நாட்டில் புகையிரத பாதையின் குறுக்கே பயணித்த 24 பேர் கைது

ஞாயிறு, 2 ஜூலை, 2017

புகை­யி­ரதப் பாதையின் குறுக்கே பய­ணித்த 24 பேர் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சு அறி­வித்­துள்­ளது
ரயில் கடவை மூடப்­பட்­டி­ருந்த நிலை­யிலும், மற்றும் சிவப்பு நிற வீதி சமிக்ஞை விளக்கு எரிந்து கொண்­டி­ருந்­த­வே­ளை­யிலும் இவர்கள் பய­ணித்­த­தனால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் 
அறி­வித்­துள்­ளது.
இதே­வேளை நாடு முழு­வதும் 684 பாது­காப்­பற்ற ரயில் கட­வைகள் காணப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்ள போக்­கு­வ­ரத்து அமைச்சு இந்த வரு­டத்தில் பாது­காப்­பற்ற 200 புகை­யி­ரத கட­வை­க­ளுக்கு சமிஞ்சை விளக்­கு­களை பொருத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக 
தெரி­வித்­துள்­ளது.
இனங்­கா­ணப்­பட்­டுள்ள அனைத்து பாது­காப்­பற்ற புகை­யி­ரத கட­வை­க­ளுக்கும் இந்த சமிக்ஞை விளக்கை பொருத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.
இதே­வேளை கடந்த 27 ஆம் திகதி முன்­னெ­டுக்­கப்­பட்ட சோத­னையின் போது புகை­யி­ரதப் பாதை மூடப்­பட்­டி­ருந்த 
சந்­தர்ப்­பத்தில் புகை­யி­ரதக் கட­வை­களில் பய­ணித்த 29 பேருக்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ள­தாக புகை­யி­ரத திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.
புகை­யி­ரத விபத்­துக்கள் அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் இந்த
 நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக புகை­யி­ரத திணைக்களத்தின் பாது­காப்பு அதி­காரி அனுர பிரேமரத்ன 
தெரிவித்தார். நாடுமுழுவதும் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்கு 26 குழுக்களை நியமித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக