சாப்பாட்டுக்கடைக்குள்மட்டக்களப்பில் புகுந்த வான்!

புதன், 28 ஜூன், 2017


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாயில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த வானொன்று உணவு விடுதிக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் உணவு விடுதியும் வானும் பலத்த சேதமடைந்துள்ள அதேவேளை, அதிஷ்டவசமாக எவருக்கும் உயிராபத்துக்களோ காயங்களோ ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் சென்றுகொண்டிருந்த வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. வான் விடுதிக்குள் நுழைந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் ஓடித் தப்பித்துக் கொண்டதாலேயே உயிராபத்து தடுக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக