இத்தனை மருத்துவங்களா முருங்கை மரத்தில் நோயினை கட்டுப்படுத்துமாம்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

முருங்கை மரத்தினை பொறுத்தளவில் அதன் ஒவ்வொரு பாகமும் எமது உடல் நோயினை குணப்படுத்தும் ஒரு மருத்துவ குணம் கொண்ட மூலிகை வகையாகவே பார்க்கப்படுகின்றது.
உண்மையில் இந்த முருங்கை தாவரத்தினை எமது அன்றாட பயன்பாட்டில் எடுத்துக்கொண்டால் எமது உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் என்பதை மருத்துவர்களும் அடிக்கடி தெரிவித்து 
வருகின்றனர்.
எமது முன்னோர்கள் இயற்கையினை நம்பியே தமது வாழ்தலை 
மேற்கொண்டு வந்தனர்.
அந்த காலங்களில் மருத்துவம் வளரவில்லை ஆனால் உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் இருக்கும்.
அன்றைய மனிதர்களுக்கு நோய் நொடி ஏற்படுவது குறைவென்றே
 சொல்ல வேண்டும்.
ஏனென்றால் இயற்கையோடு வாழ்வினை மேற்கொண்டான்.
உண்ணும் உணவில் இயற்கை மூலிகைகள் சேர்க்கப்ட்டது.
அதனால் அவன் நோய்களில் இருந்து விடுபட்டு கொண்டே 
வந்துள்ளான்.
ஆனால் இன்றய சமுதாயம் அதனை கைவிட தொடங்கியுள்ளது.
அதனால் நோய்கள் அவர்களை கைப்பிடிக்க 
தொடக்கி விட்டது.
என்னதான் புதிது புதிதாக உணவு வகைகள் வந்தாலும் எமது பாரம்பரிய உணவு வகைகளை போல சுவை தருவதும் இல்லை நிலைத்து 
நிற்பதும் இல்லை.
இன்றய உணவுகள் நோயை உடலில் உருவாக்குகின்றது.

அன்றைய உணவுகள் உடலில் உள்ள நோயை போக்கியது இதுவே நிதர்சனமான உண்மை.
இவ்வாறான நிலையில் இந்த முருங்கை மரம் ஒரு மனிதனுக்கு எவ்வாறு நோய்களை கட்டுப்படுத்துகின்றது என்பதையும் எவ்வாறான நோய்களை கட்டுப்படுத்துகின்றது என்பதையும் 
விரிவாக பாப்போம்.
முதலில் இந்த முருங்கையில் எவற்றினை நாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போமானால் முருங்கை மரத்தில் காட்டு முருங்கை, கொடி முருங்கை, தவசு முருங்கை என பல வகைப்படுள்ள முருங்கைகள்
 இருக்கின்றது.
இவ்வாறு இருக்க கூடிய மரத்தில் முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை விதை, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், முருங்கை பட்டை, முருங்கை வேர் என்பவற்றினை நாம் பயன்படுத்த முடியும்.
இவ்வாறான முருங்கை தாவரத்தினை உண்ணுவதனால் எமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பாப்போம்.
ஒரு மனிதனுக்கு அதிக வேலைப்பளு ஏற்படும் போது கூடவே மன உளைச்சலும் வந்து சேர்ந்துவிடும்.
இவ்வாறு வேலைப்பளு மன உளைச்சல் மற்றும் சில காரணங்களுக்காக நரம்பு தளர்ச்சி ஏற்படுகின்றது.
இவ்வாறான நரம்பு தளர்ச்சியினை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முருங்கை பூவினை எடுத்து கசாயம் செய்து வாரத்தில் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பருகி வந்தால் குறித்த நரம்புத்தளர்ச்சி நோயினை கட்டுப்படுத்தலாம்.
உண்மையில் தற்பொழுதெல்லாம் அனைவருக்கும் பொதுவாக இருக்க கூடிய நோயாக இந்த நீரிழிவு நோய் உருவாகியுள்ளது.
அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முருங்கை பூவையோ அல்லது முருங்கை இலையினையோ எமது அன்றாட உணவில் கலந்து உட்க்கொண்டு வந்தால் உண்மையில் குறித்த நோயினை கட்டுக்கோப்புக்குள் 
கொண்டுவரும்.
உண்மையில் ஞாபக மறதி என்பது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் ஒரு விடயம்.
இந்த ஞாபக மறதி என்பது ஒரு கொடிய நோய்க்கு சமனாகும்.
இவ்வாறு ஞாபக மறதியினை இல்லாமல் செய்து ஞாபக சக்தியினை தூண்ட வேண்டும் என்றால் முருங்கை பூவினை எடுத்து அரைத்து பாலுடன் கலந்து கொதிக்க வைத்து தினமும் இயன்றளவு காலை மாலை குடித்து வந்தால் ஞாபக சக்தியினை அதிகரிக்க செய்வதோடு நமது மூளைக்கு ஒரு 
புத்துணர்வினை ஏற்படுத்தும்.
எமது உடலில் பல காரணங்களால் பித்தம் அதிகரிக்கின்றது.
இந்த பித்தமானது நமது இரத்தத்துடன் கலந்து மேல் நோக்கி வரும்போது தலை சுற்று, வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற கொடிய நோய்களை
 உருவாகும்
இதனை குணப்படுத்த வேண்டும் என்றால் குறுநகை பூவையோ அல்லது இலையையோ அரைத்து பொடியாக எடுத்து காலை மாலை கசாயம் செய்து குடித்து வந்தால் குறித்த பித்தம் தொடர்பான நோய்களை குணமாக்கி எமது உடலில் உள்ள பித்தத்தினை குறைக்கும்.
இன்றைய காலத்தில் கணனி, தொலைக்காட்சி மற்றும் தொலைபேசிகள் அதிக பாவனையில் உள்ள இலத்திரனியல் பொருட்கள். இவற்றினை தொடர்ந்து பாவிப்பதனால் சிறுவயதிலேயே கண்பார்வை 
குறித்து விடுகின்றது.
இவ்வாறான கண்பார்வை பிரச்சனைகளை குறைப்பதற்கு முருங்கை பூ மற்றும் இலையினை பொடியாக்கி பசும்பாலுடன் கலந்து காலை மாலை வேளைகளில் குடித்து வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகரித்து கண்பார்வை சம்மந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
முருங்கை இலையினை எடுத்து சுத்தமாக கழுவி அதனை வேக வைத்து அதன் சாற்றினை வடித்து வாரத்தில் மூன்று நாளுக்கு மேல் குடித்து வந்தால் எமது உடலில் உள்ள உடல் சூடு நீங்கி மலசிக்கல் பிரசனிகளில் 
இருந்து விடுபட முடியும்.
முருங்கை இலையினை எடுத்து நன்றாக சுத்தம் செய்து நெய் இட்டு வதக்கி சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல 
இரத்தம் அதிகரிக்கும்
முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் பதார்த்தங்களை கொண்டு உணவு தயாரித்து உட்க்கொள்ளுவதன் மூலம் பற்கள் உறுதியாகி, தலை உதிர்வதை தடுத்து கருமையான அடத்தியான கூந்தலை 
உருவாக்கும்.
முருங்கை மரத்திலிருந்து பெறப்படும் முருங்கை காயினை சமைத்து எமது உணவு வகையோடு தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் மலட்டு தன்மை நீங்கி ஆண்மை 
அதிகரிக்கும்.
முருங்கை மரத்தில் முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை காய் என்பவற்றினை எமது அன்றாட உணவோடு கலந்து உண்பதன் மூலம் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரித்து குழந்தையின் நல்ல வளர்சிக்கு சிறந்த நிவாரணமாக இருக்கின்றது.
சுவாசம் சம்மந்தமான நோயுடையவர்கள் முருங்கை இலையில் சூப் செய்து குறிப்பதனூடாக அவர்களுக்கு சுவாச குழாயில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அந்த நோயினை கட்டுப்படுவதோடு நென்சு சளியினை குறைக்கும்.
முருங்கை இலையினை தனியே எடுத்து அந்த இலையில் மிளகு ரசம் வைத்து குடித்து வந்தால் எமது காய் கால் மற்றும் மூட்டுகளில் உள்ள வலிகள் நீங்கி ஆரோக்கியமான உடலை உருவாக்கும்.
இவ்வாறு எமது உடலில் உள்ள வியாதிகளை பூரண குணமாக்குவதோடு எமது ஆயுளையும் அதிகரிக்கும் இந்த அற்புத மூலிகை.
ஆகவே எமது உணவில் சிறிதளவேனும் வாரத்தில் இரு முறையாவது இந்த முருங்கை மரத்தின் உள்ள பதார்த்தங்களை கலந்து 
உண்ண பழகுவோம்.
இந்த முருங்கை பதார்த்தங்கள் சில இடங்களில் பெற்றுக்கொள்ள முடியாது.
முருங்கை பதார்த்தங்களை குறிப்பாக முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை விதை போன்றவற்றினை பொடியாக வாங்கி வைத்து தினம் நாம் காலையில் பசும் பாலுடனோ அல்லது நாளாந்த உணவுடனோ கலந்து தினம் உட்க்கொள்ளலாம்.
கலோரி, புரதசத்து நார்சத்து, இரும்புசத்து, கல்சியம், வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறுகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக