இலங்கையில் அடுத்த வாரம் 5 நாட்களிலும் பாடசாலை கல்வி அமைச்சு அறிவிப்பு

சனி, 13 ஆகஸ்ட், 2022

அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல பாடசாலைகளின் செயற்பாடுகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீ
ர்மானித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான 5 நாட்களில் வழமையான அடிப்படையில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு இடையிலான கலந்துரையாடல் 
13-08-2022.இன்று இடம்பெற்றது.
இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக