யாழில் வறட்சியான காலநிலை காரணமாக பழங்கள் இளநீர்கள் அதிக விலையில்

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

யாழ் மாவட்டத்தில் அதிக வெப்ப நிலையுடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையில் யாழ் குடா நாட்டில் பழ வியாபாரிகள் இளநீர் வியாபாரிகள் விலை உயர்வின் காரணமாக வியாபாரம் இடம் பெறவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்கள்
 குறிப்பாக வெக்கைகாலத்தில் பொதுமக்கள் பழம்வாங்க வருவார்கள் தற்பொழுது பழங்களின் விலையினை கேட்டு விட்டு சென்று விடுகின்றார்கள் ஏனென்றால் அதிக அளவில் விலை அதிகரித்துள்ளது இதன் காரணமாக எமது வியாபாரம் மற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது எனகவலை வெளியிட்டுள்ளனர்
 குறிப்பாக யாழ்ப்பாணகுடா நாட்டில் வெக்கை காலத்தில் பழங்கள் இளநீர் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும் எனினும் தற்போது பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பழங்களின் விலை அதிகரித்துள்ளது இதன் காரணமாக பழம்இளநீர் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக