பதுளைக்கு கொழும்பிலிருந்து சென்ற ரயில் 60அடி பாலத்திற்கு அருகில் விபத்து

வியாழன், 13 ஜூலை, 2017


பதுளைக்கு கொழும்பிலிருந்து  சென்ற தபால் சேவை புகையிரதம் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த,60 அடி பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (13) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் மூன்று பேர் சிறுகாயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் நான்கு புகையிரத பெட்டிகள் குடைசாய்ந்து பாரிய அளவில் சேதத்திற்குள்ளாகியுள்ளன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக