மன்னார் மாவட்டத்தில் கடும் வரட்சி காரணமாக விவசாயிகள் பாதிப்பு

சனி, 12 ஆகஸ்ட், 2023

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக, மாவட்டத்தில் சிறுபோக செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உட்பட கால்நடை வளர்ப்பாளர்கள், தோட்ட செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக மழை இன்மையால் மன்னார் மாவட்டத்தில் நீர் நிலைகளில் நீரின் அளவு முழுமையாக குறைவடைந்துள்ள அதேநேரம் சிறிய குளங்கள், கால்வாய்களும் முற்றாக 
வரண்டு போயுள்ளன.
கடந்த மாதம் மன்னார் மாந்தை பகுதியில் சிறுபோக பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளின் நெற்செய்கையும் கருகியுள்ளதுடன் கத்தரி, கச்சான் போன்ற தோட்ட செய்கைகளும் முற்றாக பாதிப்படைந்துள்ளன.
கால்நடைகளும், விலங்குகளும் குடிநீர் இன்றி 
இறக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், சில பகுதிகளில் கிணற்று நீரும் வற்றி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றன.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக