கொடூரமான தந்தையின் தாக்குதலில் சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

திங்கள், 16 ஏப்ரல், 2018


மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது பாட­சாலை மாண­வன், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப்
 பொலி­ஸார்
 தெரி­வித்­த­னர்.கோ.இசைப்­பி­ரி­யன் என்ற 12 வய­துச் சிறு­வ­னவே வைத்­தி­ய­சா­லை­யில் இவ்­வாறு சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.இது தொடர்­பில் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­தா­வது; சிறு­வன் கடந்த சில 
நாள்­க­ளாக வீட்­டிற்கு வரா­மல் உற­வி­னர் வீட்­டில் தங்கி இருந்­த­தா­க­வும் நேற்­றுக் காலை வீட்­டிற்கு வந்த சிறு­வனை அவ­ரது தந்தை தாக்­கி­யுள்­ளார். தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த சிறு­வனை தாய் உட­ன­டி­யாக மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று
 சேர்ப்­பித்­துள்­ளார்.
அங்­கி­ருந்து உட­ன­டி­யாக நோயா­ளர் காவு வண்டி மூலம் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சிறு­வன் நேற்று மாலை சேர்க்­கப்­பட்­டதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.சிறு­வ­னின்
 இரு கால்­க­ளும் முறிந்த நிலை­யில், கை,
 முகம், முதுகு, பகு­தி­க­ளில் பலத்த காயங்­கள் காணப்­ப­டு­வ­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. சிறு­வ­னின் தந்தை தனது மக­ளுக்கு அடித்த குற்­றச்­சாட்­டில் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­வர் என்­றும் பொலி­ஸார் தெரிவித்துள்ளனர் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக