கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் திருட்டு

சனி, 27 அக்டோபர், 2018

யாழ் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் பித்தளை பாத்திரங்கள் திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் விஸ்வலிங்கம் கீர்த்தி ராசன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று (26-10-2018) வெள்ளிக்கிழமை மதியம் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர் இல்லாத சமயத்தில் ஜன்னல் கம்பிகளை களற்றி வீட்டினுள் உட்புகுந்து அறைகள் அனைத்திலும் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியதோடு அறையில் இருந்த பெறுமதிமிக்க பித்தளை பாத்திரங்களை திருடிச்சென்றுள்ளார்கள்.
குறித்த புதிய செம்மணி வீதியில் கடந்த இரண்டு மாதங்களில் பக்கத்து பக்கத்து வீடுகளில் தொடர்ச்சியாக மர்ம முறையில் பல திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளது. அனைத்து திருட்டு சம்பவங்களும் ஒரே தரப்பினரால் மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் 
சந்தேகிக்கின்றனர்.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக