திருத்தம் செய்யப்பட்ட புகையிரத பெட்டிகள் மீண்டும் சேவையில்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

புகையிரத திணைக்களம் தனியார் துறையுடன் இணைந்து போக்குவரத்து தகுதியற்ற நிலையில் இருந்து புகையிரத பெட்டிகளை திருத்தியமைத்து மீண்டும் போக்குவரத்துக்கா இணைத்துக்
 கொண்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக 09 பெட்டிகளை புகையிரத போக்குவரத்தில் இணைத்துக் கொள்ள உள்ளதாக அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ். அபேவிக்ரம கூறினார்.
திருத்தம் செய்யப்பட்ட புகையிரத பெட்டிகளுடன் அடங்கிய புகையிரதம் இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பு கோட்டையில் இருந்து றாகம வரையில் சேவையில் ஈடுபட்டது.
இது தவிர கொழும்பு - கண்டி மற்றும் கண்டி - மாத்தறை ஆகிய புகையிரத சேவைகளின் போதும் இந்த பெட்டிகள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக எஸ். அபேவிக்ரம கூறினார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக