ஆறு மாதங்களுக்குள் விபத்துகளால் ஆயிரத்து 261 பேர் மரணம்

ஞாயிறு, 2 ஜூலை, 2017


வாகன விபத்துக்களால் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் ஆயிரத்து 261 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இதில் முச்சக்கரவண்டி விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர் என்றும், அதிக வேகம் மற்றும் போதையில் வாகனத்தைச் செலுத்தியமையே விபத்துக்கள் சம்பவித்தமைக்கான முதன்மைக் காரணம் என்றும் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான பாதுகாப்பு சபையின் தலைவர் மருத்துவர் சிசிர கொதாகொட கூறியுள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் விபத்துக்களின் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்றுக் 
குறைவடைந்துள்ளது.
அதேவேளை, புதிதாக முச்சக்கரவண்டி ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு மூன்று நாள் செயலமர்வை அடுத்த மாதம் முதல் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக