முச்சக்கரவண்டியில் மீற்றர் கருவி இல்லை என்றால் இனி நீதிமன்றம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

இலங்கையில் இனிமேல் முச்சக்கரவண்டியில் மீற்றர் கருவி பொருத்தாத சாரதிகளை நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னராக மீற்றர் கருவிகளின் தரம் குறித்த அறிக்கை பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளில் பொறுத்தப்பட்டுள்ள மீற்றர் அளவீட்டுக் கருவிகள் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
அதன் பின்னர், குறித்த அறிக்கை விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அந்த அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் 
கூறியுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக