வவுனியாவில் மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டி விபத்து ;

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

;அதி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. 
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் உட்பட சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த
 இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காணப்படுவதுடன் இவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
வவுனியா போக்குவரத்து பொலிஸார் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக