திடீரெனத் தீப்பற்றிய எழுதுமட்டுவாழ் பகுதியில் பனை வடலிகள்!

வெள்ளி, 7 ஜூலை, 2017

தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பகுதியில் திடீரென பனை வடலிகளில் நேற்றுமுன்தினம் தீப்பற்றி பெரும் பகுதி காடு அழிந்துள்ளதென அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வடலிப் பனைகளில் பற்றிய தீயை யாழ்.மாநகர தீயணைப்பு படையினரும் அப் பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரும் இணைந்து மூன்று மணி போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் 
கொண்டு வந்தனர்.
கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதெனவும் தெரிவி்க்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக