மர்ம நபர்கள் தாக்கி மானிப்பாயில் இளைஞர் காயம்!

புதன், 28 ஜூன், 2017

மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று இரவு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்துடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலரே குறித்த நபரை தாக்கியுள்ளனர்
மானிப்பாய் - ஆனந்தன் வைரவர் ஆலய சந்தியில் இரவு எட்டு மணியளவில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது
. இளைஞன் மீது 3 பேர் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் முகத்தை கருப்பு துணியால் மூடி இருந்ததாகவும், வாகன
 இலக்க தகடுகள் அகற்றப்பட்டு இருந்ததாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக