மீன் களுக்கு யாழ். மாவட்டத்தில் பெரும் தட்டுப்பாடு

வியாழன், 1 ஜூன், 2017

யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதனால், யாழில் மீன் வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வடமராட்சியில் தொண்டைமானாறு முதல் சுண்டிக்குளம் பகுதி வரையுள்ள கடற்பரப்பு, தீவகப் பகுதிக் கடற்பரப்பு உள்ளிட்ட கடற்பிராந்தியத்தில் மீன்களின் பிடிபாடு மிகவும் குறைவடைந்துள்ளது.
சீரற்ற காலநிலையே மீன்களின் 
பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்தமைக்கான காரணமென மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாகக் கடும் காற்றுக் காரணமாகக் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுகின்றமை மற்றும் கடும் வரட்சியுடனான காலநிலை நிலவுவதே இதற்கான காரணமெனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ விளைமீன் 500 ரூபாவாகவும், பாரை மீன் 450 ரூபாவாகவும் தற்போது மீனவர்களால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் கணவாய், நண்டு, இறால் போன்ற மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
யாழ்.நகரை அண்டிய குருநகர், நாவாந்துறை, கொட்டடி, பாசையூர் குருநகர் பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும், சாவகச்சேரி, அச்சுவேலி, பருத்தித்துறை, திருநெல்வேலி, சுன்னாகம் உள்ளிட்ட மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
கடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் விட மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும், யூன் மாத நடுப்பகுதி வரை மீன்களின் பிடிபாடு குறைவடைந்திருக்குமென மீனவர்கள் ^
தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மீன்களின் பிடிபாடு குறைவடைந்துள்ளமையால் மீனவர்களும், மீன் வியாபாரிகளும், மீன் வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால் நுகர்வோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக