கடன் அட்டையில் பெறப்படும் பணத்திற்கு , அதிகரிக்கும் வட்டி வீதம்

வெள்ளி, 23 ஜூன், 2017

கடன் அட்டை மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கான பணம் இனி மீளச் செல்லுத்தப்படும்போது . அத் தொகை இன்வ்ரும் காலங்களில் அதிகரிப்பைக் காணப் போகின்றது .

இதுகால வரையில் கடன் அட்டை மூலமோ அல்லது , வேறு வழிகளிலோ கிடைக்கப்பெற்ற கடன் தொகைக்கான வருட வட்டி இதுகாலவரையில் 24 வீதமாக இருந்தது ,அடுத்த மாதம் முதலாந் திகதி தொடக்கம் , இது 4வீதத்தால் அதிகரித்து , 28 வீதமாகுமென்று, டெய்லி மிரர் பத்திரிகை தனது இன்றைய பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்ற மாதம் மத்திய வங்கி , கடன் தொகைகளுக்கான வட்டித் வீதத்திற்கு இடப்பட்டிருந்த எல்லை வரம்பை நீக்கி இருந்தது . சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, வங்கிகளால் இனி வட்டி விகிதத்தை கூட்டவோ குறைக்கவோ முடியும் .
இந்த மாற்றம் பற்றி , ஏற்கனவே பல வாடிக்கையாளர்க்ளுக்கு வங்கி அறிவித்துள்ளமை இங்கே 
குறிப்பிடத் தக்கது ,

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக