வவுனியாவில் யாழிலிருந்து கடத்தப்பட்ட பெரும் தொகையான கஞ்சா மீட்பு

புதன், 10 அக்டோபர், 2018

வவுனியாவில் இருவேறு நடவடிக்கைகளில் இன்று அதிகாலை 8 கிலோ  கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பேருந்தை ஓமந்தை பகுதியில் வழிமறித்து பொலிஸார் சோதனை செய்த போது, 4 கிலோ 592 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்தனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற பேருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக தரித்து நின்ற போது, பேருந்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட நபரிடம் 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக