முழங்காவில் இளைஞனைக் காணவில்லைஎன தாயார் முறைப்பாடு!

புதன், 5 ஜூலை, 2017

இளைஞன் ஒருவரை, கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் காணவில்லை என, குறித்த இளைஞனின் தாயார் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முழங்காவில்
 பகுதியைச் சேர்ந்த கிறேசியன் பிரேமிளன் (வயது 18) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.
முழங்காவிலில் இருந்து யாழ். நாவாந்துறைப் பகுதிக்கு, மேசன் வேலைக்காக, கடந்த மாதம் 30ஆம் திகதி சென்ற இளைஞன் இதுவரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும்
 அவர் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை என தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக