கட்டண அறவீட்டு மீட்டர் முச்சக்கர வண்டிகளுக்கு பொருத்துவது கட்டாயம்

புதன், 11 ஏப்ரல், 2018

இம்மாத இறுதியில் இருந்து முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய 
சபை கூறியுள்ளது.
குறித்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முச்சக்கர வண்டி சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 01ம் திகதி முதல்  கட்டண மீட்டர் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு வார காலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக