் ஆரோக்கியப் பண்புகள்

மஞ்சள் தூளை அதிகளவில் இந்த பிரச்சனை இருப்பவர்கள் பயன்படுத்த கூடாதாம்

செவ்வாய், 9 மே, 2023

மஞ்சளில் பல மருத்துவக் குணங்கள் அதிகளவில் உள்ளது. இருந்தப் போதும் பித்தப்பை பிரச்சனைகள், நீரழிவு நோயாளிகள், இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் போன்ற உடல் நலப் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என 
கூறப்படுகின்றது.
சைவம், அசைவம் என எந்த சமையலிலும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்கப்படும்.
இதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு இருப்பதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் பாலில் அல்லது சுடு தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து பருகுவது நல்ல தீர்வாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?
சுகாதார ஆய்வறிக்கையின் படி ஒரு நபர் நாளொன்றுக்கு சுமார் 500 மல்லி கிராம் முதல் 1-3 கிராம் வரை மட்டும் தான் மஞ்சளை 
உபயோகிக்கலாம்.
இதைவிட அளவு அதிகமாகும் போது தான், வயிற்று வலி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, தலை சுற்றல் போன்ற பல உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. 
மஞ்சள் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
மஞ்சளில் பல்வேறு நோயெதிர்ப்பு பண்புகள் மட்டுமில்லாது தொடர்ச்சியாக மஞ்சளை நாம் சாப்பிட்டு வரும் போது இதில் உள்ள குர்குமினால் டிமென்சியா என்ற நினைவாற்றல் இழப்பு செயல்திறனை மேம்படுத்த 
உதவியாக உள்ளது.
இருந்தப்போதும் சில நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அதிகளவு மஞ்சள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய நிலையும் உள்ளது.பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் அதிகளவு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். 
நீரிழிவு நோயாளிகள்
மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால் ஏற்கனவே நீரழிவு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மஞ்சள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
ஒருவேளை நீங்கள் அதிகளவு உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவை வெகுவாகக் குறைக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
இரப்பை பிரச்சனை உள்ளவர்கள்
இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் கோளாறு அல்லது GERD உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.
தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உங்களது உடல் நிலையை மேலும் மோசமாக்கிவிடும்.மஞ்சளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் உள்ள இரும்புச்சத்துக்களை குறைக்க நேரிடுகிறது.
ஏற்கனவே இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக மஞ்சள் உட்கொள்வதை நிறுத்திவிடுங்கள்.
கல்லீரல் பாதிப்புள்ளவர்கள் தவிர்க்கவும்
உங்களுக்கு கல்லீரல் நோய் இருந்தால், மஞ்சளை உட்கொள்வது சில கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
வயிற்று வலி, வயிற்றுக்கோளாறு, தலைவலி போன்ற பிரச்சனைகளும் மஞ்சள் அதிகளவு சாப்பிடுவதால் நேரிடும்.
என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - மஞ்சள் தூளை அதிகளவில் இந்த பிரச்சனை இருப்பவர்கள் பயன்படுத்த கூடாதாம்

இந்த வாழைப்பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமாம்

புதன், 26 ஏப்ரல், 2023


பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைப்பழங்களை சாப்பிடக்கூடாது என கூறப்படுவதுண்டு.
எனினும் பச்சை வாழைப்பழம் செவ்வாழை நேந்திரம் ஆகிய பழங்களை குறைந்த அளவு சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
7பச்சை வாழைப்பழம், செவ்வாழை
நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு வாழைப்பழம் என்ற வகையில் பச்சை வாழைப்பழம் செவ்வாழை ஆகிவற்றை சாப்பிடலாம் என்றும் கூறப்படுகின்றது. இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும்
 கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பூவம் பழம், ரஸ்தாலி நாட்டு வாழைப்பழங்களில் இனிப்பு அதிகமாக உள்ளது. இந்த வகை வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படும் என்றும் 
கூறப்படுகிறது.
வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் அதனை த
விர்ப்பது நல்லது
எனினும் வாழைப்பழத்தில் வைட்டமின் சி பொட்டாசியம் நார்ச்சத்து ஆகியவை இருப்பதால் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வாழைப்பழங்களை தாராளமாக சாப்பிடலாம்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - இந்த வாழைப்பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமாம்

நீங்கள் முகம் கழுவும் போது இந்த தப்பு மட்டும் செய்யாதீர்கள்

வெள்ளி, 21 ஏப்ரல், 2023


முகத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்ள அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தை கழுவுவதன் மூலம் வறட்சியான சருமத்தை போக்க முடியும்.
ஆனால் முகத்தை கழுவும் போது நம்மை அறியாமல் செய்யும் தவறினால் முகப்பரு மற்றும் பல சரும பிரச்சனைகள் ஏற்படும்.
முதலில் முகத்தை கழுவுவதற்கு முன் கைகளை நன்கு சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும்.
இல்லாவிட்டால், கைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நேரடியாக முகத்தில் பட்டு முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும 
பிரச்சனைகள் ஏற்படும்.
முகத்தில் பருக்கள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் முகத்தை பலமுறை கழுவ வேண்டும்.
இதனால் முகத்தில் எண்ணெய் பசை நீங்குவதோடு, அழுக்குகளும் முழுமையாக வெளியேற்றப்பட்டு சருமம் சுத்தமாக மாறும்.
முகத்தை சிவப்பாக மாற்ற கிரீம்களை பயன்படுத்துவது 
நல்லது கிடையாது.
அதற்கு மாற்றாக இயற்கை முறையில் தயாரித்த முகப்பூச்சுகளை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளலாம்.






READ MORE - நீங்கள் முகம் கழுவும் போது இந்த தப்பு மட்டும் செய்யாதீர்கள்

உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் ஐந்து உணவுகள்

புதன், 5 ஏப்ரல், 2023

கிட்னி பீன்ஸ், பட்டாணி, மற்றும் லென்டில்ஸ் போன்ற பீன்ஸ் கொழுப்பை குறைக்க உதவுகிறது. சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது வெள்ளை அரிசி மற்றும் இறைச்சிக்கு பதிலாக பீன்ஸ் அல்லது அவரை
 பருப்பு வகைகள்: பயன்படுத்துங்கள். அவற்றில் காணப்படும் நார்ச்சத்து, கனிமங்கள் மற்றும் தாவர புரதங்கள் எல்டிஎல்
 அளவு குறைவதற்கு மிகவும் உதவுகிறது. ஒரு நாளில் அவரை பருப்பு வகைகளை அரை கிண்ணமாவது உண்ணவும். இந்த பீன்ஸ்களை அதிக எண்ணெய் அல்லது நெய் அல்லது அதிக 
உப்புடன் சமைக்க
 கூடாது என்பது மிகவும் முக்கியம். பல வகையான பீன்ஸ் 
இருக்கிறது அதனால் உங்கள் சுவைக்கு ஏற்ப உங்களுக்கு நிறைய தேர்வுகள் இருக்கிறது. பல வகையான காய்கறிகள்:
நம் எல்லோருக்கும் பழங்களின் குணங்கள் தெரியும் ஆனால் கேரட், பட்டாணி, பச்சை பீன்ஸ், உருளைகள், மற்றும் கத்தரி போன்ற காய்களில் கரையும் நார்ச்சத்து, மற்றும் ஊட்டச்சத்து நிறைந்து இருக்கிறது.
 பச்சை பீன்ஸ் மற்றும் பட்டாணிகள் அவரை பருப்பு வகைகள், அதனால் இரட்டிப்பு பயன்கள் கிடைக்கும். பெரும்பாலான 
காய்கறிகளில் கலோரிஸ் குறைவாக இருக்கிறது, அதனால் அது எடை குறைப்பதற்கு உதவுகிறது. நீங்கள் அவற்றை பச்சையாக, பொரித்து அல்லது ஆவியில் வேக வைத்து உண்ணலாம் மற்றும் அவை அற்புதமாக உங்கள் கொழுப்பை குறைக்க உதவும்.
பூண்டு:
வெகு நாட்களாக பூண்டு ஒரு அற்புதமான மருந்தாக கருதப்படுகிறது. பூண்டு இரத்த அழுத்தத்தை குறைகிறது மேலும் தொடர்ந்து உட்கொள்வதால் எல்டிஎல் மற்றும் ட்ரைகிலிசெரைட்களை கட்டுப்படுத்த தனித் திறன்
 கொண்டது. பழைய பூண்டு அதிக திறன்கொண்டதாக கருதப்படுகிறது. வெறுமனே இரண்டு முதல் மூன்று இடித்த பச்சை பூண்டு பற்களை தண்ணீருடன் விழுங்குவது அல்லது 300மில்லிகிராம் பூண்டு மாத்திரைகளை தினமும் உட்கொள்வது, உங்கள் கொழுப்பு அளவுகளை 
குறைப்பதற்கு அது உதவுகிறது.
ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு உடலில் உள்ள கொழுப்பின் அளவை சரிசெய்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
டார்க் சாக்லேட்:
டார்க் சாக்லேடில் 75 சதவிகிதம் கோகோ இருக்கிறது அது உடலில் எல்டிஎல் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது. அதை உண்பதால், உங்கள் இனிப்பு தேடல் நின்றுவிடும் மேலும் உங்கள் கொழுப்பை குறைக்க அதிகமாக உதவுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் ஐந்து உணவுகள்

ஏற்படும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் வீட்டு மருத்துவம்

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

நம் உடலில் பித்தம் அதிகரித்தல், உடல்சூடு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் வாய்ப்புண்ணை வீட்டில் உள்ள மருத்துவகுணம் கொண்ட பொருட்களை வைத்தே குணமாக்கலாம்.உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும் வகையில் அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தால் வாய்ப்புண் வராது.
பாலில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.வாயில் புண் உள்ள இடத்தில் சிறிது வெண்ணெய் அல்லது தேன் தடவி வந்தால் வாய்ப்புண் குணமடையும்.தண்ணீரில் நெல்லிக்காய் இலையை போட்டு கொதிக்க வைத்து இளம்சூட்டில் வாய்க் கொப்பளித்தால் 
வாய்ப்புண் சரியாகும்.
மணத்தக்காளி மற்றும் அகத்திக்கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமடையும்.புதினா இலையை அரைத்து அதன் சாறை புண் உள்ள பகுதியில் தடவி வர வாய்ப்புண் மெல்ல குணமாகும்.மாசிக்காயை பால் சேர்த்து அரைத்து, தேன் சேர்த்து தடவி வர வாய்ப்புண் 
நாளடைவில் சரியாகும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - ஏற்படும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் வீட்டு மருத்துவம்

சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுதல் உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா

வெள்ளி, 17 மார்ச், 2023

நாகரீகம் வளர வளர புதுப்புது மின்னணு சாதங்கள் வந்துள்ளன. அதனால் உணவை சமைத்து உண்ணுதல் குறைவடைந்து வருகிறது. மொத்தமாக உணவை சமைத்து மீஞ்சுவதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டு விட்டு வேலைக்குச் செல்கின்றனர். அவ்வாறு 
செய்தல் ஆகாது. 
அப்படிச் செய்வதனால் உணவு விஷமாகிவிடுகிறது. இன்றைய ஆரோக்கியம் பதிவில் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
சோறு
நாம் உண்ணும் உணவுகளில் மிகவும் முக்கியமான உணவு தான் சாதம். நாம் வடித்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. சோற்றை சூடுபடுத்துவதால் அதில் நச்சுத்தன்மை அதிகரித்து அது விஷமாக மாறுகிறது. இதனால் குடல் சம்மந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுகிறது. 
முட்டை:
முட்டையில் அதிகளவு புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. இருந்தாலும் முட்டையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்துவதால் அது விஷமாக மாறுகிறது. இதனால் செரிமான கோளாறுகள் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உருளைக்கிழங்கு:
நாம் சமைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்துவதால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விடுகின்றன. இதனால் உருளைக்கிழங்கில் நச்சுத்தன்மை அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாக வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நல பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
கீரை: 
கீரையில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. நாம் கீரையை சூடுபடுத்தும் போது நைட்ரேட்ஸ் சத்துக்கள் நைட்ரைட்டாக மாறுகின்றன. இதனால் குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் கீரையை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கோழியிறைச்சி
பொதுவாக கோழி இறைச்சி அதிகம் சாப்பிட கூடாது என்று கூறுவார்கள். கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் மற்றும் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இதனால் செரிமானம் ஆக அதிக நேரம் தேவைப்படும். அதேபோல சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதில் உள்ள புரதச்சத்து அதிகரித்து விஷமாக மாறுகிறது. அதனால் சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பீட்ரூட்:
பீட்ரூட்டையும் சூடுபடுத்தி சாப்பிட கூடாது. கீரை வகைகளைப் போலவே பீட்ரூட்டிலும் அதிகளவு நைட்ரேட்கள் உள்ளன. அதனால் பீட்ரூட்டை சூடுபடுத்தும் போது அது விஷமாக மாறுகிறது.
எனவே நாம் முடிந்தளவு உணவை சமைத்து உண்ணுதலே சிறந்தது. எவ்வளவு நெருக்கடியானலும் அதனை தகுந்த விதத்தில் கையாண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போமாக.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுதல் உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா

நீங்கள் கணனி, போன் பாவிப்பதனால் உண்டாகும் உடற் சூட்டை தணித்து பாதுகாக்க வேண்டியவை

புதன், 15 மார்ச், 2023

நாம் இப்போது நேரம் கிடைக்கும் நேரம் எல்லாம் ஸ்மார்ட் போன் பாவிப்பது வழக்கம். அது ஒரு புறம் இருக்க, எங்கும் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளமையால் கணனிப்பாவனையின்றி வேலை செய்வோர் இல்லை என்றே கூறலாம்.
இப்படி நாம் இருப்பதனால் உடலில் உஷ்ணங்கள் ஏற்படுகிறது. இன்று  உடல் சூட்டின் விளைவாக உடலுக்கு ஏற்படுத்தப்படும் விளைவுகளையே நாம் பார்க்கப் போகிறோம்.
:உடல் சூடு காரணமாக
உடலில் அதிகமாக சூடு ஏற்படும் பொழுது பித்தப்பையில் பாதிப்புகள் ஏற்பட்டு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. 
உடலில்  சூடு அதிகரிக்கும் பொழுது கண்களில் எரிச்சல், வாய்ப்புண், தூக்கமின்மை, வயிற்று வலி, குமட்டல் இது போன்ற சாதாரண அறிகுறிகள் ஏற்படும். இது போன்ற பாதிப்புகள் ஏற்படும் பொழுதே சரி 
செய்துகொள்வது நல்லது.
மேலும் உடல் சூடு இன்னும் அதிகமாக அதிகரிக்கும் பொழுது மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், சிறுநீரக தாரை எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் 
போன்றவை ஏற்படும்.
பெண்களில் மாதவிலக்கு நாட்களில் உடல் சூடு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது, இல்லையன்றால் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகள்:
உடலில் சூட்டை அதிகரிக்கும் புளிப்பு, உப்பு, காரம் போன்றவற்றை அதிக அளவு சாப்பிடும் பொழுது உடலில் அதிக அளவு உஷ்ணங்களும் 
ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி டீ, காபி, கருவாடு, புளித்த மோர்,வினிகர், ஊறுகாய் போன்றவற்றை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் 
சூடு ஏற்படுகிறது.
மது பழக்கம், புகை பழக்கம் போன்றவற்றாலும் உடலில் அதிக சூடுகள் ஏற்படுகிறது.
உடல் சூட்டை குறைக்க 
நம் உடலில் அதிகமாக சூடு ஏற்படும் பொழுது நீர் சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளான புடலங்காய், வெள்ளரிக்காய், வெண்பூசணி, முள்ளங்கி போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி இளநீர் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
கீரை வகைகளான மணத்தக்காளி கீரை, பொன்னாக்கண்ணி கீரை போன்றவை  உணவில் எடுத்துக்கொள்ளும் பொழுது உடலில் உள்ள உஷ்ணகளை கட்டுப்படுத்த உதவிக்கிறது.
உடல் சூட்டை தணிக்க சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, நார்த்தம்பழம் போன்றவை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
உடல் முழுவது ஏற்படக்கூடிய சூட்டை தணிப்பதற்கு வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
எனவே, இவற்றை நாம் நமது வேலைகளுடன் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் தோன்றும் உஷ்ணத்தை குறைத்து 
ஆரோக்கியமாக வாழலாம்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நீங்கள் கணனி, போன் பாவிப்பதனால் உண்டாகும் உடற் சூட்டை தணித்து பாதுகாக்க வேண்டியவை

உங்கள் உடலில் இவ்வாறான பிரச்சனை இருக்கிறதா இதனை பயன்படுத்தி பாருங்கள்

சனி, 19 நவம்பர், 2022

மஞ்சள் மற்றும் வேப்ப இலையில் ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது.
வேப்பபிலை சாற்றில் மஞ்சள் கலந்து குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆயுர்வேதத்தில் 
கூறப்பட்டுள்ளது.
வேப்பிலை மற்றும் மஞ்சளால் பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் ஏற்படும் அற்புத நன்மைகள்
 பற்றி தெரியுமா?
வேப்ப இலைகள் மஞ்சள் பொடி போட்டு கொதிக்க வைத்த நீரை கலந்தோ, வேப்பிலை போட்டு ஊற வைத்த தண்ணீரில் குளித்தால், தோல் தொடர்பான எந்த வகையான ஒவ்வாமையையும் போக்கிவிடலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேப்பிலை, மஞ்சளைப் பயன்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இது இறந்த சரும செல்கள் மற்றும் முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவுகிறது.
மஞ்சளில் கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், ஆற்றல், புரதம், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
வேம்புக்கு ஆன்டி-செப்டிக், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. வேப்பிலை மற்றும் மஞ்சளை சேர்த்து சாப்பிட்டால், வைரஸ் காய்ச்சலில் இருந்து உடலை பாதுகாக்கலாம்.
இது தவிர, இந்த இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்து, பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேம்பு மற்றும் மஞ்சளை பயன்படுத்தலாம்.
வேம்பு மற்றும் மஞ்சள் அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை 
பலப்படுத்துகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - உங்கள் உடலில் இவ்வாறான பிரச்சனை இருக்கிறதா இதனை பயன்படுத்தி பாருங்கள்

தேநீருடன் இந்த உணவுகளை மறந்தும் கூட எடுத்துக் கொள்ளாதீங்க

திங்கள், 26 செப்டம்பர், 2022

தேநீருடன் பெரும்பாலானோர்,  ஏதாவது நொறுக்கு தீனிகள் அல்லது பிஸ்கட் சாப்பிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
எனினும், தேநீருடன் உட்கொள்ளும் சில பொருட்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
அந்தவகையில் டீயும் என்னமாதிரியான உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை இங்கே பார்ப்போம்.
டீயுடன் முட்டை சேர்த்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் தேயிலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதத்துடன் கலக்கும் போது, ​​அமிலங்கள் புரோட்டீன் கலவைகளை உருவாக்கி மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் 
அபாயத்தை அதிகரிக்கும்.
தேநீருடன் இனிப்பு பிஸ்கட்களை உட்கொள்வது சர்க்கரையின் அளவை பெரிதும் அதிகரிக்கும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகனால், உடல் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கும். சர்க்கரை 
தொடர்ந்து கட்டுக்குள் இல்லை என்றால், சிறுநீரகம், கண் போன்ற சில உறுப்புகளும் பாதிக்கும்.
டீயுடன் பகோடா பஜ்ஜி சாப்பிடுவது தவறு. ஏனெனில் கடலை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை டீயுடன் உட்கொண்டால், அது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவதோடு, வயிறு தொடர்பான பிரச்சனைகளும் 
ஏற்படத் தொடங்கும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - தேநீருடன் இந்த உணவுகளை மறந்தும் கூட எடுத்துக் கொள்ளாதீங்க

தேங்காய் பாலில் இத்தனை பல மருத்துவ குணங்கள் உள்ளனதாம்

புதன், 7 செப்டம்பர், 2022

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக 
திகழ்கின்றது.
அந்தவகையில் தேங்காய்ப்பாலில் அடங்கியுள்ள நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.
தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை 
ஏற்படாமல் தடுக்கிறது.
தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் 
உறுப்புகள் சுத்தமாகும்.
அடிக்கடி தேங்காய் பால் குடித்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றம் நீடிக்கும்.
தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் 
வாய்ப்புகள் குறைகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - தேங்காய் பாலில் இத்தனை பல மருத்துவ குணங்கள் உள்ளனதாம்

நாம் சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இவ்வளவு பயன்கள் உண்டாம்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022


உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம்
 சிரமப்படுகிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்
சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து
 திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.
தினமும் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.
சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.
சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட புட்டு மற்றும் இதர வகையான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால்
 அதிகம் சுரக்கும்.
நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள வெள்ளை அரிசி போன்றவற்றை அதிகம் 
சாப்பிடக் கூடாது.
ஆனால் அந்த அரிசிக்கு மாற்றாக நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை காலை மற்றும் மதிய வேளைகளில் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த 
நிவாரணம் அளிக்கும்.
சிவப்பு அரிசி ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் 
வாய்ப்பை தடுக்கிறது.
ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக 
இயங்க முடிகிறது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாம் சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இவ்வளவு பயன்கள் உண்டாம்

இத்தனை மருத்துவங்களா முருங்கை மரத்தில் நோயினை கட்டுப்படுத்துமாம்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

முருங்கை மரத்தினை பொறுத்தளவில் அதன் ஒவ்வொரு பாகமும் எமது உடல் நோயினை குணப்படுத்தும் ஒரு மருத்துவ குணம் கொண்ட மூலிகை வகையாகவே பார்க்கப்படுகின்றது.
உண்மையில் இந்த முருங்கை தாவரத்தினை எமது அன்றாட பயன்பாட்டில் எடுத்துக்கொண்டால் எமது உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் என்பதை மருத்துவர்களும் அடிக்கடி தெரிவித்து 
வருகின்றனர்.
எமது முன்னோர்கள் இயற்கையினை நம்பியே தமது வாழ்தலை 
மேற்கொண்டு வந்தனர்.
அந்த காலங்களில் மருத்துவம் வளரவில்லை ஆனால் உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் இருக்கும்.
அன்றைய மனிதர்களுக்கு நோய் நொடி ஏற்படுவது குறைவென்றே
 சொல்ல வேண்டும்.
ஏனென்றால் இயற்கையோடு வாழ்வினை மேற்கொண்டான்.
உண்ணும் உணவில் இயற்கை மூலிகைகள் சேர்க்கப்ட்டது.
அதனால் அவன் நோய்களில் இருந்து விடுபட்டு கொண்டே 
வந்துள்ளான்.
ஆனால் இன்றய சமுதாயம் அதனை கைவிட தொடங்கியுள்ளது.
அதனால் நோய்கள் அவர்களை கைப்பிடிக்க 
தொடக்கி விட்டது.
என்னதான் புதிது புதிதாக உணவு வகைகள் வந்தாலும் எமது பாரம்பரிய உணவு வகைகளை போல சுவை தருவதும் இல்லை நிலைத்து 
நிற்பதும் இல்லை.
இன்றய உணவுகள் நோயை உடலில் உருவாக்குகின்றது.

அன்றைய உணவுகள் உடலில் உள்ள நோயை போக்கியது இதுவே நிதர்சனமான உண்மை.
இவ்வாறான நிலையில் இந்த முருங்கை மரம் ஒரு மனிதனுக்கு எவ்வாறு நோய்களை கட்டுப்படுத்துகின்றது என்பதையும் எவ்வாறான நோய்களை கட்டுப்படுத்துகின்றது என்பதையும் 
விரிவாக பாப்போம்.
முதலில் இந்த முருங்கையில் எவற்றினை நாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போமானால் முருங்கை மரத்தில் காட்டு முருங்கை, கொடி முருங்கை, தவசு முருங்கை என பல வகைப்படுள்ள முருங்கைகள்
 இருக்கின்றது.
இவ்வாறு இருக்க கூடிய மரத்தில் முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை விதை, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், முருங்கை பட்டை, முருங்கை வேர் என்பவற்றினை நாம் பயன்படுத்த முடியும்.
இவ்வாறான முருங்கை தாவரத்தினை உண்ணுவதனால் எமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பாப்போம்.
ஒரு மனிதனுக்கு அதிக வேலைப்பளு ஏற்படும் போது கூடவே மன உளைச்சலும் வந்து சேர்ந்துவிடும்.
இவ்வாறு வேலைப்பளு மன உளைச்சல் மற்றும் சில காரணங்களுக்காக நரம்பு தளர்ச்சி ஏற்படுகின்றது.
இவ்வாறான நரம்பு தளர்ச்சியினை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முருங்கை பூவினை எடுத்து கசாயம் செய்து வாரத்தில் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பருகி வந்தால் குறித்த நரம்புத்தளர்ச்சி நோயினை கட்டுப்படுத்தலாம்.
உண்மையில் தற்பொழுதெல்லாம் அனைவருக்கும் பொதுவாக இருக்க கூடிய நோயாக இந்த நீரிழிவு நோய் உருவாகியுள்ளது.
அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முருங்கை பூவையோ அல்லது முருங்கை இலையினையோ எமது அன்றாட உணவில் கலந்து உட்க்கொண்டு வந்தால் உண்மையில் குறித்த நோயினை கட்டுக்கோப்புக்குள் 
கொண்டுவரும்.
உண்மையில் ஞாபக மறதி என்பது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் ஒரு விடயம்.
இந்த ஞாபக மறதி என்பது ஒரு கொடிய நோய்க்கு சமனாகும்.
இவ்வாறு ஞாபக மறதியினை இல்லாமல் செய்து ஞாபக சக்தியினை தூண்ட வேண்டும் என்றால் முருங்கை பூவினை எடுத்து அரைத்து பாலுடன் கலந்து கொதிக்க வைத்து தினமும் இயன்றளவு காலை மாலை குடித்து வந்தால் ஞாபக சக்தியினை அதிகரிக்க செய்வதோடு நமது மூளைக்கு ஒரு 
புத்துணர்வினை ஏற்படுத்தும்.
எமது உடலில் பல காரணங்களால் பித்தம் அதிகரிக்கின்றது.
இந்த பித்தமானது நமது இரத்தத்துடன் கலந்து மேல் நோக்கி வரும்போது தலை சுற்று, வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற கொடிய நோய்களை
 உருவாகும்
இதனை குணப்படுத்த வேண்டும் என்றால் குறுநகை பூவையோ அல்லது இலையையோ அரைத்து பொடியாக எடுத்து காலை மாலை கசாயம் செய்து குடித்து வந்தால் குறித்த பித்தம் தொடர்பான நோய்களை குணமாக்கி எமது உடலில் உள்ள பித்தத்தினை குறைக்கும்.
இன்றைய காலத்தில் கணனி, தொலைக்காட்சி மற்றும் தொலைபேசிகள் அதிக பாவனையில் உள்ள இலத்திரனியல் பொருட்கள். இவற்றினை தொடர்ந்து பாவிப்பதனால் சிறுவயதிலேயே கண்பார்வை 
குறித்து விடுகின்றது.
இவ்வாறான கண்பார்வை பிரச்சனைகளை குறைப்பதற்கு முருங்கை பூ மற்றும் இலையினை பொடியாக்கி பசும்பாலுடன் கலந்து காலை மாலை வேளைகளில் குடித்து வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகரித்து கண்பார்வை சம்மந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
முருங்கை இலையினை எடுத்து சுத்தமாக கழுவி அதனை வேக வைத்து அதன் சாற்றினை வடித்து வாரத்தில் மூன்று நாளுக்கு மேல் குடித்து வந்தால் எமது உடலில் உள்ள உடல் சூடு நீங்கி மலசிக்கல் பிரசனிகளில் 
இருந்து விடுபட முடியும்.
முருங்கை இலையினை எடுத்து நன்றாக சுத்தம் செய்து நெய் இட்டு வதக்கி சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல 
இரத்தம் அதிகரிக்கும்
முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் பதார்த்தங்களை கொண்டு உணவு தயாரித்து உட்க்கொள்ளுவதன் மூலம் பற்கள் உறுதியாகி, தலை உதிர்வதை தடுத்து கருமையான அடத்தியான கூந்தலை 
உருவாக்கும்.
முருங்கை மரத்திலிருந்து பெறப்படும் முருங்கை காயினை சமைத்து எமது உணவு வகையோடு தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் மலட்டு தன்மை நீங்கி ஆண்மை 
அதிகரிக்கும்.
முருங்கை மரத்தில் முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை காய் என்பவற்றினை எமது அன்றாட உணவோடு கலந்து உண்பதன் மூலம் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரித்து குழந்தையின் நல்ல வளர்சிக்கு சிறந்த நிவாரணமாக இருக்கின்றது.
சுவாசம் சம்மந்தமான நோயுடையவர்கள் முருங்கை இலையில் சூப் செய்து குறிப்பதனூடாக அவர்களுக்கு சுவாச குழாயில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அந்த நோயினை கட்டுப்படுவதோடு நென்சு சளியினை குறைக்கும்.
முருங்கை இலையினை தனியே எடுத்து அந்த இலையில் மிளகு ரசம் வைத்து குடித்து வந்தால் எமது காய் கால் மற்றும் மூட்டுகளில் உள்ள வலிகள் நீங்கி ஆரோக்கியமான உடலை உருவாக்கும்.
இவ்வாறு எமது உடலில் உள்ள வியாதிகளை பூரண குணமாக்குவதோடு எமது ஆயுளையும் அதிகரிக்கும் இந்த அற்புத மூலிகை.
ஆகவே எமது உணவில் சிறிதளவேனும் வாரத்தில் இரு முறையாவது இந்த முருங்கை மரத்தின் உள்ள பதார்த்தங்களை கலந்து 
உண்ண பழகுவோம்.
இந்த முருங்கை பதார்த்தங்கள் சில இடங்களில் பெற்றுக்கொள்ள முடியாது.
முருங்கை பதார்த்தங்களை குறிப்பாக முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை விதை போன்றவற்றினை பொடியாக வாங்கி வைத்து தினம் நாம் காலையில் பசும் பாலுடனோ அல்லது நாளாந்த உணவுடனோ கலந்து தினம் உட்க்கொள்ளலாம்.
கலோரி, புரதசத்து நார்சத்து, இரும்புசத்து, கல்சியம், வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறுகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




READ MORE - இத்தனை மருத்துவங்களா முருங்கை மரத்தில் நோயினை கட்டுப்படுத்துமாம்