கம்பளை கஞ்சாவுடன் காட்டிலே கலாட்டா மாணவர்கள் கைது

வியாழன், 25 அக்டோபர், 2018

கம்பளை மாணவர்கள் சிலர் காடு ஒன்றிற்கு சென்று மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்னர்.இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த 4 மாணவர்கள் மேலும் ஒரு 20 வயதான இளைஞனுடன் கம்பளை பிரதேசத்தில் கஞ்சா அருந்தி பாலியல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். அத்துடன் 
அதனை தங்கள் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.பாடசாலைச் சீருடையில் மாணவர்கள் சில காட்டிற்குள் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்வதாக கூறிவிட்டு காடு ஒன்றிற்கு சென்ற மாணவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்னர்.அவர்களின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது அவர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட காட்சி அதில் 
காணப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் இருந்து கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மாணவர்கள் இம்முறை பரீட்சை எழுது உள்ளமையினால் எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக