நீங்கள் பயன்படுத்தும் கழிப்பறைக் காகிதத்தால் ஏற்படும் ஆபத்து: எச்சரிக்கை

வெள்ளி, 24 மார்ச், 2023

 

ஐரோப்பிய மக்கள் உட்பட வெளிநாட்டவர் அதிகமான பயன்படுத்தும்  கழிப்பறைக் காகிதத்தால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கழிவு நீரிலும் மண்ணிலும் இந்த செயற்கை இரசாயனப் பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளன
இவ்வாறு நிலைத்திருக்க கூடிய இரசாயனப் பதார்த்தங்களைச் (Forever chemicals or PFAS) சுற்றுச் சூழலில் சேர்க்கின்ற மற்றொரு மனிதபாவனைப் பொருளை அறிவியலாளர்கள் அண்மையில் அடையாளம் 
கண்டுள்ளனர்.
அதுதான் கழிப்பறைக் காகிதம் (toilet paper) சுற்றுச் சூழல் அறிவியலாளர்கள் கழிவு நீர்ச் சுத்திகரிப்பு மையங்களில் பெறப்பட்ட நீரின் மாதிரிகளைச் சோதனை செய்துபார்த்ததில் அந்த நீரில் PFAS இரசாயனங்களின் செறிவைக் கழிப்பறைக் காகிதங்களே ஏற்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சிக்காக ஜெர்மனி, வட அமெரிக்கா, லத்தீன் 
அமெரிக்கா, ஆபிரிக்கா. மேற்கு ஐரோப்பாப் பகுதிகளில் 
விற்பனையாகின்ற கழிப்பறைக் காகிதங்கள் பெறப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட நீரின் மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மீள் சுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய கழிப்பறைக் காகிதங்கள் மரக்கூழை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
அவ்வாறு மரத்தை மரக் கூழாக மாற்றும் தொழில்நுட்ப முறைமையில் (converting wood into pulp) இந்த நிலைத்திருக்கக் கூடிய இரசாயனப் பொருள்கள் (PFAS) அதிகம் சேர்க்கப்படுகின்றன. அவை இறுதியில் கழிப்பறைக் காகிதத்துடன் தண்ணீரில் கலந்து நிலத்தையும் சூழலையும் 
சென்றடைகின்றது.
மனித குலத்துக்கு ஆபத்தான இந்தத் தகவலைச் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கடிதங்களுக்கான இதழ் (Environmental Science and Technology Letters journal) என்னும் சஞ்சிகை கடந்த புதன்க்கிழமை 
வெளியிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக