சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் கைது

ஞாயிறு, 7 அக்டோபர், 2018


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் இருவர சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட சீன பிரஜைகள்  இருவரே கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
32 வயதான மற்றும் 36 வயதான  சீனப் பிரஜைகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
குறித்த நபர்கள் இன்று காலை சீனாவிலிருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது சந்தேக நபர்களின் பயண பையில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது 44,000 சிகரெட்டுகள் உள்ளடங்கிய  220 சிகரெட் பக்கற்றுகளை கைப்பற்றியுள்ளனர்.  சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் 
கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து  மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் எச்சரிக்கப்பட்டு விடுதலை
 செய்யப்பட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக