யாழ் கோப்பாய் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

வியாழன், 31 மே, 2018

கன்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 
யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்று (24) காலை இந்த விபத்துச் 
சம்பவம் இடம்பெற்றது.
விபத்தில் கோண்டாவில் நவரட்ணராஜா வீதியைச் சேர்ந்த சின்னத்துரை இராசரட்ணம்( வயது 62) என்பவரே உயிரிழந்தார்.
"கோப்பாய் சந்தியின் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் முதியவர் சென்றுகொண்டிருந்த போது, பின்புறமாக வந்த கன்டர் 
வாகனம் மோதியது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவர், கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சடலம் யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்" என்று பொலிஸார் தெரிவித்தனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக