நாட்டில் எரிபொருள் இருப்புக்கு தட்டுப்பாடு: பெற்றோலிய போக்குவரத்து தாங்கி உரிமையாளர்கள்

சனி, 27 ஆகஸ்ட், 2022

முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 
மூடப்பட்டுள்ளன.
அகில இலங்கை பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பாவனை அதிகரிப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகிலுள்ள வரிசைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது எரிபொருள் இருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா 
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 30 ஆயிரம் மெட்றிக் டொன் டீசல் தரையிறக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக