நாட்டில் மடுத் திருத்தலத்திற்குச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

திங்கள், 15 அக்டோபர், 2018

மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பேரூந்து வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா செட்டிகுளம், பெரியகட்டுப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் இருந்து மடுத் தேவாலயம் நோக்கிச் சென்ற மூன்று பேரூந்துகளில் ஒரு பேரூந்து 
வேகக் கட்டுப்பாட்டை இழந்து செட்டிகுளம், பெரியகட்டு 40 ஆவது மைல்கல் அருகில் உள்ள பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் குறித்த பேரூந்தில் பயணித்த 8 பேர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பேரூந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக