கழுத்தில் ஏறிய டிப்பர் ! தென்மராட்சி விபத்துகளில் 5 பேர் காயம்

வெள்ளி, 30 ஜூன், 2017

யாழ் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை திருத்த வேலையில் ஈடுபட்டிந்த இளைஞனின் கழுத்தின் மீது டிப்பர் வண்டியின் சில்லு ஏறியதில் அவர் படுகாயமடைந்தார். சாவகச்சேரி - கச்சாய் வீதியைச் சேர்ந்த, வடிவேலு சுமன் (வயது 28) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.
டிப்பர் வாகனத்தில் திருத்த வேலையில் ஈடுபட்ட போதே, வாகனம் தானாக உருண்டு இளைஞரின் கழுத்தில் ஏறியுள்ளது. இதில் படுகாயங்களுக்குள்ளான இளைஞன், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்டுள்ளார்.
அதேவேளை, தென்மராட்சி பிரதேசத்தில் வெவ்வேறு வாகன விபத்துக்களில் சிக்கி 2 பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளிலிருந்து வீழந்த மட்டுவில் தெற்கைச் சேர்ந்த மனோகரன் சர்மிலன் (வயது-26) என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 
அனுப்பி வைக்கப்பட்டார்.
இதே வேளை வீதி விபத்துக்களில் சிக்கி காயமடைந்த மீசாலை மேற்கைச் சேர்ந்த சிறிதரன் சஜீதா (வயது-23) சரசாலை மத்தியைச் சேர்ந்த புலேந்திரன் சயந்தன் (வயது-27) கெற்பேலியைச் சேர்ந்த சயந்தன் கௌரி (வயது-26) ஆகியோர் சாவகச்சேரி வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக