தண்ணீர் தொட்டிக்குள் வவுனியாவில் முதியவரின் சடலம்!

செவ்வாய், 4 ஜூலை, 2017

 
வவுனியா- திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்திலுள்ள
 நீர் தொட்டிக்குள் இருந்து இன்று மதியம் வயோதிபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர். திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்தில் கடந்த சில காலமாக தங்கியிருந்த 53 வயதுடைய இராசரட்ணம் அரியரட்ணம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இன்று மதியம் குளிப்பதற்கு தண்ணீர் தொட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையிலேயே அவர் தண்ணீர் தொட்டியினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இறப்பிற்கான காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
 பொலிஸார் தெரிவித்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக