மன்னார் தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்

வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழர் தாயகத்தில் அதிசயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய மன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
20 வருடங்களுக்கு 300 மெகாவோட் கணக்கில் மின்சாரம் உற்பத்தி செய்ய கூடிய இயற்கை எரிவாயு வைப்பகம் ஒன்று மன்னாரில் 
கிடைத்துள்ளது.
இந்த வைப்பகம் 350 கன அடியை கொண்டுள்ளதாகவும், அதனை அபிவிருத்தி செய்வதற்காக திறந்த விலை மனு கோரல் ஒன்று எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு வைப்பங்களை ஆய்வு செய்யும் ஸ்லம்புஜா என்ற சர்வதேச நிறுவனத்தினால் மன்னார் கடல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் ZM 2Z என பெயரிடப்பட்ட பகுதியில் இந்த இயற்கை எரிவாயு வைப்பகம் உள்ளது.
மன்னார் கடல் பகுதியில் 1500 மீற்றர் ஆழ் கடலில் இருந்து மேலும் 2000 மீற்றர் தூர ஆழத்தில் இந்த வைப்பகம் 
அமைந்துள்ளது.
இந்த வைப்பகத்தை பெற்றுக் கொள்வதற்காக 750 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய வேண்டும். அதற்காக சர்வதேச சந்தையில் விலை மனு கோரப்படவுள்ளது" என அமைச்சர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக