முதியவர் இருவர் சாவகச்சேரி விபத்துகளில் காயம்!

புதன், 5 ஜூலை, 2017

யாழ் சாவகச்சேரியில் இரு வேறு விபத்துகளில் சிக்கி முதியவர்கள் இருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.நேற்று காலை ஏ9 வீதி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகில் முன்னால் சென்று கொண்டிருந்த
 முச்சக்கரவண்டி சமிக்ஞையின்றி பாடசாலைக்குள் செல்ல முற்பட்ட வேளை பின்தொடர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதியது. அதில் பயணித்த மீசாலை மேற்கைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பரம்சோதி (வயது-62) என்பவர் காயமடைந்தார்.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் கிளிநொச்சி இராமநாதபுரத்திலிருந்து சாவகச்சேரிக்கு மகனுடன் வந்த 62 வயது மூதாட்டி சாவகச்சேரியை அண்மித்த பகுதியில் சாலையைக் கடந்த மாடு மாட்டுடன் மோதி தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக