மோட்டார் சைக்கிள் சைக்கிளுடன் மோதி கைதடி பாலத்தில் இருவர் படுகாயம்!

ஞாயிறு, 2 ஜூலை, 2017

கைதடி பாலத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற சைக்கிளுடன் மோதி, தூக்கி வீசப்பட்டதில் இருவர் காயமடைந்தனர். இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த கமலநாதன் சசீந்திரன் (வயது-33) மற்றும் மட்டுவில்
 வடக்கைச் சேர்ந்த கதிர்காமு இராஜலிங்கம் (வயது-53) ஆகியோரே இவ்வாறு காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி 
வைக்கப்பட்டார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக