நாட்டில் உணவு மற்றும் உணவு பொதிகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சனி, 4 நவம்பர், 2023

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து உணவு மற்றும் உணவு பொதிகளுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதன்படி இன்று (04.11) நள்ளிரவு முதல் பல வகையான  உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  ஹர்ஷன ருக்ஷான் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக தேயிலையின் விலை 5 ரூபாவினாலும் பால் தேயிலையின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலை  20 ரூபாவினால் அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 
.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக