நாட்டில் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிப்பு

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் விலையை வரலாறு காணாத அளவுக்கு 
அதிகரித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340ஆக அதிகரிக்கப்படவுள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சற்றுமுன் இதனை அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக