வெடிக்காத நிலையில் உரும்பிராயில் கைக்குண்டு மீட்பு

வெள்ளி, 30 ஜூன், 2017

யாழ் செய்திகள்யாழ்ப்பாணம் – உரும்பிராய், கற்பக பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பகுதியில் கட்டட நிர்மாணப் பணி மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், மண்ணில் புதையுண்ட நிலையில் கைக்குண்டு ஒன்று  மீட்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த கைக்குண்டை மீட்டுள்ளதுடன், அதனை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்ததாக 
 தெரிவிக்கபடுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக