நாட்டில் மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஞாயிறு, 5 நவம்பர், 2023

இலங்கையில் பலப் பிரதேசங்களில்.05-11-2023. இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் 
என வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது. 
திணைக்களத்தின் அறிவித்தலின்படி மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது. 
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் 
ஏற்படக்கூடிய 
விபத்துக்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக