நாட்டில் மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

திங்கள், 23 ஏப்ரல், 2018

வலய மட்டத்தில் ஆசிரியர் குழாமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சேவையில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருடாந்தம் குழந்தை பிரசவம் உள்ளிட்ட வேறு பல காரணங்களுக்காக விடுமுறைகளை பெற்றுக்கொள்ளும் போது , 
அக்காலப்பகுதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
அதேபோல் , எதிர்வரும் காலத்தில் பாடசாலை சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர் சீட்டின் பெறுமதியை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக